Wednesday, 5 June 2019

செவ்வாய் தோஷம், நாக தோஷம், கிரக தோஷம் நிவர்த்தி செய்யும் அத்ரி மலை.!!

தியானம் செய்யுங்கள் உங்களை உணர்வீர்கள். ஆன்மிக ஞானத்தையும் பெறுவீர்கள் என்றுசொல்கிறார்கள் சித்தர்களும், முனிகளும், ஞானி களும். அதிகாலை எழுந்து இறைவனைநினைத்து வழிபடும் தியானத்துக்கு ஆற்றல்அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தியானம்செய்யலாம் ஆனால் தியானம் பழக்குவதற்குமன அமைதிவேண்டுமே என்றுநினைப்பவர்கள் முதலில் அத்ரி மலைசென்றுவாருங்கள். தியானம் கைகூடும். கிரகதோஷங்கள் நிவர்த்தி ஆகும். வாழ்வில்சந்தோஷம் அதிரிக்கும். எங்கே இருக்கிறதுஅத்ரி மலை.
பொதிகை மலை உச்சியிலே புறப்படும்தென்றல் என்று சொல்வார்கள். சித்தர் களால்பெருமை பெற்ற மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரின் ஒரு பகுதிதான் அத்ரி மலைஎன்று அழைக்கப்படுகிறது. அத்ரி மாமுனிவர்இங்கு அவருடைய சீடர்களுடன் வசித்த இடம்இது என்பதால் இம்மலை அத்ரி மலைஎன்றழைக்கப்படுகிறது. இந்த மலையில் அத்ரிமுனிவர், கோரக்கர், பிருகு முனிவர் போன்றசித்தர்கள் தவம்புரிந்து உள்ளார்கள். அகத்தியர்பொதிகை மலையில் இருந்துதான் தமிழ்வளர்த்ததாக கூறுகிறார்கள்.

சித்திர சிகண்டிகள் என்று அழைக்கப்படும் ஏழுரிஷிகளில் ஒருவராக இருப்ப வர் அத்ரி. உலகுக்கு வேதமந்திரங்களை வழங்கியரிஷிகளில் இவருக்கு முக்கி யப் பங்குண்டு. ரிக், அஜூர், சாம, அதர்வண வேதமான நான்கில் ரிக்வேதத்தின் பல காண்டங்களைஅத்ரிமக்ரிஷிதான் தபோவலிமையால்கொடுத்தார். இவர் ஜோதிடம், ஆயுர்வேதம்நூல்களையும் இயற்றியுள்ளார். அத்ரிமாமுனிவர் பதஞ்சலி மகரிஷிக்கு குருவாகஇருந்து மானுட சரீர ரகசியங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து தென்காசி செல்லும்வழியில் கடனா அணையை அடைந்துஅங்கிருந்து 7 கிமீட்டர் அடர்ந்த காடுகளுக்குள்பயணிக்க வேண்டும். போகும் போது அத்ரிகங்கா நதியை தாண்ட வேண்டும். வழியில்சித்தர்கள் வாழ்ந்த அடிச்சுவடு களைக்காணலாம். போகும் வழியில் இந்துஅறநிலையத்துறையின் பராமரிப்பில்அனுசுயாதேவி, அத்ரி மகிரிஷி ஆசிரமம்அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோரக்க மகரிஷிக்காக அத்ரி மகரிஷிஉருவாக்கிய கங்கா நதி இன்றளவும் தெளிந்தநீரோடையாக வற்றாத சுனையாக உள்ளது. அகத்தியர், கோரக்கர் இணைந்த கோயில்அமைந்திருக்கிறது. சித்தர்கள் தியானம் செய்தஇந்த இடத்தில் அமர்ந்து கண் மூடி தியானம்செய்யும் போது மன அமைதி கிடைக்கும்என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குசெய்யும் சிவவழிபாடு விசேஷமிக்கது.

சித்தர்கள் வைத்து வழிபட்ட லிங்கத்தைஆர்ஷலிங்கம் என்றழைக்கிறார்கள். அண்டம், அகிலங்களை தோற்றுவிக்கும் சப்தரிஷிகள்உருவாக் கிய லிங்கங்கள் சக்தி மிக்கவை. ஏனெனில் சிவலிங்கத்தை உருவாக்கியசித்தர்கள் வழிபாடு, ஸ்தோத்ரம், பாராயணம், தரிசனம், அபிஷேகம் இப் படி பலவிஷயங்களில் மனதையும் உடலையும்எம்பெருமானுக்கு அர்ப்பணித்து ஆன்மிகஅன்பர்களையும் அதில் ஈடுபட செய்தவர்கள்இவர் கள்.
அத்ரி பரமேஸ்வரன் ஆலயத்தில் கருவறையில்மூலவராக அத்ரி பரமேஸ்வரன், அத்ரிபரமேஸ்வரி அருள்பாலிக்கிறார்கள். எதிரில்நந்திதேவர் அமைந்திருக்கிறார். இந்தக்கோவிலின் முன்புறம் வனதுர்க்கை, வள்ளி, தெய்வானை உடன் சுப்ரமணியார், பிள்ளையார், மகிஷாசுரமர்த்தினி, பிர காரத்தில் அகத்தியர், அத்ரி, நாகதேவதைகள்அமைந்திருக்கின்றன. விஷ்ணு, பிரம்மா, தட்சிணாமூர்த்தி மூவரும் கோஷ்டத்தில் அருள் பாலிக்கிறார்கள். அத்ரி கங்கை தீர்த்த இடத்தில்கங்காதேவி எதிரில் நந்தி சிலைஅமைந்துள்ளது.

செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்றுவிரதம் இருந்து இங்கிருக்கும் வள்ளிதெய்வானை சமேத முருகப்பெருமானைவழிபடுகிறார் கள். நாக தோஷம் உடையவர்கள்நாக தெய்வங்களை வணங்கினால் நாகதோஷம் நீங்கும். ராகு, கேது தோஷ பரிகாரம்செய்பவர்களுக்கு இந்த தலம் சிறந்தபரிகாரத்தலமாக இருக்கிறது. கிரகதோஷங்கள் எதுவாயினும் நிவர்த்தி ஆக அத்ரிமலை பரமேஸ்வரனை அபயமடையுங்கள். அருள் புரிவார்.
அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகவும், வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கவும் அத்ரி மலைதரிசனம் நிச்சயம் கைகொடுக்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment