ஆக்சன் செயல்பாடு என்றால் அங்கு விவேகம் செயல்படுகிறது. ’ரியாக்சன்’ எதிர்ப்பு உணர்ச்சி என்றால் அங்கு விவேகம் செயல்படுவதில்லை.
விருப்பு, வெறுப்புகளை அடிப்படையாக கொண்ட பழக்கமே, இயந்திரத்தனமான உணர்ச்சிகளே செயல்படுகின்றன. விருப்பு, வெறுப்புகள் நம் செயல்பாட்டைநிச்சயிக்கும் போது அவற்றின் ஆதிக்கத்தில் நாம்இயந்திரம் போல் செயல்படுகிறோம். அப்போதுநம் செயல்பாட்டின் மீது நமக்கு ஆதிக்கம்இல்லாது போகிறது. நம் செயல்பாட்டின்மீது நமக்கு ஆதிக்கம் இருக்கும்பொழுது நாம்விவேகத்துடன் ஆக்சன் எடுக்கிறோம்.
நாம் விருப்பு, வெறுப்புகளின் ஆதிக்கத்தில்இருக்கும் பொழுது அவற்றின் வசத்தில்நாம் ரியாக்ட் செய்கிறோம்.எப்பொழுதும் ரியாக்ட்செய்து கொண்டிருக்கும் மனம் அமைதியற்றதாகஇருக்கிறது. அப்பொழுது எவ்வளவு அனுபவங்கள்பெற்றாலும் நாம் அவற்றிலிருந்து கற்பதில்லை.எண்ணத்துக்கும் செயலுக்கும்உள்ள முரண்பாடுகள் மனதில் போராட்டங்களைஎழுப்புகின்றன. உணர்ச்சிவேகத்தில் செயல்படுவதும், அதற்குப் பிறகுவருந்துவதும் இப்படியே நம் வாழ்க்கை மாறிமாறி வரும் ’மூட்’களில் அல்லாடி தத்தளித்துக்கொண்டிருக்கிறது.
மாறாக இறைவனிடம் பக்தி உள்ள மனம்இறைவனே நமக்கு அனைத்து பலன்களையும்தருகிறான் என்ற நம்பிக்கை கொண்டுள்ளது.அதனால் மனம் ரியாக்ட் செய்வதில்லை.செய்யவேண்டியதை செய்து விட்டு பலனைஇறைவனிடமிருந்து வருவதாக ஏற்கிறது. இப்படிஉள்ள மனமே எதிர்மறைஉணர்ச்சிகளை, எண்ணங்களை விலக்குகிறது.தன் ’மூட்’களைத் தன் வசம் வைத்துள்ளது.
இதனால் இறைவனிடம் அளவில்லாத பக்திகொள்ள முடிகிறது. அந்த மனமேநானும் இறைவனும் வேறல்ல என்ற அறிவைப்பெற தகுதி பெற்றது. நாமும் நம் மனதின் விருப்பு,வெறுப்புகளுக்கு முக்கியத்துவம்கொடுக்காமல் இறைவனிடம் பக்தி செலுத்திபலன் அடைவோம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment