மருதமலையின் வேறு பெயர்கள் மருதமலைவரை, மருதவரை, மருதவெர்பு, மருதகுன்று, மருதவோஸ்கல், காமர் பிரங்கு, மருதாசலம், வேல்வரை என்று பேரூர் புராணம் கூறுகிறது.
இங்கே பதினெட்டு சித்தர்களில் ஒருவராகப்போற்றி வணங்கப்படும் பாம்பாட்டி சித்தரின்குகை உள்ளது. இங்கே தான் பாம்பாட்டி சித்தர்மருகபெருமானை நினைத்து தியானித்து முக்திஅடைந்தார்.
அந்தக் குகையில் உள்ள ஒரு பெரிய பாறையில்சுயம்புவாக 5 தலை நாகம் உருவத்தில் தோன்றிஇருப்பதை இன்றும் காணலாம். அங்கு ஐயரிடம்கேட்டபோது, இது குண்டலி யோகத்தைப் பற்றிகுறிப்பதாக நம்பப்படுகிறது என்றார். இந்தக்குகைக்கு தினமும் ஒரு நாகம் வந்து அங்குவைக்கப்பட்டிருக்கும் பால், பழத்தைஅருந்திவிட்டு செல்வதாகவும் சொல்கிறார். ஒருலிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.இங்கிருந்து முருகன் கருவறைக்கு ரகசியசுரங்கபாதை இருக்கிறது. இதன் வழியாகபாம்பாட்டி சித்தர் தினமும் பாம்பு உருவில்சென்று முருகனை வழிபடுவதாகவும்நம்பப்படுகிறது.
சில நேரங்களில் அந்த இருப்பிடத்தில் பாம்புஒன்று வந்து சுற்றிவிட்டுப் போகிறதாம். சிலர்கண்களுக்கு மட்டும் தென்படுகிறதாம்.யாரையும் அது துன்புறுத்துவதில்லை.மருதமலை முருகன் கோயிலில் இருந்து சற்றுநடந்துபோய் பின்புறம் சில படிகள் இறங்கிப்போனால் இந்தச் சித்தர் இருப்பிடம் வருகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment