சுவாமி விவேகானந்தர் சிறிய வயதில் மனதில் ஏராளமான கேள்விகளுடன் அலைந்தவர்.
அத்தனை கேள்விகளுக்கும் பதிலாக சுவாமி ராமகிருஷ்ணர் அமைந்தார். அதனாலே தன்னிடம் கேள்வி கேட்கும் அத்தனை பேருக்கும் மிகவும் எளிமையாக ஆன்மிக பதில் சொல்வார் விவேகானந்தர். இதோ அவரது பதில்களைப் பாருங்கள்.
நம்மைப் படைத்த ஆண்டவனுக்குநாம் என்ன உதவி செய்யவேண்டும்? ஆண்டவனுக்குஉதவுவதாக எப்போதும்சொல்லாதீர்கள். நீங்கள் அவருக்காகப்பணியாற்றும் பேறு பெற்றபாக்கியசாலிகள் மட்டுமே.
ஆகவே ஆண்டவனுக்கு உதவி எனும்சொல்லை உங்களதுஉள்ளத்திலிருந்தே நீக்கி விடுங்கள். நீங்களாக விரும்பி உதவி செய்யமுடியாது. அவரதுவிருப்பத்தினால்தான் நீங்கள் இங்குஇருக்கிறீர்கள். உங்களால் அவரைவழிபடத்தான் முடியும்.
கடவுள் எல்லா இடத்திலும்இருக்கிறார் என்றால் நாய் போன்றமிருகங்களிலும்இருக்கிறாரா? நீங்கள் ஒரு நாய்க்குஒரு பிடி சோறு கொடுக்கும் போது, அந்த நாயை கடவுளாகவே பாவித்துவழிபடுங்கள்.
ஏனென்றால் அந்த நாயினுள்ளும்கடவுள் இருக்கிறார். அவரேஎல்லாமுமாய் இருக்கிறார். எல்லாவற்றிலும் இருக்கிறார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment