Friday, 2 August 2019

நாக சதுர்த்தி : சகல தோஷம் போக்கும் சர்ப்ப பூஜை.!!

நாகசதுர்த்தி - 04.08.2019


இந்து சமயத்தில் கலாசாரம், பண்பாடு, வழிபாடுகள், விரதங்கள், பண்டிகைகள் எல்லாமே இயற்கையை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்டவை. பஞ்ச பூதங்களாகிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், மற்றும் மலைகள், மரங்கள், விலங்குகள், பட்சிகளையும் தெய்வமாக கொண்டாடுகிறோம். யானை, கருடன், குதிரை உள்பட பல மிருகங்கள், பட்சிகள் கடவுளின் வாகனமாக இருக்கின்றன. இந்த வகையில் நாகங்கள் இந்து வழிபாட்டில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஜோதிட சாஸ்திரத்தில் சாயா கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்ற அமைப்பில் ராகு-கேதுவாக நாகங்கள் கிரக பரிபாலனம் செய்கின்றன.

இத்தகைய சர்வ வல்லமை படைத்த நாக தேவதைகளுக்கு ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி என்றால் நான்கு. இந்த நான்கு என்ற எண் அலைவரிசை எண் கணித சாஸ்திரப்படி ராகுவை குறிப்பதாகும். எனவே நான்காவது திதியான சதுர்த்தி அன்று வழிபடுவது மிகவும் விசேஷமாகும். நாகங்களை பற்றி பல புராண கதைகள், கர்ண பரம்பரை கதைகள், அனுபவ உண்மைகள் என ஏராளம் உள்ளது. நாகம் ஆலய வழிபாடுகளில் முக்கிய இடத்தை பெறுகிறது. அம்மன், சிவன், முருகன் ஸ்தலங்களில் நாக வாகன புறப்பாடு மிக விமரிசையாக நடக்கும்.

அதேபோல் திருப்பதி உள்ளிட்ட பெருமாள் ஸ்தலங்களில் சேஷ வாகனம் என்ற பெயரில் திருவீதி உலா நடப்பது விசேஷம். அம்மன் கோயில்களில் அரச மரம், வேப்ப மரம் இணைந்து இருக்க அங்கே பாம்பு புற்று வழிபாடு பிரசித்தமாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாம்பு புற்றுக்கு சந்தனம், மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து, அனந்தன், வாசுகி, கிஷ்காலன், அப்ஜன், மகரி, கங்குபாலன், கார்கோடன், குளிகன், பத்மன் ஆகிய நாக தேவர்களின் பெயர்களை உச்சரித்து புற்றுக்கு பால், முட்டை ஊற்றி வழிபடுவர். பல கோயில்களில் அம்மன்கள் நாக அம்சமாகவே அருள்பாலிக்கின்றனர்.

நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், காளியம்மன், மாரியம்மன் என ஒவ்வொரு ஊரிலும் பல விசேஷ பெயர்களில் வீற்றிருக்கிறாள் சக்தி. திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன், நாக சக்தியாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். இத்தலத்தில் மிகப் பெரிய புற்றுக் கோயில் உள்ளது. பாற்கடலில் பரந்தாமன் பாம்பு படுக்கையில் பள்ளி கொண்டிருப்பதாக விஷ்ணு புராணம் விவரிக்கிறது. புராண இதிகாசகங்களின்படி சமுத்திரத்தின் அதள பாதாளத்தின் கீழே பூமியை தாங்கியபடி ஆதிசேஷன் இருப்பதாக பாகவத புராணம் உள்ளிட்ட பல புராணங்கள் கூறுகின்றன. இதை சிலர் கட்டுக்கதை என்று சொல்வார்கள், ஆனால் நவீன விஞ்ஞான உலகத்தில் கடலுக்கு உள்ளே அதள பாதாளத்தில் ‘பாம்பு பாறை‘ இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஜோதிட சாஸ்திரப்படி நாகங்கள் ராகு, கேது என்ற பெயரில் கிரகங்களாக பரிபாலனம் செய்கின்றன. ராகு, யோக போகங்களுக்கும் கேது மோட்சம், ஞானத்திற்கும் அதிபதியாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். மனித வாழ்வில் மிக முக்கிய அம்சமான திருமண விஷயத்திலும், குழந்தை பாக்யம் அருள்வதிலும் தோஷத்தை ஏற்படுத்துவது இந்த ராகு கேதுதான். நாக தோஷம், சர்ப்ப தோஷம் என பல வகைகளில் தோஷங்களை ஏற்படுத்துவதில் ராகு-கேதுவுக்கு நிகர் யாரும் இல்லை எனலாம். குழந்தை பிறக்கும்போது கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு பிறப்பது, கொடி சுற்றிக்கொண்டு பிறப்பது எல்லாம் ராகு-கேதுவின் வேலையாகும். இத்தகைய கடுமையான தோஷங்களை ஏற்படுத்தும் நாகங்களின் அம்சமான ராகு-கேதுவை நாக சதுர்த்தி தினத்தில் மனமுருகி வழிபட்டால் சகல தோஷ நிவர்த்தி ஏற்படும்.

பரிகார ஸ்தலங்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமனியில் உள்ளது நாகநாத சுவாமி ஆலயம். ஆதிசேஷன் நாகநாதரை பூஜிக்க பாதாளத்தில் இருந்து வந்ததால் பாதாளேச்சரம் என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு.  மனித முகமும், பாம்பு உடலும் கொண்ட ஆதிசேஷனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. ராகு-கேது உள்பட சகல நாகங்களுக்கும் தலைவன் ஆதிசேஷன் என்பதால் இங்கு வந்து வழிபட்டு, பிரார்த்தனை செய்தால், சகல நாக தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்யத்திற்காக இங்கு அதிக அளவில் வேண்டுதல் செய்கிறார்கள்.

நாகர்கோவிலில் உள்ள நாகராஜ சுவாமி கோயிலில், நாகராஜன் சுயம்புவாக தோன்றி அருள்பாலிக்கிறார். இது பிரார்த்தனை ஸ்தலமாகும். ராகு, கேது சம்பந்தமான எல்லா தோஷங்களுக்கும் இங்கு வேண்டுதல் செய்யலாம். ராமாவதாரத்தில், ஆதிசேஷன், லட்சுமணராக அவதாரம் எடுத்தார். லட்சுமணரின் நட்சத்திரம் ஆயில்யம் என்பதால் இங்கு ஆயில்ய நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அந்த நட்சத்திரத்தில் இங்கு வழிபடுவது சிறப்பாகும்.ஸ்ரீபெரும்புதூர் அல்லது ஸ்ரீரங்கம் சென்று ராமானுஜருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். அவரை திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பாகும். ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், கீழ் பெரும்பள்ளம் ஆகியவையும் நாக பரிகார ஸ்தலங்களாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment