நம் முன்னோர்கள் மரணம் அடைந்த நேரம், திதியை மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களை தரும்.
தர்ப்பணம் செய்யும் போது தாய், தந்தை வழியில், 6 தலைமுறைக்கு அல்லது குறைந்த பட்சம் தாத்தா, அவரின் அப்பா என, மூன்று தலைமுறையை சேர்ந்த முன்னோர்களுக்கும் சேர்த்து செய்தால், அவர்களது ஆசிகளும் கிடைக்கும்.
அமாவாசை, சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது செய்யப்படும் தர்ப்பணத்துக்கு மிக அதிக சக்தி உண்டு.
ஒரு வருடம் நாம் பித்ருபூஜை செய்யாவிட்டாலும், பித்ருக்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. தர்ப்பணங்களை எப்போதும் காலை ஏழு மணிக்குள் கொடுத்து விடுவது நல்லது. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பே எழுந்து, தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு.
எள்ளுடன் தண்ணீரும் கலந்து அளிக்கப்படும் தர்ப்பணம், பித்ருக்களுக்கு அமிர்தமாக கருதப்படுகிறது.
பித்ரு காரியத்துக்கு தர்ப்பைப் புல் பயன்படுத்துவது நல்லது. தர்ப்பைப் புல்லில், சூரிய ஒளி ரூபத்தில், பித்ருக்கள் வந்து அமர்வதாக ஐதீகம்.
நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை சுவதாதேவி, தர்ப்பைப்புல் மூலம்தான் பித்ருலோகத்துக்கு எடுத்து செல்வதாக ஐதீகம். புண்ணிய நதிகளின் கரைகளில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு, எப்போதுமே சக்தி அதிகமாகும். அமாவாசை நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டியது மிக, மிக முக்கியமாகும்.
மறைந்த முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, மகாளயபட்ச நாட்களில் ஆசி வழங்க நம்மை நிச்சயம் தேடி வருகிறார்கள். இதை புரிந்து கொண்டு அவர்களது ஆசிகளைப்பெற வேண்டியது நமது பொறுப்பாகும்.
தர்ப்பணத்தை சரியான நேரத்தில் உரிய முறைப்படி செய்தால் நம் வாழ்வில் கஷ்டங்கள் என்பதே வராது.
பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணமானது, பல யாகங்களுக்கு சமம்.
மஹாளய பட்ச காலத்தில்,செய்யப்படும் திதி, பித்ருக்களை ஓராண்டு காலத்துக்கு திருப்தி அடைய செய்யும்.
புண்ணிய ஆத்மாக்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணம் அவர்கள் மேலும் இறையருள் பெற உதவும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் அசைவ உணவு, வெங்காயம், பூண்டு, வாசனைத் திரவியங்களைத் தவிர்ப்பது நல்லது.அன்றைய தினம் பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment