நெல்லை சீமையில் வழக்கத்தில் இருக்கும் ஒரு பழமொழி .
"மந்திரம் பொய்யானால் பாம்பை பாரு.*
*மருந்து தான் பொய்யானால் வாணம் பாரு"
*சாஸ்திரம் பொய்யானால்.கிரகணம் பாரு*
*சாமிதான் பொய்யானால் சாணம் பாரு"
இதுதான் நமது சந்தேகங்களைதெளிவிக்கும் சூத்திரம்!!.
இதற்கான விளக்கம்:
மந்திரம் பொய்யானால்பாம்பை பாரு!
"மந்திரங்களில் சக்தியில்லை என்றுயாருக்காவது சந்தேகம் இருந்தால்".......,
படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மந்திரத்தைஉச்சரித்து பார்த்து சந்தேகத்தைதெளிவுபடுத்திக் கொள்ளலாம்.!! பயப்படவேண்டாம். மந்திரம் சொல்ல தெரிந்தவரைசொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று இதைப்பார்க்கலாம்.
மருந்து தான் பொய்யானால்.வாணம்பாரு!
வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும்மருந்து அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச்சென்று வண்ண கோலங்கள்காண்பிக்கிறது. சாதாரண மருந்து என நாம்நினைத்தால் அதன் சக்தியை தெரிந்துகொள்ள வாணவேடிக்கையை பாருங்கள்என்பது தான் இதன் பொருள்.
சாஸ்திரம் தான் பொய்யானால் கிரகணம் பாரு!
ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கைஇல்லாதவர்கள் கூட பஞ்சாங்கத்தில்முன்கூட்டியே பௌர்ணமி, அமாவாசை,கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்துவியப்பு அடைகிறார்கள். எனவே ஜோதிடம்பொய் கிடையாது. அது அறிவியல் என்பதைகிரகணம் குறித்து பஞ்சாங்கம்சொல்லியுள்ளதை பார்த்துதெரிந்துகொள்ளலாம் என்பது அதன்பொருள்.
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு1
இது ரொம்ப சுவாரசியமானவிஷயம். கிராமங்களில் பசு சாணத்தைஎடுத்து அதை விநாயகர் என்று உருவம்பிடித்து வணங்குவார்கள். இப்படி விநாயகர்உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டு விடுவார்கள். அதில் தான்ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்தசாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்குபிறகும் கிடக்கும் சாணத்திலும் கரையான்குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்றுநாம் உருவேற்றி விட்ட அந்த சாணத்தில்கரையான் சேட்டை செய்யாது. இதில்இருந்து கடவுள் இருப்பதை பாமரனும்சாணத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது தான் இந்த பழமொழியின் கருத்து...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment