Monday, 29 July 2019

நமி நந்தி அடிகள் நாயனார்.!!

சிவனடியார்கள் சித்தத்தை சிவன்பால் வைத்து வாழ்ந்தவர்கள் சிவனடியார்கள். ஒவ்வொருவரும் சிவத்தொண்டை புரிவதையையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தார்கள். இந்த குறிக்கோளுக்காக தமது உயிரையும் விட துணிந்தவர்கள். இந்த 63 நாயன்மார்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொண்டினை செய்து எம்பெருமானின் பாதங்களைப் பற்றி சரணடவைந்தவர்கள்.

எம்பெருமானுக்கு திருவிளக்கு ஏற்றும் பணியை தலையாய கடமையாக செய்த கலியநாயனார், கணம்புல்ல நாயனார் வரிசையில் இன்று நாம் பார்க்கவிருப்பது நமிநந்தி அடிகள் நாயனார். திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில்அமைந்துள்ளது ஏமப்பேறூர். இங்கு அந்தணர் குலத்தில் பிறந்தவர் நமிநந்தி அடிகள். நாள்தோறும் எம்பெருமானுக்கு விளக்கேற்றும் பணியில் ஈடுபட்டு மகிழ்வுற்றிருந்தார்.

ஒருமுறை திருவாருர் கோயிலின் இரண்டாம் மதில் சுவருக்கு அருகேயிருந்த அரநெறியப்பரைச் தரிசிக்க சென்றார். மாலைநேரம் என்பதால் இருள் சூழ தொடங்கியது. விளக்கில் எண்ணெய் இன்றி மங்கலான வெளிச்சத்தைக் கொடுத்தது. அங்கு விளக்கை ஏந்திவைக்க விரும்பினார். தமது வீட்டுக்கு சென்று விளக்கு எரிக்க நெய்கொண்டு வருவதற்குள் பொழுது சாய்ந்துவிடும் என்று எண்ணியவர், அங்கு கோயிலின் அருகில் இருந்த ஒரு வீட்டுக்கு சென்று விளக்கேற்ற நெய் இருந்தால் தாருங்கள் என்று கேட்டார்.  அப்போது திருவாரூரில் அதிகம் சமணர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர் நெய் கேட்டதும் சமணர்கள் வாழ்ந்த வீடு. இவர் நெய் கேட்டதும் இவரைக் கண்டு ஏளனம் செய்தார்கள்.
கையில் கனல் ஏந்தி ஆனந்த தாண்டவம் ஆடும் உங்கள் இறைவனுக்கு வெளிச்சமும் விளக்கமும் தேவையா என்ன? கனல் ஒளி போதுமே. உங்கள் ஆண்டவனுக்கு அப்படியும் ஒளி வேண்டுமென்றால் அருகில் இருக்கும் குளத்துநீரை கொண்டு வந்து ஏற்ற வேண்டியது தானே…நீரில் தீபம் பிரகாசமாக எரியுமல்லவா என்று எள்ளி நகையாடினார்கள். சமணர்களின் கேலி வார்த்தையால் மனம் வருந்திய நமி நந்தி அடிகள் இறைவனிடம் தஞ்சமடைந்தார். 

அரநெறியப்பனே என்ன சோதனை..என்னால் தாங்க முடியவில்லையே.சமணர்களின் இழிவானவார்த்தையைக் கேட்டு என்னால் எதுவும் செய்ய இயலாமல் போனதே. இதைக் கேட்கவா எனக்கு செவிகள் அளித்தீர்கள் என்று கதறினார். இனி யாது செய்வேன். அடியேனுக்கு ஏதேனும் வழி காட்டுவீர் என்றார்.
அப்போது குளத்து நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்வாய் என்று இறைவனின் அசரீரி கேட்டது. தாமதிக்காமல் நமி நந்தி அடிகள் ஆனந்தப் பெருக்கோடு தேவாசிரிய மண்டபத்தை நோக்கி அடுத்துள்ள உம்ம சங்கு தீர்த்தம் என்னும் திருக்குளத்தை நோக்கி ஓடினார். பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தப்படி அங்கிருந்த நீரை கொண்டுவந்தார். மங்கலாக எரிந்த விளக்கொன்றில் நீரை விட்டார். எம்பெருமானின் அதிசயத்தை என்ன வென்று கூறுவது. நெய் விளக்கை விட பன்மடங்கு பிரகாசமாய் எரிந்த தீபம், கோயிலின் இருளை அகற்றி தெய்வீக ஒளியைக் கொடுத்தது.

எம்பெருமானே என்று மகிழ்ந்த நமிநந்தி அடிகள் மீண்டும் திருக்குளத்துக்கு ஓடிச்சென்று தண்ணீரை எடுத்து வந்து ஆலயங்களில் இருக்கும் அனைத்து விளக்குகளிலும் ஊற்றி விளக்கேற்றினார். ஆலயங்களைச் சுற்றியும் தீப ஒளி விளக்கின் வெளிச்சம் பிரகாசமாக எரிந்தது.

நமி நந்தி அடிகள் நீரில் விளக்கேற்றி பிரகாசமான ஒளியைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். எம்பெருமானின் அருளை நினைத்து உருகினார். அவரை ஏளனம் செய்த சமணர்கள் வெட்கி தலைகுனிந்தார்கள்.


அதன் பிறகு தண்ணீரில் விளக்கேற்றி அரநெறியானை வழிபட்டு வந்த நமிநந்தி அடிகள் பற்றி கேள்விப்பட்ட சோழ மன்னன் திருவாரூர் ஆலயத்தில் தினசரி பூஜைகள் நடத்தவும், உற்சவ நாள்களை முறைப்படி நடத்தவும் ஆணையிட்டு அதற்கு தலைவ ராக நமி நந்தி அடிகளை நியமித்தும் எண்ணற்ற பொன்னும் பொருளும் அள்ளி வழங்கினார். நெய்வேண்டி நீரை பெற்று விளக் கேற்றியவர் என்ற காரணத்தினால் ஏமப்பேறு என்ற ஊர் தற்போது திருநெய்ப்பேறு என்றழைக்கப்படுகிறது.
காலப்போக்கில் சமணம் அழிந்தது. சமணர்கள் அழிந்தனர். சைவம் தழைத்தது.அடிகளார் எம்பெருமானுக்கு பெருவிழாக்கள் நடத்தி பெருமிதம் அடைந்தார். ஆண்டு தோறும் பங்குனி உத்திர விழாவை மிகச்சிறப்பாக நடத்தினார். ஒருமுறை ஏமப்பேறூ ரை அடுத்துள்ள மணலி என்னும் ஊரில் திருவாரூர் தியாகேசப்பெருமான் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருள்வது வழக்கம்.

சிவன்பக்தர்கள்அனைவரும்ஜாதிபேதமின்றிஅவ்விழாவில்கலந்துகொள்வார்கள்.நமிநந்திஅடிகளும்விழாவில்கலந்துகொண்டு பரமனைத் தரிசித்து மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தார். வந்தவர் வீட்டின் அருகிலுள்ள திண்ணையில் படுத்துவிட்டார். அவரது இல்லத்தரசியார் கணவரை எழுப்பி உள்ளே வாருங்கள் ஏன் வெளியே படுத்துவிட்டீர்கள் என்று கேட்டார். கோவில் திருவிழாவில்  சாதி மத பேதமின்றி எல்லோரும் கலந்திருந்தார்கள். அவர்களோடு கலந்துவிட்டதால் என்னு டைய தூய்மை கெட்டுவிட்டது. எப்படி உள்ளே வருவது. வெந்நீர் கொண்டு வா.குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி மீண் டும் கண் அயர்ந்தார்.

எம்பெருமான் அவன் கனவில் அன்பரே திருவிழாவுக்கு வந்திருந்த எல்லா பக்தர்களும் என்னுடைய அன்பர்கள் தான். அப்படியி ருக்க நீ மட்டும் எப்படி தனிமைப்படுத்தி பார்க்கிறாய், நாளை திருவாரூர் வந்து என்னை தரிசிஎன்று மறைந்தார். எம்பெருமா னிடம் தன்னை மன்னிக்கும் படி வேண்டி எழுந்து அமர்ந்தார் நமிநந்தி அடிகள்.மனைவி வெந்நீர் வைத்துவிட்டேன் குளிக்க வாருங்கள் என்று சொன்னதும் நடந்ததை சொல்லி குளிக்காமல் உள்ளே சென்று உறங்கினார். இதன் மூலம் இறைவன் தனக்கு எல்லா குலமும் ஒன்று என்றும் சாதி சமயம் பார்ப்பது தவறு என்பதையும் உணர்த்தினார்.

மறுநாள் குளித்து வெண்ணீறு தரித்து திருவாரூர் எம்பெருமானைச் சந்திக்க சென்றார்.அந்நகருக்குள் சென்றதும் அங்கிருந்த வர்கள் எல்லாமே திருவெண்ணீறு மேனியோடு சிவகண உருவத்தில் பேரொழி பிளம்பாக இவர் கண்ணுக்கு தெரிந்தார்கள். மகிழ்ச்சியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். அதன்பின்பு அனைவரும் சிவசொரூப தோற்றம் மாறி பழைய உருவத்துக்கு  மாறினார்கள். அதையும் கண்ட நமிநந்திஅடிகள் எம்பெருமானிடம் மன்னிப்பு வேண்டியபடி திருக்கோயிலை அடைந்தார்.
எம்பெருமானே அடியேன் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்து மன்னித்து அருளவேண்டும் என்று வேண்டினார். எம் பெருமானின் அன்பில் கட்டுண்ட நமிநந்திஅடிகள் அதன் பின்பு அவரை விட்டும் திருவாரூரை விட்டு செல்லவும் மனமின்றி அங்கேயே தங்கி சிவத்தொண்டு ஆற்ற உளம்கொண்டார். தியாகேசப்பெருமானின் திருவடியில் தங்கி அங்கேயே வாழும் காலத்தைக் கடக்க உறுதி கொண்டார்.

மனைவியுடன் ஏமப்பேறூரிலிருந்து திருவாரூருக்கு வந்து வசிக்கலானார்.தியாகேசப்பெருமானுக்கு திருத்தொண்டு புரிந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தார். திருவாரூரில் வாழ்ந்த நமிநந்தி அடிகள் இறுதியில் எம்பெருமானின் நிழலை அடைந்து பேரின்பம் கொண்டார்.


சிவாலயங்களில் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் நமி நந்திஅடிகள் குருபூஜை கொண்டாடப்படுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment