Tuesday, 30 July 2019

வீரவநல்லூரில் வீற்றிருக்கிறார் பூமாதேவிக்கு வரம் அருளிய பூமிநாதர்.!!

இந்திரன், பிரம்மன், கண்ணன் வழிபட்ட திருத்தலம்


நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த பூமிநாதசுவாமி திருக்கோயில். இக்கோயிலின் புராண வரலாறு மிகவும் சிறப்பு பெற்தாகும். என்றும் 16 வயது வரம் பெற்ற மார்க்கண்டேயனுக்காக இறைவன் எமனை உதைத்தபோது, எமன் ஒரு கொடியாக மாறி இந்த கோயிலுக்கு வந்து செயலற்று கிடந்தான். எமனின் தொழில் தடை பட்டதால் பூமியில் உயிர்களின் தொகை அதிகரித்தது. பூமியின் பாரம் அதிகமானது. பாரம் தாங்காமல் பூமாதேவி இக்கோயிலுக்கு வந்து கடவுளை பூஜித்து வந்ததன் விளைவாக கடவுள் மனமிறங்கி எமனை உயிர்பித்து வரம் அருளினார்.
பூமித்தாய் வணங்கியதால் இக்கோயிலில் வீற்றிருக்கும் கடவுள் பூமிநாதராக பக்தர்களால் அழைக்கப்படுகிறார். மேலும் இந்திரன், இந்திரனின் அமைச்சர் விசுமுகன், பிரம்மன், கண்ணன், விருகன், கங்கை ஆகியோரும் இத்தலத்தில் வழிபட்டு பேறுபெற்றுள்ளதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு மேலும் ஒரு வரலாற்று சிறப்பும் உள்ளது.

பாண்டிய மன்னன் அதிவீரவழுதி மாறன் என்பவனை, வகுளத்தாமன் என்ற மன்னன் போர்புரிந்து தோற்கடித்தார். இதன் காரணமாக நாடு நகரத்தை இழந்த அதிவீரமாறன் தென்திசை நோக்கி கால்போன போக்கில் வந்தபோது, இக்கோயிலில் லிங்கவடிவில் கடவுளைக் கண்டான். கண்டதும், கண்ணீர் அருவியாக பொழிய அழுது புலம்பி, தன் அவலநிலையை கடவுளிடம் முறையிட்டு வழிபட்டான். அப்போது கடவுள் அவன் மீது இரக்கம் கொண்டு அசரீரியாக, அன்பனே கலங்க வேண்டாம். நீ உன் எஞ்சிய சிறு படையுடன் சென்று பகைவனை எதிர்கொண்டு போரிடு. எனது அருளால் நீ வெற்றி காண்பாய். பின்னர் இக்கோயிலுக்கு வந்து எமக்கு ஏற்ற திருப்பணி செய்து வழிபடுவாயாக என்று தருவாய் மலர்ந்தருளியது. அதன்படி மன்னன் எஞ்சிய சிறுபடையை திரட்டி பகை மன்னனை வென்று தனக்குரிய நாடு நகரங்களை மீண்டும் பெற்றான்.

பின்னர் இக்கோயிலுக்கு வந்து இறைவனுக்கு ஆகம முறைப்படி பூஜைகள் செய்து வழிபட்டு வந்தான். இக்கோயிலில் 6 கோல பூஜைகள் தினமும் நடக்கிறது. காலை 9 மணி முதல் 10.15 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணிவரையிலும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் இக்கோயிலில் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. இதுபோல் மார்கழி மாத திருவாதிரை விழா 10 நாட்கள் நடக்கிறது.நெல்லையில் இருந்து மேற்கே அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் 28 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ளது. ரயில் பயண வசதியும் உள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment