சுவாமி விவேகானந்தர் சிறிய வயதில் மனதில் ஏராளமான கேள்விகளுடன் அலைந்தவர். அத்தனை கேள்விகளுக்கும் பதிலாக சுவாமி ராமகிருஷ்ணர் அமைந்தார். அதனாலே தன்னிடம் கேள்வி கேட்கும் அத்தனை பேருக்கும் மிகவும் எளிமையாக ஆன்மிக பதில் சொல்வார் விவேகானந்தர். இதோ அவரது பதில்களைப் பாருங்கள்.
விதி என்றால் என்ன? அதனைஎப்படி வெல்வது? விதி எங்கேஇருக்கிறது? எதை விதைத்தோமோஅதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே அதன்பொருட்டுத் தூற்றுவதற்கும்ஒருவருமில்லை,போற்றுவதற்கும்ஒருவருமில்லை. காற்று வீசியபடிஇருக்கிறது.
பாய்மரங்களை விரித்துக் காற்றைத்தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கப்பல்கள், தங்கள் வழியேமுன்னேறிச் செல்கின்றன. ஆனால்பாய்களைச் சுருட்டி வைத்துள்ளகப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன்பெறுவதில்லை.
இது காற்றினுடைய குற்றமாகுமா? அதனால் நீ வகுத்துக்கொண்டவிதியின் வழியில் நீ செல்வதால், அதைவெல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.
வெற்றி பெறும் தகுதிஎல்லோருக்கும் உண்டா? வெற்றிக்குஆசைப்படுபவர்கள் தேவையில்லாதவிஷயங்களைப் பற்றி அலட்டிக்கொள்வதில் சக்தியை சிதறவிடக்கூடாது. அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமானபணிகளில் ஈடுபட வேண்டும்.
யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதிஉடையவராக இருக்கிறாரோ, அதைஅவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்குஇந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்தசக்தியாலும் முடியாது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment