Thursday, 16 April 2020
வரும் அட்சய திருதியை நாளில் தங்கத்தை வாங்க தேவையில்லை இதை வாங்கினாலே செல்வம் குவியும்..!!
தர்பணம்’ என்பது எதைக் குறிக்கிறது? ‘திவசம்’ என்பது எதைக் குறிக்கிறது?
காகத்தைப் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது? இந்த 1 பொருளை தினம்தோறும் காகத்திற்கு உணவாக வைத்தால், பல காலமாக தீராத இருந்து வரும் கஷ்டங்கள் கூட தீரும்.!!
இடது கையால் தானம் செய்துவிட்டால் என்ன நடக்கும்? ஏன் வலது கையால் தானம் செய்ய வேண்டும்?
2 கைகளிலும் உப்பை வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லிப் பாருங்கள்! 21வது நாள் அதிசயம் நடக்கும்.!!
அடம் பிடிக்கும் சுட்டி குழந்தை சமத்தாக சாப்பிட வேண்டுமா? இதோ சூப்பரான 3 ஆன்மீக டிப்ஸ்.!!
Wednesday, 15 April 2020
இன்று தேய்பிறை அஷ்டமி! தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் அஷ்டமி வழிபாட்டை, வீட்டிலிருந்தே எப்படி நிறைவு செய்வது.!!
சித்தர்களை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களில் யாருக்காவது உள்ளதா! எளிமையான இந்த பயிற்சி போதும்.!!
பித்ரு தோஷத்திற்கும் நிரந்தரத் தீர்வைத் தரும் ‘நவகலசயாகம்.!!
Tuesday, 14 April 2020
நீங்கள் உடுத்திய துணியை தானமாக மற்றவர்களுக்கு கொடுத்தால் இது தான் நடக்கும் தெரியுமா?
Monday, 13 April 2020
உங்களின் கால் பாதங்கள் இப்படி இருந்தால், கட்டாயம் லட்சுமிதேவி உங்கள் வீட்டில் தங்கவே மாட்டாள்.!!
நம்மில் பலபேர் நம்முடைய பாதங்களை ஒரு பொருட்டாகவே நினைப்பது கிடையாது. சொல்லப்போனால் லட்சுமி தேவி வாசம் செய்யும் இடமே நம்முடைய கால் பாதங்களில் தான் என்பது பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. தேவையற்ற பொருட்களை கைகளால் எடுக்காமல், கால்களால் எட்டி உதைப்பது, தள்ளி விடுவது, போன்ற பழக்கம் உங்களிடம் இருந்தால் இன்றோடு அதை நிறுத்தி விடுங்கள். அது உங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தேடித் தரக் கூடிய ஒரு பழக்கம்.
நம்முடைய முன்னோர்கள் கால்களைக் கழுவும் போது சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும். பின்னங்கால்களில் தண்ணீர் படாமல் இருக்கக் கூடாது. குதிகால்களில் அழுக்கு சேர்ந்து இருக்கக்கூடாது. என்பதை நமக்கு சொல்லித் தந்துள்ளார்கள். சரியாக பின்னங் கால்களை கழுவாமல் விட்டால், சனிபகவானால் பிரச்சனைகள் வரக்கூடும் என்ற ஒரு கருத்தும் உண்டு. இப்படியெல்லாம் சொல்லி நம்மை எதற்காக பயமுறுத்தி இருக்கிறார்கள், என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? குதிகால்களில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். அந்த இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
புதியதாக திருமணமாகி வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும் பெண், முதலில் வலது காலை எடுத்து வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அதன்பின்பு ஒரு ‘படி நெல்லை’ வைத்து அந்த நெல்லினை, வீட்டிற்குள் வரக்கூடிய புதுப்பெண் வலது காலால் எட்டி உதைத்து விட்டு வர வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயமும் உண்டு. இது எதற்காக?
நம்முடைய வலது கால் பாதத்தில் லகட்சுமி தேவியும், நாராயணரும் வாசம் செய்வதாக ஐதீகம். இடதுகாலில் லட்சுமி தேவியும் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். இதனால்தான் லக்ஷ்மி வாசம் செய்யும் வலது காலை முதலில் உள்ளே எடுத்து வைக்க வேண்டும் என்றும், மகாலட்சுமி வாசம் கொண்டிருக்கும் பாதத்தை, வீட்டின் தன தானியத்தை சேர்க்கும் படி, நெல்லின் மீது படவேண்டும் என்பதற்காக தான் இந்த ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உங்களது கால் பாதங்களை அதிர்ந்து கீழே வைக்கும்போது மூதேவியின் அம்சம் வெளிப்படும். அதே பாதங்களை மெதுவான முறையில் தரையில் வைத்து நடக்கும் போது மகாலக்ஷ்மியின் அம்சம் வெளிப்படும் என்பதுதான் உண்மை.
இதேபோல் நம்முடைய கால், தெரியாமல் யார் மீது பட்டுவிட்டால் கூட அவர்களை தொட்டு நம் கண்களில் கும்பிட்டுக் கொள்வோம். இது எதற்காக தெரியுமா? அப்படி அவர்களை தொட்டு கும்பிடாமல் விட்டு விட்டோமேயுனால், நம் பாதங்களில் வசிக்கும் மகாலட்சுமி, நம் கால் யார்மீது பட்டதோ அவர்களிடத்தில் சென்றுவிடுவார்கள். ‘உங்களது கால் பாதங்களில் வசிக்கும் மகாலட்சுமியை நீங்கள் அலட்சியப்படுத்துவதுதன் பொருள் இதில் அமைந்துள்ளது’.
கோமாதாவாக வழிபடும் பசுவின் பாதங்களில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. இதனால்தான் புதியதாக வீடு கட்டிய பின்பு, முதலில் பசுவை வீட்டிற்குள் வரவைக்கிறார்கள்.
பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்றாலும், நம்முடைய தலையை கொண்டுபோய் பாதத்தில் தான் வைக்கின்றோம். பாதத்திற்கு அத்தனை மரியாதை உண்டு என்பதை நாம் இன்றுவரை சிந்தித்ததே இல்லை. சில ரிஷிகளின் பாதங்களை, சாதாரண மனிதர்கள் தொடுவதற்கு அனுமதி செய்ய மாட்டார்கள். காரணம் அவர்களது பாதங்களில் இருக்கும் அதீத சக்தியானது அடுத்தவர்களுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.
குறிப்பாக குதிகாலில் யோகலட்சுமி வாசம் செய்வதாகவும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவரை உங்களது கால் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால்தான் திருஷ்டி சுத்தி போட்டதை தாண்ட கூடாது. எந்த ஒரு பொருட்கள் நடுவில் இருக்கும் போதும், அதை தாண்டி செல்ல கூடாது. கெட்டதை மிதிக்கக் கூடாது. என்று சொல்லுவார்கள். ஏனென்றால் காலில் இருக்கும் லக்ஷ்மி தேவியானவள் நம்மை விட்டு விலகி சென்று விடுவாள் என்பதற்காகத்தான்.
முடிந்த வரை உங்களது பாதங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதை வேகமாக தரையில் வைத்து நடப்பது, கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பது, ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டு தேய்த்துக் கொண்டே இருப்பது, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. இந்த செயல்களில் எல்லாம் ஈடுபட்டால் கட்டாயமாக உங்களது பாதங்களில் லட்சுமி தேவி வாசம் செய்ய மாட்டாள். தரித்திரம் உண்டாகும் என்பது தான் உண்மை...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
எந்த பிரச்சனைக்கு, என்ன பரிகாரம் செய்யலாம்? உங்களின் எல்லா வகையான கஷ்டத்திற்கும் தீர்வு இந்த ஒரே பதிவில்.!!
மனிதனாக பிறந்து விட்டால் கஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால் அதற்கான பரிகாரத்தை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். அப்படியிருக்க உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கிறது? அதற்கான சுலபமான, இறைவனிடத்தில் செய்யக் கூடிய பரிகாரங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கொடுத்த கடன் விரைவாக வசூலாக வேண்டும் என்றால், தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகளில் பைரவர் சந்நிதியில், 2 நெய்தீபம் ஏற்றி சஹஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் தீர, வழக்கு உங்களுக்கு சாதகமாக முடிய, பில்லி, சூனியம் ஏவல், போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, தொடர்ந்து 48 நாட்கள் சக்கரத்தாழ்வார் சன்னதியில் 2 நெய் தீபம் ஏற்றி வைத்து, 12 முறை வலம் வந்து வழிபட வேண்டும். சக்கரத்தாழ்வார் சன்னதியில் தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமைகள் 2 நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கொடுத்த கடன் விரைவில் வசூலாகும்.
உங்களது வீட்டில் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகளின் மூலம் பாதிப்புக்கள் இருப்பது தெரியவந்தால், வெள்ளெருக்கு விநாயகரை கைக்கு எட்டாத இடத்தில் மறைவாக வைத்து விடுங்கள்.
கண்திருஷ்டி உங்களை விட்டு விலக வேண்டும் என்றால், அம்மன் கோவில்களில் இருக்கும் சூலத்தில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து மூன்று எலுமிச்சை பழங்களை சூலத்தில் குத்தி வழிபட்டு வர விரைவில் கண் திருஷ்டி நீங்கும்.
தினம்தோறும் நரசிம்மர் சன்னிதிக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வர திருமணத்தடை நீங்கும். ஜாதகத்தில் திருமணத்தடை காண தோஷங்கள் இருந்தாலும் விரைவாக நல்ல வரன் அமையும்.
தீர்க்கவே முடியாத எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அது ஸ்ரீயோக நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டால் தீர்ந்துவிடும். நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.
கணவன் மனைவி இருவருக்கும் இருக்கும் பிரச்சனைகள் தீர வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சன்னிதிக்கு சென்று நல்லெண்ணெய் தீபத்தில் இரண்டு கற்கண்டு போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
சிவன் கோவில்களில் இருக்கும் வன்னி மரத்தையும், வில்வமரத்தின் ஐயும் 27 முறை வலம் வருவது நல்ல பலனை தரும். வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். இந்த இரண்டு மரங்களுக்கும் நம் கஷ்டங்களை கேட்கும் சக்தி உள்ளதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பிரதோஷ தினத்தன்று ஈசானிய மூலையில் ஈசனுக்கு காட்டப்படும் தீபாராதனையை கண்ணார கண்டு, தரிசனம் செய்தால் தீர்க்க முடியாத நோய்களும் தீரும். வறுமை நீங்கி ஐஸ்வர்யம் பிறக்கும்.
ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது சிறப்பு. அதிலும் குறிப்பாக கடைசி அரைமணி நேர அமிர்தகடிகை நேரத்தில், நெய் விளக்கு தீபம் ஏற்றுவது இன்னும் சிறப்பானது.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியிலிருந்து 12 மணிக்குள் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தாமரை தண்டு திரி போட்டு, நெய் தீபமேற்றி வழிபட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும், இருந்தாலும் அது விலகிவிடும். முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், நீங்கள் செய்த பாவத்திற்கான விமோர்சனம், இப்படி உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் சாபத்தை நீங்க இது ஒரு நல்ல பரிகாரம்.
ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கை அம்மனுக்கு சிகப்பு பட்டுத்துணியை சாத்த வேண்டும். சிகப்பு தாமரை மலரை அணிவிக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழங்களை கொண்ட மாலையை தயார் செய்து, குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை திருமணமாகாத பெண்கள் தொடர்ந்து நெற்றியில் வைத்து வந்தால் நல்ல கணவர் அமைவார் என்பது ஐதீகம்.
சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தில் சந்தனகாப்பு செய்து வழிபட கடன் தொல்லை நீங்கும்.
வேலையில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் 2 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் விரைவில் உங்கள் கையில் வேலை கிடைத்துவிடும்.
வண்டியை எடுத்தாலே விபத்து நடக்கும் சிலருக்கு! இப்படிப்பட்டவர்கள் அவிட்ட நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு வேலில் எலுமிச்சை பழத்தை சொருகி அர்ச்சனை செய்து வாருங்கள்.
ருத்ராட்சம், துளசிச் செடி, வில்வமரம், சாளகிராமம், சங்கு, வலம்புரி சங்கு இவைகள் உள்ள இடத்தில் கெட்ட சக்திகள் அண்டாது.
குழந்தை வரம் வேண்டி இருப்பவர்கள் 6 தேய்பிறை அஷ்டமி தினத்தில் காலபைரவருக்கு சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து வர உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.
குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை நினைத்து மனதார விரதமிருந்து, தொடர்ந்து நெய்தீபம் ஏற்றிவர 192 நாட்களில், கருத்தரிக்கலாம் என்ற ஐதீகம் நம் சாஸ்திரத்தில் உள்ளது.
எப்படிப்பட்ட கிரக தோஷமாக இருந்தாலும் தினம்தோறும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் அந்த தோஷத்திற்கான வீரியம் குறையும். குலதெய்வம் குற்றம் தீர தினம் தோறும் வீட்டில் வாழைத்தண்டு திரி தீபம் ஏற்றவேண்டும்.
வளமான வாழ்க்கையை பெற வேண்டுமென்றால் பவுர்ணமி தோறும் நடைபெறும் சத்தியநாராயண பூஜையில் கலந்து கொள்வது மிகவும் நல்லது.
சர்ப்ப தோஷம் நீங்க பெருமாள் கோவிலில் இருக்கும் கருடாழ்வார் சந்நிதியே மூன்று முறை வலம் வந்து 2 நெய் தீபமேற்றி வழிபடவேண்டும் கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
இந்த பரிகாரங்கள் அனைத்துமே பல பேருக்கு சொல்லப்பட்டு, பலனை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு இறைவனை நினைத்து செய்யப்படும் பரிகாரங்கள் எதுவுமே பொய்யாகாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴