சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள் ஆரோக்யத்திர்க்காகவும், இல்லத்தின் அமைதி சந்தோஷத்திர்க்காகவும் அவசியம் சுமங்கலி பூஜை செய்யவேண்டும்.
மிகுந்த செலவுகள் செய்து தான் இந்த பூஜையை செய்ய வேண்டுமென்பதுக் கிடையாது, அவரவர் வசதிக்கு ஏற்பார் போல் செய்யலாம்.
சுமங்கலி பூஜை எப்படி செய்வது?
இல்லத்தை தூய்மைப்படுத்தி, மாக்கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும்.
சுவாமி படங்களுக்கு பூ, தூபம் போட்டு விளக்கேற்ற வேண்டும்.
சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கு ஏற்றவகையில் பெண்களை அழைக்கலாம் .
நம் வீட்டிற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைக்க வேண்டும் .
தேவியின் வடிவங்கள் அவர்கள் என எண்ணி வரவேற்க வேண்டும்.
தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்யவேண்டும் .
சந்தனம், குங்குமம், மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையுடன் அமர செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாக கருதி , தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.
தனித்தனியாக நமஸ்காரம் செய்து, அவர்களுக்கு புடவை , ரவிக்கை, மஞ்சள், குங்கும சிமிழ், கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தட்சனை கொடுக்க வேண்டும்.
இதில் எவை உங்களால் முடியுமோ அதை வாங்கி கொடுக்கலாம் .
ஆனால் தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும் .
பூஜைக்கு வரும் பெண்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.
வந்த பெண்கள் சாப்பிட்ட பிறகே இல்லத்தலைவி சாப்பிட வேண்டும்.
மீண்டும் ஒரு முறை, வந்த அனைத்து பெண்களையும் வணங்கி விட்டு வழியனுப்ப வேண்டும்.
இந்த பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள், புதன், வெள்ளி இந்த தினங்களில் ராகு காலம் இல்லாத எந்த நேரமும் நல்ல நேரமே.
இந்த பூஜை செய்யப்படும் வீட்டில் வறுமை, நோய், துன்பம், தோஷம் நீங்கி கணவனுடன் ஆயுள் ஆரோக்யத்தொடு வளமோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
வாழ்க வளமுடன்….
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment