Thursday, 27 June 2019

பிரம்மன் படைத்த காஞ்சி பெருநகரம்.!!

படைப்புத் தொழில் புரிந்து வந்த பிரம்மா, வழக்கம் போல் தியானம் மேற்கொண்ட போது அவர் மனது ஒருமுகப்படவில்லை. மாறாக பலவாறு சிந்தனைகளால் சிதறடிக்கப்பட்டது அவரது மனம். அது வேறொன்றும் இல்லை. காத்தல் தொழில் புரிந்து வரும் பகவான் மகாவிஷ்ணுவை நேரே உருவாய் காண வேண்டும் என்ற ஆவல். அதுவே அவரது மனம். ஒரு நிலையாகததற்கு காரணம்.பிரம்மன் ஆசை கொண்டதை அறிந்த அனந்தன், அசரீரியாக பேசினார், “பிரம்மா! உனக்கேன் இந்த தருணத்தில் இந்த எண்ணம் உருவானது.” என்றார்.


“தாமோதரா, தங்களை நேரில் காணவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்.’’ என்றார். ‘‘சரி உன் எண்ணப்படியே ஆகட்டும் என்றுரைத்த சதுர்புஜன், “நீ, ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் அனந்தனை நேரில் காண முடியும்’’ என்றார்.திகைத்து நின்ற திசை முகன் திருமாலிடம் ‘‘ஒரு அஸ்வமேத யாகத்தைச் செய்து முடிப்பதே பெரும் காரியமாகுமே, எவ்விதம் என்னால் ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்ய முடியும். என்னால் மட்டுமல்ல எவராலும் அது இயலாத காரியமாயிற்றே’’ என்று கூறினார்.

அதற்கு அனிருத்தன், “பிரம்மனே! பூமியில் சத்திய விரத க்ஷேத்திரம் என்றொரு இடம் உள்ளது. அங்கு ஒரு முறை எது செய்தாலும் அது ஆயிரம் முறை செய்ததற்குச் சமமாகும். அங்கே ஒரு பொற்காசு தானம் செய்தால், ஆயிரம் பொற்காசுகள் தானம் செய்ததற்கு நிகராகும். அவ்வாறே அங்கு ஒரு பொய் சொன்னாலும் ஆயிரம் பொய்கள் சொன்னதற்கு நிகராகும். அத்தகைய சத்தியவிரத க்ஷேத்திரத்திற்குச் சென்று நீங்கள் ஓர் அஸ்வமேத யாகத்தைச் செய்தால், அது ஆயிரம் அஸ்வமேத யாகங்களுக்குச் சமமாகும். உன் எண்ணப்படி அனந்தனை நேரில் காணலாம்” என்று கூறினார்.

நான், உம்மை காண தொடங்கும் யாகம் எந்த இடையூறும் இன்றி சிறப்புற அமைய பகவானே எமக்கு அருள்புரிய வேண்டும் என்று வேண்டினார். பின்னர் சத்தியவிரத க்ஷேத்திரத்தை நோக்கிச் சென்றார் பிரம்மா.சத்தியவிரத க்ஷேத்திரம் வந்த பிரம்மன், வேள்விச் சாலையையும் உத்திரவேதியையும் அமைத்தான். தனது அன்றாட தேவைகளுக்காகவும், தான் வந்து போனதை நினைவூட்டும் விதமாகவும் இருக்க, சத்தியவிரத க்ஷேத்திரத்தில் ஓர் அழகான நகரையும் உருவாக்கினான். காஞ்சிபுரம் -= கா+அஞ்சி+புரம். கா என்றால் பிரம்மன். அஞ்சித்தல் என்றால் பூஜித்தல், புரம் நகரம் என்று பொருள். பிரம்மன் பூஜித்த நகரம் என்பதால் காஞ்சிபுரம் என்று ஆயிற்று...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment