ஒவ்வொரு தீர்த்தத்தில் நீராடுவதற்கும் ஒரு மகிமை இருக்கிறது. இவற்றில்நாழிக்கிணறு (ஸ்கந்த புட்கரணி),வதனாரம்ப தீர்த்தம் இரண்டும்முக்கியமானவை.
நாழிக்கிணறு 24 அடி ஆழமுள்ள இடத்தில் ஒரு அடிஉ சதுரப்பரப்புள்ள தொட்டி போன்ற அமைப்பில் நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இதில் எடுக்க எடுக்கக் குறையாது தண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது தனது படைவீரர்களின் தாகத்தைத் தணிக்க முருகப்பெருமான் தன் வேலை ஊன்றி இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று ஊறப்படுகிறது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராடவேண்டும் என்பது ஐதீகம்
வதனாரம்ப தீர்த்தம் கடலில் பாறைகள்நிறைந்த பகுதியில் உள்ளது. எனவே அங்குநீராடுவது பாதுகாப்பற்றது. கலிங்கதேசத்துமன்னன் மகள் கனக சுந்தரி பிறக்கும் போதேகுதிரை முகத்துடன் பிறந்தாள். அவள்வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி சாபம்நீங்கபெற்று நல்ல முகத்தை பெற்றாள்என்று கூறப்படுகிறது.
முகாரம்ப தீர்த்தம்: இதில் மூழ்குவோர்கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப்பருகுவர்.
தெய்வானை தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில்மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம்,தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளிஎன்கின்ற இன்பத்தைப் பெறுவர்.
வள்ளி தீர்த்தம்: இந்தத் தீர்த்தம்ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய்பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின்திருவடித்தாமரையைத் தியானிக்கும்ஞானத்தைக் கொடுக்கும்.
லட்சுமி தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில்மூழ்குவோர், குபேரனும் அடைவதற்குரியசெல்வங்களைப்பெறுவர்.
சித்தர் தீர்த்தம்: காமம், வெகுளி, மயக்கம்என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத்தடையாகிய உடல், உலக, பைசாசு என்கிறபகைகளை விலக்கி முக்தி வழியை நாடச்செய்யும்.
திக்கு பாலகர் தீர்த்தம்: கங்கை, யமுனை,காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும்பலனைத் தரும்.
காயத்ரீ தீர்த்தம்: அநேக வேள்விகளைச்செய்தவர் அடைகின்ற பலன்களைப்அருளும்.
சாவித்ரி தீர்த்தம்: பிரமாதி தேவர்களாலும்காண்பதற்கு அரிய உமாதேவியின்பொன்னடிகளைப் பூஜித்த பலனைப்கொடுக்கும்.
சரஸ்வதி தீர்த்தம்: சகல ஆகம புராணங்களையும் அறியத் தகுந்த அறிவைக்கொடுக்கும்.
அயிராவத தீர்த்தம்: சந்திர பதாகைமுதலிய நதிகளில் நீராடிய பலனைப்பெறலாம்.
பைரவ தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில்நீராடியோர் பல புண்ணிய நதிகளில்மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.
துர்கை தீர்த்தம்: சகல துன்பங்களும் நீங்கிநன்மைகிட்டும்.
ஞானதீர்த்தம்: இறைவனைப்பரவுவோருக்கும் பரவுவதற்குநினைத்தோர்க்கும் நன்மையைக்கொடுத்தருளும்.
சத்திய தீர்த்தம்: களவு, கள்ளுண்டல், குருநிந்தை, அகங்காரம், காமம்,பகை, சோம்பல்,பாதகம், அதிபாதகம், மகா பாதகம்ஆகியவற்றினின்றும் நீக்கி, சித்தத்தைநன்னெறியில் நிற்கச் செய்யும்.
தரும தீர்த்தம்: தேவாமிர்தமாகிய மங்களகரத்தைக் கொடுத்தருளும்.
முனிவர் தீர்த்தம்: மூழ்குவோர்ஜகத்ரட்சகனைக் கண்ட பலனைப் பெறுவர்.
தேவர் தீர்த்தம்: காமம், குரோதம், லோபம்மோகம் போன்ற ஆறு குற்றங்களை நீக்கி,ஞான அமுதத்தை நல்கும்.
பாவநாச தீர்த்தம்: சாபங்களை விலக்கிஅனைத்துப் புண்ணியார்த்தங்களையும்அளிக்கவல்லது.
கந்தபுட்கரணி தீர்த்தம்: சந்திரசேகரசடாதரனுடைய திருவடியை முடிமிசை சூடும்மேன்மையைப் பெறுவர்.
கங்கா தீர்த்தம்: இத்தீர்த்தம் முக்திக்குஏதுவாய் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும்தெப்பம் போன்றிருக்கும்.
சேது தீர்த்தம்: சகல பாதகத்தினின்றும்நீக்கி நன்மையைக் கொடுத்தருள வல்லது.
கந்தமாதன தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில்மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கிபரிசுத்தத்தைத் தர வல்லது.
மாதுரு தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில்மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்றுஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாகபலனைக் கொடுக்கும்.
தென்புலத்தார் தீர்த்தம்: இதில் ஒரு தரம்மூழ்கி எள்ளும் தண்ணீரும்இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும்சிறந்து விளங்க செந்திலாண்டவன்திருவருட் கரந்து வாழும் பதத்தைத்கொடுத்தருளுவார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡