பெற்ற பாசம் கண்ணை மறைத்துவிட்டது என்று சொல்வோம். ஆனால் இங்கு பரம்பொருளான எம்பெருமான் மீது வைத்த பாசம் பெற்ற பிள் ளையை பலி கொடுக்கவும் தயாராகிவிட்டது. இத்தகைய அன்பை இறைவன் மீது வைத்திருந்தவர் சிறுத்தொண்ட நாயனார்.
காவிரி ஆறு பாயும் சோழநாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் சாலியர் மரபில் அவதரித்தார்.பெற்றோர்கள் இவருக்கு இட்ட பெயர் பரஞ்ஜோதி. இவர் நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாக பணிபுரிந்தார். வேதங்களில் வல்லவரான இவர், போர் புரிவதிலும் தீரமாக செயல் பட் டார். சிவபெருமானிடம் அன்பு கொண்டிருந்த இவர் அடியார்களுக்கு தொண்டு செய்வதிலும் முதன்மையானவராக இருந்துவந்தார்.
எதிரி நாட்டு படைகளோடு போர் புரிந்து அவர்களை வீழ்த்தும் போதெல்லாம் இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. எதிரி நாட்டை தோற் கடித்து அங்கிருக்கும் செல்வ வளத்தை அடியோடு புரட்டி எடுத்து வந்து தம் மன்னனிடம் சேர்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இவரது ஆற்றல் மிக்க பணி அரசருக்கு இவர் மீது மிகுந்த ஆச்சரியத்தையும் மதிப்பையும் தேடிக்கொடுத்தது. பரஞ்சோதியார் மறுபுறம் சிவத்தொண்டிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.
சிவத்தொண்டில் பரஞ்சோதியாரின் ஈடுபாடு குறித்து அமைச்சர்கள் மன்னனிடம் சிலாகித்து பேசினார்கள். சிவனடியார்களுக்கு தொண்டு செய்யும் அடியாரை போருக்கு அனுப்பி பெரும் பாவம் செய்துவிட்டேனே என்று வருந்திய நரசிம்ம பல்லவர் உடனடியாக பரஞ்சோதியை அழைத்து சிவத்தொண்டு செய்து வரும் சிவனடியார்களான உங்களை கொலை செய்ய வைக்கும் பணியில் ஈடுபட வைத்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.
நானாக இப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்டேன் மன்னா அதனால் இது தவறு என்று உணர வேண்டாம். இல்லை பரஞ்சோதி நீ ஆயிரம் சமாதா ன ம் சொன்னாலும் என்னால் ஏற்க இயல வில்லை. இனி உன் மனம் போல் சிவத்தொண்டு புரிவதில் ஈடுபடு என்று கூறி அவருக்கும் நிலமும், செல்வமும், ஆநிரைகளையும் பரிசளித்தார். சிவத்தொண்டு செய்வதற்கு கசக்குமா என்ன பரஞ்சோதியாரும் மன்னரிடம் இருந்து செல்வக் குவி யலை பெற்று தமது ஊருக்கு திரும்பினார்.
தனது மனைவியுடன் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து மகிழ்ந்துவந்தார் பரஞ்சோதியார். இவர்களது அன்புக்கு அடையாளமாக ஆண்மகன் பிறந்தான்.அவனுக்கு சீராளன் என்னும் பெயரை வைத்து வளர்த்து வந்தார்கள். இருவரும் சிவனடியார்களுக்கு அமுது அளித்த பிறகே உணவ ருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். சிவனடியார்கள் முன்பு தன்னையும் சிறுவனாக பாவித்து அவர்களுக்கு பணி விடை செய்து மகிழ்ந் ததால் பரஞ்சோதி சிறுத்தொண்டர் என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
சிவத்தொண்டில் தன்னையே தாழ்த்திக்கொண்ட சிறுத்தொண்டரின் பக்தியை உலகம் உணர வேண்டாமா என்று நினைத்தார் சிவபெருமான். ஒரு நாள் சிவனடியார்கள் ஒருவரும் அமுதுண்ண வராததால் சிறுத்தொண்டரும், அவர் மனைவியும் கவலையோடு காத்திருந்தார்கள். ஒருவரும் வராததால் சிறுத்தொண்டர் நான் போய் சிவனடியார்களை அழைத்து வருகிறேன் என்று சொல்லி கிளம்பினார். அச்சமயம் ஈசனே பைரவ அடியார் வடிவமேந்தி திருச்செங்கட்டாங்குடி ஊருக்கு வந்தார்.
சிறுத்தொண்ட நாயனாரின் வீட்டுக்கு வந்து அமுது வேண்டினார். மகிழ்ந்த சிறுதொண்டரது மனைவி அடியாரை அமுதுக்கு அழைத்தார்.தாங்கள் உள்ளே வந்து அமருங்கள் என்று கூறினாள். சரி நான் இங்கிருக்கும் அத்தி மரத்தின் கீழ் இளைப்பாறுகிறேன். அவர் வந்தால் என்னை பார்க்க சொல் என்றார்.
வெளியில் சென்று திரும்பிய சிறுத்தொண்டர் வீட்டுக்கு வந்து அடியாரை எங்கும் காணவில்லை என்று கவலை கொண்டார். மனைவி மகிழ்வு டன் அடியார் வந்ததயும் அவர் அத்திமரத்தில் காத்திருப்பதாகவும் சொல்ல விரைந்து ஓடினார்.
சிவனிடம் மிகுந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்த சிறுத்தொண்ட நாயனார் தினமும் சிவனடியார்களுக்கு அமுது படைக்காமல் உண்பதில்லை. ஒரு நாள் அடியார்கள் யாரும் தேடிவராத நிலையில் அடியார்களைத் தேடி இவரே சென்றும் காணமுடியாமல் வெறுமையுடன் திரும்பினார்.
மனைவி மகிழ்வுடன் அடியார் வந்ததயும் அவர் அத்திமரத்தில் காத்திருப்பதாகவும் சொல்ல அடியாரிடம் விரைந்து ஓடினார் சிறுத்தொண்ட நாயனார்.
அருகில் சென்று ஐயனே என்று அழைத்தார் கண்விழித்த பைரவ அடியார் நீர்தான் சிறுதொண்டரா என்று வினவினார். அடியேனை எம்பெருமா னின் அடியார்கள் அப்படித்தான் அழைப்பார்கள் ஐயா என்று தன்னடக்கத்தோடு பதிலுறுத்தார் சிறுத்தொண்டர்.
இன்று யாரையும் காண இயலவில்லையே என்று வருந்திய எமக்கு தங்களது வருகை மிதமிஞ்சிய மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் புன்னகையு டன் கூறியவர், தங்களது திருப்பாதங்கள் எமது இல்லத்தில் படவேண்டும் தங்களுக்கு அமுது அளித்து மகிழ்ந்திட நாங்கள் காத்திருக்கிறோம் என் றார். எனக்கு அமுது அளிக்க உன்னால் முடியாது. உன்னை காணவே இங்கு வந்தோம் என்றார் பைரவ அடியார்.
அப்படி சொல்லாதீர்கள் ஐயனே நீங்கள் வேண்டுவது யாதாயினும் அமுது படைத்து அளிக்க காத்திருக்கிறோம். அதனால் நீங்கள் வேண்டுவன என்ன என்று கூறுங்கள் என்றார் சிறுத்தொண்டர். நான் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை பசுவைக் கொன்று உண்பேன். இன்று தான் அந்த நாள். ஆனால் உன்னால் அமுதளிக்க முடியாது என்றார்.
என்னிடம் ஆநிரைகள் அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு வேண்டியது எது என்று கூறினால் நான் விரைந்து சென்று அமுது படைக்கிறேன் என் றார். பைரவர் சிரித்தார். நான் உண்ணுவது நரப்பசு. ஐந்து வயதுக்கு குறையாமல் மிகாமல் அங்கத்தில் ஊனமில்லாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல தாய் குழந்தையை அழுத்தி பிடிக்க தந்தை அரிந்து பிழையில்லாமல் செய்த உணவை மட்டும் தான் யாம் உண்போம் என்றார் சிவனடி யார் வேடத்தில் வந்த சிவபெருமான். இதுவும் எனக்கு சிரமமல்ல. விரைவில் அமுது படைக்கிறேன் என்று சிறுத்தொண்டர் கூறி சென்றார்.
எதிர்பட்ட மனைவியிடம் நடந்ததைக் கூறினார். அவரும் யோசித்தார். எவ்வளவு பொன், பொருளை கொட்டி கொடுத்தாலும் பிறந்த பிள்ளையை அவர்களே அரிந்து அமுது படைக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதனால் நம் பிள்ளை சீராளனையே கறியமுது செய்து சிவனடியாரை மகிழ்விப் போம் என்றார் சிறுத்தொண்டர். நங்கையாரும் மகிழ்ந்து சம்மதித்தார்.
சிறுத்தொண்ட நாயனர் பாடசாலைக்கு சென்று சீராளா என்று அழைக்க கொஞ்சும் சலங்கை சலசலக்க மணியாய் நடந்துவந்தான் அழகு செல்வன் சீராளன். அவனை தூக்கி வைத்தப்படி வீட்டுக்கு வந்தார் சிறுத்தொண்டர்.வீட்டுக்கு வந்ததும் சீராளனைக் குளிப்பாட்டி தயார் நிலையில் கணவரி டம் தந்தார். பிறகு பிள்ளையின் இரண்டு கால்களையும் இறுக பிடித்துக்கொண்டார். பரமனின் அடியார்க்கு செய்தால் பரமனுக்கே செய்தது போல் ஆயிற்றே. அதனால் பரமனின் வைத்திருந்த அன்பில் எவ்வித உறுத்தலுமின்றி பிள்ளையின் தலையை அரிந்தார் சிறுத்தொண்டர்.
பிள்ளையின் தலைக்கறியை அடியார்க்கு ஆகாது என்று தனியாக வைத்து பிற பாகங்களைச் சமைத்து அமுது தயாராக இருப்பதாகவும் அடி யாரை அழைக்க வேண்டும் என்றும் நங்கையார் சிறுத்தொண்டரை அழைத்தார். சிறுத்தொண்டரும் விரைந்து சென்று அடியாரை அழைத்து வந்தார்.தாமதத்திற்கு மன்னிக்கவும் என்று சொல்லியபடி வீட்டுக்குள் வந்த பைரவ அடியாரின் பாதங்களைக் கழுவினார்.அவருக்கு பூஜை செய்து பிறகு அமுது செய்ய வேண்டும் என்று வேண்டினார்.
பைரவ அடியார் யாம் கூறியது போல் தானே சமைத்திருக்கிறீர்கள் என்றார். ஆமாம் தங்களுக்கு ஆகாது என்று தலைக்கறியை மட்டும் தவிர்த்து விட்டோம் என்றார் பதிவிரதையார். அதையும் நான் உண்பேன் எடுத்து வாருங்கள் என்றார்.நங்கையார் திகைக்கும் போது அதையும் நான் தயார் செய்துவிட்டேன் என்று அவரிடமிருந்த சந்தனத்தாதியார் கொண்டு வந்து வைத்தார்.
அடியாருக்கு அமுது படைப்பதில் எவ்வித குறையும் இல்லை என்று மகிழ்ந்த நங்கையார் தலைக்கறியைப் பரிமாறினார். சிவனடியாருடன் தான் நான் உண்பது என்றார் பைரவ அடியார். வெளியில் தேடிய சிறுத்தொண்டர் அங்கனம் யாரும் இல்லை என்று சொல்லவே உம்மை விட அடியார் வேறு யார் நீரும் என்னுடன் அமுது உட்கொள்ள வேண்டும் உமது மைந்தனும் வந்தால் தான் நாம் அமுது உண்பேன் என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
என்ன செய்வது என்று திகைத்த இருவரும் வாயிலில் நின்று சீராளா! சீராளா! அமுது படைக்க சிவனடியார் அழைக்கிறார் என்று உரக்க அழைத் தார்கள். அவர்கள் எதிரில் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியுடன் ஓடிவந்தான் சீராளன். அடியாருக்கு அமுது படைக்கலாம் என்று இருவரும் மகிழ்ந்து வீட்டுக்குள் செல்ல அடியாரைக் காணவில்லை.
ஐயோ அடியாரைக் காணவில்லையே என்று அதிர்ந்து திரும்பியவர் கண்களுக்கு கறி அமுதும் இல்லை என்பது புரிந்தது. என்ன மாயம் என்று வீட் டுக்கு வெளியே வந்து பார்த்தார்.எம்பெருமான் அம்மையோடு காட்சி தந்தார். உமது தொண்டை உலகறியவே யாம் இப்படி செய்தோம் என்ற எம் பெருமான் அவர்களை திருக்கயிலையில் தம்முடன் இருக்க ஆசிர்வதித்தார்.
சிவாலயங்களில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்று குருபூஜை கொண்டாடப்படுகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment