Monday, 13 May 2019

விநாயகருக்கு தேங்காய் உடைப்பது இதற்காக?

விநாயகர் மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்னச்சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.


பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதுஎதற்காக?  விக்கினேஸ்வரர், தம் அப்பாவானஈஸ்வரனை பார்த்து, உன் சிரசையே எனக்குபலி கொடு என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்ததுஎதுவோ அதைத் தியாகம்பண்ணினால்தான் மகா கணபதிக்குப் பிரீதிஏற்படுகிறது.  அவ்வளவு பெரிய தியாகம்பண்ணுவதற்குத் தயார் என்றஅறிகுறியாகத்தான் ஈஸ்வரனை போலவேமூன்று கண்கள் உடைய தேங்காயைச்சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம்அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன்அநுக்கிரகித்திருக்கிறான்.

விநாயகர் பிரணவ ஸ்வரூபி. நமக்குபார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துகள்சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன. இவற்றையெல்லாம் பார்க்க பார்க்கஆனந்தம் பொங்கும்.  அதனால்தான்குழந்தைச் சுவாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம் பார்க்க பார்க்கஆனந்தம் எப்போதும் பொங்கிக்கொண்டிருக்கும்படியாக யானைஉருவத்தோடு இருக்கின்றார். அது ஆனந்த தத்துவம்.
எந்த சுவாமியை உபாசிப்பதானாலும்முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப்பெற்றுக் கொண்டால் தான் அந்தக் காரியம்விக்கினம் இல்லாமல் நடைபெறும்.  தோர்பிகர்ணம் என்பதே தோப்புக் கரணம் என்றுமாறியது.  தோர்பி என்றால் கைகளினால்என்று அர்த்தம்.  கர்ணம் என்றால் காது.தோர்பி கர்ணம் என்றால் கைகளால் காதைப்பிடித்துக் கொள்வது. இத்தகைய பெருமை கொண்ட விநாயகரை அனுதினமும் துதிப்போமாக...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment