ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன்,வாசல் தெளித்து பெருக்கும் போது பிராண வாயு, அதாவது முழுமையான சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது.
குணிந்து பெருக்குதல், குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில். ஒரு நிலையாக வருகிறது.
இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது.
பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி வருவதாக ஐதீகம்,
கோலமிடுதல் என்பது, ஒரு சடங்கு சம்பிரதாயம் கிடையாது. நம்ம வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம், மேலும் மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.
கோலமிடும் வீட்டில் மஹா லட்சுமி நிரந்தர வாசம் செய்கின்றாள். சூரிய உதயத்திற்கு முன், வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன், கோலமிட வேண்டும்.
கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது, சிறு தவறு ஏற்பட்டால், அதை காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும்.
வீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை, ஆகிய இடங்களில் கோலமிட வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல அமர்ந்தவாறு போடுதல் கூடாது. வேலையாட்களாலும் போடுதல் கூடாது.
சுபகாரியங்களின் போது இரண்டைக்கோடு வருவது போலவும் அசுபகாரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போலவும்,கோலம் போட வேண்டும்.தமிழர்கள் இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள்.
இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக, பசு சாணத்தைத் தெளிக்கிறோம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment