கோவில் கோபுரங்களின் உயரங்களுக்கும் கோபுரக்கலசங்களின் தேவைகளுக்கும் இன்றைய ஆராச்சியாளர்கள் குடுக்கும் பதில்கள் வியப்பூட்டுகின்றன. நம் முன்னோர்கள் கோவில்களின் அளவையும் அமைப்பையும் பற்பல அனுபவங்களுக்கு பின்னரே இத்தனை ஆக்கபூர்வமாக அமைத்திருபார்கள் என்பது தெளிவாகிறது.
அனைத்து ஊர்களிலும் உயரமான கோயில்களையும் கோபுரங்களையும் பார்த்திருப்பீர்கள். ஏன் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள், ஏன் உயரம் உயரமாக் கோயில் கட்டினார்கள் தெரியுமா?
மனிதனின் நலனை முன்னிட்டுத்தான் கோயில் உயரமாக கட்டப்பட்டுள்ளன. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால்செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும்தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியைகலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சமை, எள்ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தைஅதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால்ஆச்சர்யமாக இருக்கிறது. வரகுமின்னலைத் தாங்கும் அதிகஆற்றலைப் பெற்றிருப்பது எனஇப்போதைய அறிவியல் கூறுகிறது.
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குட முழுக்கு விழா என்ற பெயரில்கலசங்களில் இருக்கும் பழையதானியங்கள் நீக்கப்பட்டு புதியதானியங்கள் நிரப்பப்படுகிறது. அதைஇன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும்கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத்தேடினால், அந்த தானியங்களுக்குப்பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான்அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அதுசெயல் இழந்து விடுகிறது என்ற அறிவியல் காரணம் இருக்கிறது.
எதற்காக இத்தனை தானியங்களை உள்ளே வைக்கிறார்கள் தெரியுமா? முன்பு பெருமழை பெய்யும்போது தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கிஅழிந்து போக வாய்ப்பு இருந்தது. அப்படி நடந்தால் மீண்டும் எதைவைத்துப் பயிர் செய்வது? இவ்வளவுஉயரமான கோபுரத்தை நீர் சூழவாய்ப்பில்லை. இதையே மீண்டும்எடுத்து விதைக்கலாம் என்ற சிந்தனைதான்.
ஒரு இடத்தில் எது மிக உயரமானஇடத்தில் அமைந்த இடி தாங்கியோஅதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும்அது எத்தனை பேரைக் காப்பாற்றும்என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது.அடிப்படையில் கலசங்கள்இடிதாங்கிகளாக பயன்படுகின்றன. அதனால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment