சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்ற கருத்து உள்ளது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்று நம்மில் நிறைய பேருக்கு தெரியாது. ஒரு விஷயத்தை நாம் பின்பற்றும் போது காரண காரியங்களை விஷயம் அறிந்த பெரியவர்களிடம் தெரிந்துக் கொண்டு செய்வதோடு நம்முடைய பிள்ளைகளுக்கும் கோவிலுக்கு செல்லும் போது அதை விளக்கிக் கூறினால் , மகத்தான நம் இந்து மதத்தின் பெருமை அவர்களும் பின்பற்ற உதவும். பொதுவாக கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் நாம் நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையில் உள்ள சக்தியை சாதாரண மனிதர்களாகிய நம்மால் தாங்கிக்கொள்ளஇயலாது. சன்னிதியின் இருபக்க வாட்டிலும் நின்று தான் தரிசிக்க வேண்டும். தெய்வ பார்வையை நேருக்கு நேர் எதிர் கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை, நம்மால் கோயில்களில் காண முடியும் . அதே போல் தான் நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. இதற்கு ஸ்தான பலம், ஸம்யோக பலம், த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயல்பிலேயே அசுபகிரஹனம் என்று சொல்லப்படும் சனி கிரஹத்தின் 3, 7, 10ஆம் பார்வை, பொதுவாக அசுப பலனையே ஏற்படுத்தும். ஆகவே, சனியின் பார்வை ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் ,சனியின் பார்வை நம் மீது விழக்கூடாதுஎன்பதால் நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். நவக்கிரகங்களை, தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்த இலங்கை வேந்தன் இராவணன், சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகளில் படுக்க வைத்து, தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருக்கும். ஆனால்,நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால், மேல் நோக்கிப் படுக்காமல் கீழ் தரையை நோக்கியபடி படுத்திருந்தது. இதை கவனித்த நாரதர், ராவணனின் கொடுமைக்குமுடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, ராவணன் சபைக்குவந்து, ராவணன் நவக்கிரகங்களை காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், ராவணா! உனது கட்டளையை அனைவரும் மதித்து, மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள். ஆனால், இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில்கீழ் நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா! என்று கூற, ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான். தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் ராவணன் பிடிவாதமாக இருக்கவே, சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனியை மார்பில் மிதிக்கும் போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை, ராவணனின் மீது விழுந்தது. அது முதல் ராவணனுக்கு அனர்த்தம் ஆரம்பமாயிற்று. நாரதரும் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். இதை விட சனிப்பார்வை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை பற்றி சொல்ல தெரிய வேண்டியதில்லை. எனவே இனி கோவிலுக்கு செல்லும் போது சனி பகவானை பக்கவாட்டில் இருந்து தரிசித்து அவர் கருணையை வேண்டுவோம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment