Tuesday, 14 May 2019

ஸ்ரீ சாயிநாதனுக்குப் பிடித்தமான அன்னதான விதிமுறைகள் என்ன?

அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலைக்காக்கும் என்றும், சந்ததிகளை வளமாக வாழவைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பகவான் கிருஷ்ணருக்கு அவல் கொடுத்த காரணத்தாலே, பொன்னாலான நகரத்தையே உருவாக்கிக் கொடுத்தார். அதனால் அன்னதானம் உலகிலுள்ள மற்ற தானங்களை விட மிகச் சிறந்தது. சகல செளபாக்கியங்களையும் தரவல்லது. பாவங்களைப் போக்கவல்லது.


அன்னதானம் செய்வதற்கும் சிலவழிமுறைகள் இருக்கின்றன.

முதலில் உணவை தெய்வத்தின்பாதங்களில் படைத்து, அதன்பிறகேமற்றவர்களுக்குப் பரிமாறவேண்டும். அனைவருக்கும்உணவளித்தபிறகே தானம்அளிப்பவர் உண்ண வேண்டும்.
பகவான் பாபாவுக்கு முதல் உணவாகநைவேத்தியம் படைப்பதுஅதிமுக்கியம். ஏனென்றால் பாபாபசியாறினால், உலகிலுள்ளஎத்தனையோ உயிர்களின் பசி தீரும்.அவர் இரவும் பகலும் நம்முடன்இணைந்தே இருக்கிறார். அதனால்அவர் பசியைப் போக்கவேண்டியதுமுதல் கடமை. இதனால் நாம்படைக்கும் உணவில் இருக்கும்குற்றம், குறை நீங்குவதுடன்தேவைக்கேற்ப பெருகும் தன்மையும்ஏற்படும் என்பதை பாபாவின்பக்தர்கள் நன்கு அறிவார்கள்.
அதனால் முதலில் பாபாவுக்குப்படைத்து, அதன்பிறகு அவரதுகுழந்தைகளுக்குப் படைக்கவேண்டும். பாபாவுக்குப் படைத்தஉணவு அமிர்தம் போன்று மாறி,உண்பவருக்கு ஆரோக்கியமும்ஆனந்தமும் தருவதை கண்கூடாககாண இயலும். அதனால் ஒருபோதும்நாம் தனித்து உண்பதில்லை என்றுஉறுதி எடுத்துக்கொள்ள வேண்டு.நம்மிடம் இருப்பதை முடிந்த வரைபாபாவின் குழந்தைகளுடன்பகிர்ந்துகொள்வோம்.
வஸ்திரங்களையோ,பாத்திரங்களையோ தானமாகஅளிக்கும்போது, அதனை தானமாகப் பெறுபவருக்கு, அதாவதுஅதனை  வாங்குபவர் தகுதியுள்ளநபர்தானா என்று பரிசீலிக்கவேண்டிய அவசியம் உண்டு. ஆனால் அன்னதானம் செய்வதற்குமட்டும் இந்த சிந்தனைதேவையில்லை. ஆம், பணக்காரர்,ஏழை என்று அனைவருக்கும் பசிஉண்டு. அதனால் இந்த உலகிலுள்ளஅனைவருக்கும் அன்னமளிக்கலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment