இறைவனை தரிசிக்கவும், நமது கோரிக்கைகளை தெரிவிக்கவும் ஒவ்வொரு மதத்திலும் நிறையவே வழிமுறைகள் உண்டு. ஆனால் பாபாவை தரிசிக்கவும், ஏற்றுக்கொள்ளவும், அன்பைப் பெறவும் மந்திரங்களோ, வேதவிற்பன்னர்களோ தேவையில்லை. நேருக்கு நேர் பாபாவை தரிசிக்கவும், அவர் மேனியைத் தொட்டு நம் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் முடியும். ஆம், இதனை தனது சத்சங்கத்தில் பாபாவே சொல்லியிருக்கிறார்.
‘’எவரிடமிருந்தும் மந்திரத்தையோ,உபதேசத்தையோ பெறமுயற்சிக்காதீர்கள். உங்களுடையஎண்ணங்களுக்கும்செயல்களுக்குமான ஒரே பொருளாகஎன்னை மனப்பூர்வமாகஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள்பரமார்த்த நிலை என்ற ஆன்மிகஇலக்கை அடைவீர்கள் என்பதில்எந்த சந்தேகமும் இல்லை. முழுமனதுடன் என்னைப் பாருங்கள்.பதிலுக்கு நான் உங்களைப்பார்க்கிறேன்.
இந்த மசூதியில் உட்கார்ந்தபடி நான்உண்மையைப் பேசுகிறேன்.உண்மையைத் தவிர வேறு எதையும்நான் கூறுவதில்லை. சடங்கு,சம்பிரதாயங்களோ, ஆறுசாஸ்திரங்களில் தேர்ச்சியோதேவையில்லை. உங்கள் குருவிடம்பற்றும் உறுதியான நம்பிக்கையும்வையுங்கள். குருவேசெயல்படுகிறவர் அல்லதுசெய்யவைக்கிறவர் என்பதைநம்புங்கள். குருவின் மேன்மையைஅறிந்து, அவரையே ஹரிஹரபிரம்மா என்ற மும்மூர்த்திகளின்அவதாரமாக கருதுபவரேஆசிர்வதிக்கப்பட்டவர்’’ என்கிறார்பாபா...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment