Saturday, 7 September 2019

ஆயுள்விருத்தி தரும் சொர்ணபுரீஸ்வரர்.!!

கடலூர் நல்லாத்தூர்


கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை பொன்னம்பலநாதர் என்கிற சொர்ணபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

தல வரலாறு

இக்கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். சுமார் ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஸ்தலமாக விளங்கி வருகிறது. தல விருட்சமாக வில்வமரம் திகழ்கிறது. கோயில்களில் சாளரக் கோயில் என்ற வகை உண்டு. இத்தகைய கோயில்களில் வாசற்படி இருக்காது. இறைவனை பலகனி எனப்படும் ஜன்னல் (சாளர சக்கரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். சாளர சக்கரத்திற்கு கீழ் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் உள்ளடக்கிய சர்ப்ப யந்திரம் உள்ளது. இதன் அருகில் நந்தி மண்டபம் உள்ளது. திரிபுரசுந்தரி அம்மன் எதிரில் உள்ள ராஜகோபுரம், 3 நிலை 5 கலசங்களுடன் உள்ளது. இங்கு அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மகா மண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

ஆலய மணி

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கடலூர் (அப்போதை தென்னாற்காடு மாவட்டம்) கலெக்டர் பகோடா என்பவரது மகள் கண்பார்வையற்று இருந்தார். இவ்வாலயத்தில் தரிசனம் செய்ததால் அந்த சிறுமிக்கு கண்பார்வை கிடைத்தது. இதனால் மகிழ்ந்த பகோடா நஞ்சை நிலங்களை ஆலயத்திற்கு வழங்கினார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட அற்புத ஓசையுடன் கூடிய ஆலயமணியை 1907ம் ஆண்டு இந்த கோயிலுக்கு வழங்கினார். இந்த மணியின் ஓசை குறைந்தது 3 கி.மீ தொலைக்கு கேட்கும் என்பது கூடுதல் சிறப்பு.

காலசம்ஹார மூர்த்தி

மகா மண்டபத்தில் கர்ண விதாயினி என்னும் பெயரில் சரஸ்வதி வீணை வாசிக்கும் சிற்ப சிலை உள்ளது. துவாரபாலகர்களை இக்கோயிலில் வலம்வர முடியும். மார்க்கண்டேயனை காப்பாற்ற எமனை காலால் எட்டி உதைக்கும் காலசம்ஹார மூர்த்தியாக மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். இதனால் இத்தலம் வட திருக்கடையூர் என்றும் அழைக்கப்படுகின்றது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் அம்பாளை வணங்கி தாமரைப்பூவால் அர்ச்சனை செய்தால் பார்வை குறைபாடுகள் நீங்கும். இங்குள்ள சிவனை வழிபட்டால் ஆயுள்விருத்தி உண்டாவதோடு, பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

விழாக்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் மகாமிருத்யுஞ்சய யாகம், மகா சிவராத்திரி, மாத பிரதோஷங்கள், ஐப்பசி அன்னாபிஷேகம், அஷ்டமி பைரவர் வழிபாடு, ஒவ்வொரு தமிழ் மாத முதல்நாள் சூரியன், ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

செல்வது எப்படி

கடலூரில் இருந்து தவளக்குப்பம், மடுகரை, பாக்கம் கூட்ரோடு வழியாகவும், விழுப்புரத்தில் இருந்து மடுகரை வழியாவும், புதுவையில் இருந்து தவளக்குப்பம் வழியாகவும் நல்லாத்தூர் சிவன் தலத்தை அடையலாம். காலை 6 மணி முதல் 9 வரையும், பின்னர் மாலை 6மணி முதல் 8 மணி வரையும் நடைகோயில் திறந்திருக்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment