அருணாம் கருணாதரங்கதாக்ஷீம்
த்ருத பாசாங்குச புஷ்பபாண சாபாம்
அணிமாதிபிராவ்ருதாம் மயூகை:
ரஹமித்யேவ விபாவயே பவானீம்.
லலிதா த்யான ஸ்லோகம்
பொதுப் பொருள்:
சிவந்த சூரியனைப் போன்ற நிறம் கொண்டவளும், கருணையே வடிவானவளும், தன் கரங்களில் பாசம், அங்குசம், கரும்புவில், புஷ்ப பாணம் போன்றவற்றை ஏந்தியருள்பவளும், அணிமாதியர் எனும் அஷ்ட சித்திகளால் எப்போதும் வணங்கப்படுபவளும், அன்பர்களை அனவரதமும் காக்கும் பராம்பிகை பவானி எப்போதும் நம்மைக் காக்கட்டும்.
(ஆதிசங்கரர் தன் ஸௌந்தர்ய லஹரியின் த்ரயாணாம் தேவானம் எனும் துதியில் தேவியின் திருவடித் தாமரைகளை யார் பூஜித்தாலும் அவர்கள் மும்மூர்த்திகளை பூஜித்த பலனைப் பெறுகிறார்கள். ஏனெனில், மும்மூர்த்திகளும் தேவியின் திருவடித் தாமரைகளையே எப்போதும் பக்தியுடன் பூஜிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இத்துதியை பாராயணம் செய்தால் மும்மூர்த்திகளையும் பூஜித்த பலனைப் பெறலாம்....
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment