சுவாமி விவேகானந்தர் சிறிய வயதில் மனதில் ஏராளமான கேள்விகளுடன் அலைந்தவர்.
அத்தனை கேள்விகளுக்கும் பதிலாக சுவாமி ராமகிருஷ்ணர் அமைந்தார். அதனாலே தன்னிடம் கேள்வி கேட்கும் அத்தனை பேருக்கும் மிகவும் எளிமையாக ஆன்மிக பதில் சொல்வார் விவேகானந்தர். இதோ அவரது பதில்களைப் பாருங்கள்.
இறைவனை விக்கிரகமாகத்தான்வழிபாடு செய்யவேண்டுமா? தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மைசெய்வதும்தான் எல்லா வழிபாடுகளின்சாரமாகும்.
ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனைக்காண்பவரே, உண்மையில் அவரைவழிபடுகிறார். இறைவனைவிக்கிரகத்தில் மட்டும் காண்பவருடையவழிபாடு ஆரம்பநிலையில்தான்இருக்கிறது.
கடவுள் எங்கேகுடியிருக்கிறார்? கடவுள் ஒவ்வொருஜீவனிலும் குடி கொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வெறு ஒருகடவுள் இல்லை. இந்த உண்மையைஎவ்வளவு தவங்களுக்குப் பிறகு நான்புரிந்து கொண்டிருக்கிறேன்.
மக்களுக்கு சேவை செய்பவன்உண்மையில் கடவுளுக்கு சேவைசெய்பவன் ஆகிறான்.
பகல் கனவுகள் எது? உலகமாகியஇந்த நரகத்தில் ஒரே ஒரு நாளாவது, ஒரே ஒருவனின் இதயத்திற்காவதுசிறிதளவு இன்பமும், மகிழ்ச்சியும்அளிக்க முடியுமானால் அது மட்டுமேநிஜமான சேவையாகும். இந்தஉண்மையை வாழ்நாளெல்லாம் பட்டகஷ்டங்களுக்குப் பிறகு நான் உணர்ந்துகொண்டேன்.
மற்றவையெல்லாம் பொருளற்றவெறும் பகல் கனவுகள் என்றுதான்சொல்ல வேண்டும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment