Saturday, 27 July 2019

திருமூல நாயனார்.!!

சைவ சமய அடியார்களுள் மூத்தவர்கள் திருமூல நாயனாரும்,காரைக்கால் அம்மையாரும் ஆவார்கள். நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடி யேன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் அன்பு பொங்க கூறியிருக்கிறார். பதிணென் சித்தர்களுள் இவரும் ஒருவர்.

கயிலை மலையின் காவலராக விளங்குபவர் நந்திபகவான். வருடைய அருளைப் பெற்று சிவயோகிகள் இருந்தார்கள். அவருள் ஒருவர் சுந்தர நாதர் என்று அழைக்கப்படும் சிவயோகி. அவருக்கு பொதிகை மலையில் இருக்கும் அகத்தியரைச் சந்திக்க வேண்டும் என்னும் ஆவல் இருந்தது.

ஒருநாள் எம்பெருமானின் பாதக்கமலங்களைப் பணிந்து வேண்டி பிறகு பொதிகை மலைக்குபயணப்பட்டார். திருக்கேதாரம், நேபாளம், ஸ்ரீ சைலம் வழியாக திருக்காளகத்தி வந்து திருவாலங்காடும் காஞ்சி சிவத்தலங்களைத் தரிசித்து பிறகு திருவாடு துறை தலத்துக்கு வந்தார்.பார்வதி தேவி யார் பசு வடிவம் கொண்டு தவமியற்றிய புண்ணியத்தலம் இது. இங்கு எம்பெருமான் பசுபதியாக பக்தர் களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந் தார்.
பசுபதியின் காட்சியில் மனம் கட்டுண்டு அங்கேயே சிறிதுகாலம் தங்கியிருக்கமுடிவுசெய்தார்.அங்கு அருகில் இருக்கும்தலங்களுக்கு சென்று தரி சிக்க விரும்பிய சுந்தரநாதர் காவிரி ஆற்றங்கரை வழியாக பயணப்பட்டார். மூலன் என்னும் இடையன் ஒருவன் ஆநிரைகளை மேய்த்துக் கொண் டிருந்தான். ஆநிரைகள் மேல் அன்புகொண்டிருந்த மூலனின் மேல் ஆநிரைகளையும் அளவுக்கதிகமான அன்பை சொரிந்தன. 

பசுக்களை அடிக்காமல் துன்புறுத்தாமல் கதிரவனின் வெப்பம் தாக்காமல் பாதுகாப்பான இடங்களில் மேய்ச்சலுக்கு விடும் மூலனின் மீது பசுக்க ளுக்கு இருந்த அன்பு தூய்மையானதாக இருந்தது. பசுக்கள் மேய்வதும் சிறிது நேரம் மூலன் அருகில் வந்து அவனை நாவால் தடவி கொடுப்பது மாய் இருந்ததைக் கண்ட சுந்தரநாதர் அங்கேயே நின்றார். சிறிது நேரம் கழித்து மூலன் அசைவற்று விழுந்தான்.
அவனிடம் அன்பு காட்ட வந்த பசுக்கள் மூலனின் அசைவற்ற உடம்பைக்கண்டு அழுதன.கண்ணீர் சொரிந்தன. சுற்றி நின்று அவனை தடவி கொடு த்தன. செய்வதறியாது அங்கும் இங்கும் கூட்டமாக ஓடிய பசுக்கள் மூலன் எழும்பாது போனால் தாங்களும் உயிர்துறக்க கூடும் என்ற எண்ணம் சுந்தரநாதருக்கு தோன்றியது. எம்பெருமானின் அருளால் இவைகளை உயிர்த்துறக்க விடமாட்டேன்என்று கூறி மூலனின் அருகில் சென்றார்.

கூடுவிட்டு கூடு பாயும் வித்தையைக் கற்றிருந்த சிவயோகியான சுந்தரநாதர் தம்முடைய உடலைத் துறந்து மூலனின் உடலுக்குள் உட்புகுந்தார். உறக்கத்திலிருந்து எழுவதைப் போல திருமூலனராக எழுந்தார். சுற்றி நின்ற ஆநிரைகளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.சுற்றி சுற்றி வந்து திரு மூலரை நக்கி கொடுத்தன. துள்ளிக்குதித்தன். அவர் அருகில் அமர்ந்து உராய்ந்து சந்தோஷத்தை வெளிப்படுத்தின.மூலன் வடிவில் இருந்த சுந்தர நாதனும் ஆநிரைகளை மகிழ்ச்சியாக தட்டிக்கொடுத்தார்.
அந்தி சாயும் நேரம்வந்தது. ஆநிரைகள் தத்தம் வீடுகளுக்கு செல்ல அவற்றின் பின்னே திருமூலரும் சென்றார். திருமூலர் தன்னுடைய ஞான திரு ஷ்டியால் மூலனின் குடும்பம் பற்றி அறிந்தார். அதனால் அவன் வீட்டுக்கு செல்லாமல் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்தார். இப்போது என்ன செய் வது என்று தனிமையில் அமர்ந்து சிந்திக்க தொடங்கினார்.

ஆநிரைகளுக்காக மூலனின் உடலில் உட்புகுந்த சுந்தரநாதர், அந்திசாயும் நேரத்தில் ஆநிரைகள் வீடு திரும்ப அவர் செய்வதறியாமல் தனிமை யில் அமர்ந்திருந்தார். நேரம் கழிந்தது.

ஆநிரைகள் வீட்டுக்கு வந்து சேரும் காலம் தாண்டி கணவர் வரவில்லையே என்று கவலைக்கொண்ட மூலனின் மனைவி தேடி வந்தார். அவள் வழியில் வரும் போது திருமூலரைக் கண்டாள். என்னவாயிற்று வீட்டுக்கு வராமல் இங்கு அமர்ந்திருக்கிறீர்களே என்று கேட்டாள். அவர் மெள னம் கலையவில்லை. அவளுக்கு வியப்பாக இருந்தது.என்னவாயிற்று உங்களுக்கு என்ன கேட்டாலும் பதிலுரைக்காமல் மெளனம் காக்கிறீர் களே. நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா என்று கேட்டாள். அப்போதும் அவரது மெளனம் கலையாமல் இருக்கவே அவரது கையை பிடித்து அழைக்க முயன்றாள்.

அதைக் கண்டு பதறியபடி எட்டி நின்றார் திருமூலர். அப்பெண்மணி காரணம் புரியாமல் கண்கலங்கினாள். ஏன் விலகி நிற்கிறீர்கள் என்றாள். என் னால் உன் வீட்டுக்கு வரமுடியாது. இனி எனக்கும் உனக்கும் உறவு என்று எதுவும் கிடையாது. அதனால் என்னை வற்புறுத்தாதே என்றார். மேலும் சிவாலயம் சென்று அரனாரை வழிபடு உனக்குஅமைதி கிடைக்கும் என்றார்.அவள் திகைப்புடன் நிற்கும்போதே இனி இங்கே இருப்பது நல்ல தல்ல என்று அருகில் இருந்த மடம் ஒன்றினுள் புகுந்துகொண்டார். அங்கு சிவயோக நிலையில் அமர்ந்தார்.
மறுநாள் மூலனின் மனைவி தமது சுற்றத்தாரை அழைத்துக்கொண்டு மடத்துக்கு வந்தாள். யோக நிலையில் அமர்ந்திருக்கும் திருமூலரின் முகத் தில் வீசிய தெய்வ ஒளி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. எனினும் மூலனின் மனைவி இரவு முழுவதும் வருந்தியதும், காரணம் புரியாமல் திகைப்பதும் கண்டுஅவர்கள் திருமூலரிடம் காரணம் கேட்டார்கள்.ஆனால் அவர்களால் எத்தகைய பதிலையும் பெற முடியவில்லை என்பதோடு  அவர் ஞானியாகி விட்டார் இனி இல்லற வாழ்வில் அவரை ஈடுபடுத்த வைப்பது பாவம் என்று கூறி சென்றார்கள்.

அதைக் கேட்டுமேலும் கலங்கிய மூலனின் மனைவி இவர்கள் சொல்வதுபோல் இவருக்கு பித்து பிடித்துவிட்டது போல் என்றுஅவரது கால்களில் பணிந்து வருத்தத்தோடு சென்று விட்டாள்.சற்று நேரம் கழித்து திருமூலர்மறைவாக வைத்திருந்த தமது உடலை தேடினார். ஆனால் அங்கு அவ ருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கு அவரது உடல் இல்லை. இதுவும் எம்பெருமானின் திருவிளையாடலே என்பதை உணர்ந்துக் கொண்டார்.

இறைவன் அருளிய ஆகமப்பொருளை தமிழில் வகுத்து உலகோர் அறியும் வண்ணம் உணர்த்த தம்மை எம்பெருமான் பணித்திருக்கிறார் என்று புரிந்துகொண்டார். இறைவனின் கட்டளைக்கேற்ப அதைச் செயல்படுத்த வேண்டி பசுபதி நாதர் ஆலயத்துக்குச் சென்று பெருமாளை நினைத் தவாறு  அரசமரத்தின் கீழ் அமர்ந்து  தவம் புரிய தொடங்கினார். எம்பெருமானின் நினைவில் அவருடன் கலந்தார். 

நான்குநெறிகளைசரியை, கிரியை, யோகம், ஞானம் வகுத்து, தொகுத்து,விரித்து கூறும் திருமந்திர மாலையைப் பாடினார்.ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் ஆண்டுகள் மூவாயிரம் திருமந்திரங்கள் அடங்கிய திருமுறையைப் பாடினார். இந்துமதத்தில் திருமந்திரம் அற்புதநூலாக போற் றப்படுகிறது. இது ஒன்பது மந்திரங்களாக அமைந்துள்ளது.பன்னிரு திருமுறையில்,பத்தாம் திருமுறையாக விளங்குகிறது இத் திருமந்திரம்.
எம்பெருமானின் விருப்பத்துக்கிணங்க திருமந்திரத்தை நிறைவுசெய்து பசுபதியின் திருவருளால் திருக்கயிலை அடைந்து எம்பெருமானின் திரு வடி நிழலை பெற்று பேரின்ப நிலையை அடைந்தார்.சிவாலயங்களில் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிறப்பாக கொண்டாடப்படு கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment