ஷீரடி சாயிபாபாவினுடைய பிரார்த்தனைகளில் அன்னதானமே முக்கியமானது. இதனை விளக்கும் ஒரு சம்பவம், சாய்சத் சரிதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பாபாவின் பக்தரான சந்தோர்கர்,தினந்தோறும் அதிதிகளுக்குஉணவளிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார். ஒருநாள்பாபாவிடம் ‘‘நான் தினந்தோறும்காக்கைகளுக்கு உணவுவைத்துவிட்டு அதிதிகளுக்காககாத்திருப்பேன். ஆனால்.அவ்வப்போது காக்கைகள் வருவதேஇல்லை. ஏன் பாபா இவ்வாறுநடக்கிறது’’ என்று சந்தோர்கர்வெகுளித்தனமாகக் கேட்டார்.
’’நீ ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்?’’என்று அவரிடம் திரும்பிக் கேட்டார்பாபா.
’’நமது சாஸ்திரங்களும், வேதங்களும்இப்படித்தானே பாபா சொல்லிஇருக்கிறது, அதைத்தான் நான்கடைபிடிக்கிறேன்” என்றார்சந்தோர்கர்.
’’நானா, சாஸ்திரங்களில் தப்பில்லை,வேதங்களிலும் குறையில்லை.ஆனால். அவற்றின் உண்மைப் பொருளை சரியாக நீபுரிந்துகொள்ளாமல் இருக்கிறாய்.அதனால்தான் அதிதிகளுக்காகதினமும் காத்திருப்பதாகவிசனப்பட்டுக் கொள்கிறாய்.
அதிதி என்பவன் யார்?
மனித உருவத்தில் மட்டுமல்லாமல்பறவைகள், விலங்குகள், பூச்சிகள்உருவத்தில் இருப்பவைகூடஅதிதிகள்தான். நீஉணவளிக்கும்போது அதனைஉண்பதற்காக பசியுடன் யார்அல்லது எது வந்தாலும் அதுஅதிதிதான். நிறைய காக்கைகள்வரும்போது நிறைய அன்னத்தைஅவற்றிற்கு வழங்கு. உயிருள்ள எந்தஜீவன் வேண்டுமானாலும்சாப்பிடட்டும் என்று நினை. அப்படிச்செய்தால் அதிதிகளுக்குஉணவளித்த புண்ணியம் உனக்குக்கிடைக்கும்’’ என்று பாபாவிளக்கமளித்தார். மனித ரூபஅதிதிகளுக்காகக் காத்திருக்காமல்,பசியோடு, உணவுதேடி வரும் எந்தஜீவனுக்கும் அளிப்பதேஅன்னதானம் என்பதைப்புரிந்துகொண்டார் சந்தோர்கர்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment