Tuesday, 18 June 2019

சண்டேசுவர நாயனார்-63 நாயன்மார்கள்.!!

சிவனின் மீது பற்றுக்கொண்ட சிவனடியார்களும், சிவனுக்குத் தொண்டு செய்பவர்களும் எந்நேரமும் சிவனைப் பற்றிய எண்ணத்திலேயே இருப் பார்கள். சிவனின்றி ஓர் அணுவும் இயங்காது என்னும் கருத்தை வலுவாகப் பற்றியிருப்பார்கள். சிவனின் நினைப்பில் பூஜை செய்பவர்கள் அச்சம யத்தில் இடையூறு ஏற்படுத்தினாலும் கூட அதை மனதில் ஏற்றாமல் சர்வம் சிவமயம் என்று வாழ்வார்கள். சிவனுக்கு செய்யும் தொண்டில் இடையூறு ஏற்படுத்தினால் கடுங்கோபம் கொண்டு அவர்களைத் தண்டித்து பிறகு பூஜையில் ஈடுபடுவார்கள்.

சிவபூசைக்கு வைத்திருந்த பாற்குடங்களை உதைத்த தமது தந்தையின் காலை வெட்டியவர் சண்டேசுவர நாயனார். சோழர்களுக்கு தலை நகர மாக விளங்கிய சிறப்பு மிக்க தலமான திருச்சேய்ஞலூர் என்னும் ஊரில் பிறந்தார். சோழ அரச மரபினர் முடிசூட்டிக்கொள்ள விரும்பும் ஐந்து முக் கிய தலங்களுள் ஒன்றானது இத்தலம்.

அமரர்களுக்கு தொல்லை கொடுத்த சூரபதுமன் போன்ற அரக்கர்களை வென்று அமரர்களை மீட்டெடுத்த முருகப்பெருமான் அவர்கள் வழிபட காவிரியாற்றின் சிற்றாரான மண்ணியாற்றின் கரையை அடைந்து, அங்கு அழகிய நகரத்தை உருவாக்கி கந்தவேள் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவ வழிபாடு செய்தார். சேய் சிவபூஜை செய்த காரணத்தால் இந்த ஊர் திருச்சேய்ஞலூர் என்னும் பெயரை பெற்றது.
இந்த ஊரில் வாழ்ந்த எச்சதத்தன், பவித்திரா தம்பதியரின் அன்புக்கு பரிசாக பிறந்தவர் விசாரசருமர். இவர் முற்பிறவிலேயே வேதாகாமங்களை கற்று அறிந்தவர் என்பதால் இப்பிறவியிலும் வேதாகாமங்களில் ஈடுகொண்டு அவற்றில் திறமையும் பெற்று விளங்கினார். இவரது சிந்தையில் எப்போதும் சிவனுடைய பொற்பாதம் மட்டுமே இருந்தது. அவரது குலப்படி அவருக்கு 7 வயதாகும் போது அவரது பெற்றோர்கள் உபநயனம் செய்து மகிழ்ந்தார்கள். வேதம் ஓதுவித்தார்கள். விசாரசருமர் அவரது குருவே வியக்கும்படி சிறந்த மாணவனாக தேர்ச்சி பெற்றார்.

ஒருமுறை விசாரசருமர் மண்ணியாற்றின் கரையில் போய்க்கொண்டிருந்த போது ஆநிரைகளை மேய்த்துக்கொண்டிருந்த  சிறுவன் ஒருவனை அவனுடைய பசு மாடு ஒன்று இலேசாக முட்ட அதில் கோபமுற்ற அச்சிறுவன்  கொம்பினால் அந்தப் பசுவை பலம் கொண்ட மட்டும் அடித்துக் கொண்டே இருந்தான். இதைக் கண்ட விசாரசருமருக்கு மனம் பொறுக்கவில்லை.
அச்சிறுவனிடம் சென்ற விசாரசருமர் அவனிடம் என்ன பாவம் செய்துவிட்டாய்? உலகில் இருக்கும் ஜீவராசிகளில் உயர்ந்தது ஆவினங்கள் தான். சிவபெருமானை நினைத்து நெற்றியில் தரிக்கும் விபூதியை நாம் ஆவினங்களிடம் இருந்து தான் பெறுகிறோம். எம்பெருமானின் அபிஷேகத்தில் பஞ்சகவ்யம் அளிப்பதும் ஆவினங்கள் தான். எம்பெருமானும் தேவியாரும் எழுந்தருளும் காமதேனு ஆவினங்கள்  குலமாயிற்றே. பால், தயிர், நெய் என்று மனிதர்களுக்கு அள்ளித்தருவதும் இவைதானே. இவ்வளவு ஏன் பசுக்களின் அங்கங்களில் முனிவர்களும், தேவர்களும் வசிப்பதாக கூறுகிறார்களே அவற்றைப் போற்றி பாதுக்காக்காமல் இப்படியொரு காரியத்தை செய்யலாமா? நான் வேண்டுமானால் பசுக்களை மேய்க்கும் பொறுப்பை பார்த்துக்கொள்கிறேனே என்று அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

வீட்டிலும்  மறையவர்களிடம் தானே பசுக்களை மேய்ப்பதாக சொல்லி அவர்களது  ஒப்புதலையும் பெற்றுவிட்டார். தினமும் பசுக்களை ஓட்டிக் கொண்டு பசுமையான மண்ணியாற்றின் கரையில் ஒதுங்கிவிடுவார். பசுக்களுக்கு புற்களும், நல்ல இடத்தில் நீர் அருந்தவும் செய்விப்பார். பசுக் களை தன்னுடைய குழந்தைப்போல் கண்ணுங் கருத்துமாக பார்த்துக்கொண்டார்.
ஆவினங்களுக்கு விராசசருமரின் அன்பு புரிந்துவிட்டது போல். அவருடன் அன்பாக பழகின. பசுக்களை மேயவிட்டு மரநிழலில் தங்கியிருந்த விசா ரசருமருக்கு நிழல் இல்லாத காலங்களில் பசுக்கள் ஒன்று கூடி நிழலை தந்து பாதுகாத்தன. இவரது பராமரிப்பில் பசுக்கள் நல்ல வனப்போடு அதிக பால்தரும் சிறந்த ஆவினங்களாக மாறின. விசாரசருமரை அவ்வப்போது நாவால் நக்கி தங்கள் அன்பை மெய்ப்படுத்தின.

விசாரசருமரைக் கண்டதும் பசுக்களின் தாய்மடி பால் சுரப்பதைக் கண்டு இதை பரமனுக்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. 

விசாரசருமர் பசுக்களை மேய்க்க தொடங்கியதும் பசுக்கள் அவர் மீது அன்பை சொறியும் வகையில் அவரைக் கண்டதும் தானாகவே பாலை சுரந் தது.  ஒருநாள் மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது பசு பால் சொறிந்ததும் இவருக்கு சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்தால் என்ன என்று தோன்றியது. அவர் அமர்ந்திருக்கும் மரநிழலிலேயே  சிவலிங்கம் அமைக்க விரும்பினார்.

மண்ணியாற்றங்கரை ஓரத்திலிருந்து நல்ல மணலைக் கொண்டு வந்து லிங்கம் ஒன்றை வடித்தார். மண்ணாலே மதிற்சுவர்களை எழுப்பி சிறு கோபுரங்களுடன் கூடிய சிறிய ஆலயத்தை அழகுற வடிவமைத்தார். அதை மேலும் அழகாக்கும் வகையில் நறுமண செடிகளையும், கொடிகளை யும் அழகுக்காக வைத்தார். அக்கோயிலும் சிவலிங்கமும் அவர் மனத்தில் சொல்லாணா ஆனந்தத்தை உண்டுபண்ணியது.

இன்னும் என்ன சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதுதான் என்று நினைத்த விசாரசருமர், பரமனுக்கு பூக்களைப் பறித்துவந்தார். பசுக்கள் கறந்த பாலை சேமித்து வேதங்கள் ஓதி லிங்கத்துக்கு பூஜை செய்தார். அனுதினமும் மண்ணையாற்றில் சிவனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வந்தது.
சேய்ஞலூர் பரமனின் பாதத்தை விசாரசருமனின் மண்ணயாற்று லிங்க அபிஷேகம் ஈர்த்தது. பக்தனின் அன்புக்கு அடிபணிந்து மண்ணையாற்று லிங்கத்திலும் குடிபுகுந்தார் சிவனார்.  நாளொரு மேனியுமாய் பசுக்கள் வளமோடு வளர்ந்தது. முன்னை விட பால் சுரப்பையும் அதிகரிக்க செய் தது. இதனால் பசுக்களுக்கு சொந்தக்காரர்கள் மகிழ்ந்தார்கள்.

ஒருநாள் விசாரசருமர் லிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்தவதைக் கண்ட அந்த ஊரிலிருந்த ஒருவன், நேராக வந்து என்ன செய்கிறாய் பாலை யெல்லாம் வீணாக்குகிறாயே என்று கேட்டான். ஆனால் பக்தியில் திளைத்திருந்த விசாசருமருக்கு எதுவும் காதில் விழவில்லை. அவர் எதுவும் பேசாததால் ஆத்திரமடைந்த அவன் பசுவின் உரிமையாளர்களிடம் சென்று நடந்ததைப் பற்றி கூறினான். 

அவன் சொன்னதைக் கேட்டதும் அனைவருக்கும் ஆத்திரம் வந்தது. விசாரசருமனின் தந்தை எச்சதத்தனை அணுகி, மகன் மடத்தனம் செய்வதாக கூறினார்கள். எச்சதத்தனும் மகனை கண்டிப்பதாக கூறினார். மறுநாள் மாடு மேய்க்க சென்ற மகன் அறியாதவாறு எச்சதத்தன் பின் தொடர்ந்தார். மண்ணையாற்றை அடைந்ததும் மரத்தின் மறைவில் மறைந்துகொண்டார்.

விசாரசருமர் வழக்கம் போல் நறுமணமிக்க மலர்களைக் கொய்து மண்ணால்  லிங்கத்தை செய்து மலர் சூடி குடங்களில் பாலை நிரப்பிக் கொண் டார். சிவபக்தியில் ஈடுபட்டார். மகனின் வழிபாட்டு முறையைக் கவனித்துக்கொண்டிருந்த எச்சதத்தனுக்கு கோபம் தலைக்கேறியது. ஆத்திரத் தால் அறிவை இழந்த எச்சதத்தன் மரத்தின் குச்சியை ஒடித்து சென்று விராசருமரின் முதுகை பதம் பார்த்தார். ஆனால் பக்தியில் இருந்த விராசர் எதையும் உணரும் நிலையில் இல்லை.
எச்சதத்தன் வசவு வார்த்தைகளும், அடியும் அவர் மனதைப் படவேயில்லை என்பதை உணர்ந்து மேலும் விராசர் மீது கோபம் அதிகமாகியது. அபி ஷேகப் பாலின் மீது தன் கவனத்தை திருப்பிய எச்சதத்தன் அந்தப் பாலை பலம் கொண்ட மட்டும் எட்டி உதைத்தார். அதுவரை பக்தியில் இருந்த விசாரருக்கு தந்தையின் செயல் கடுங்கோபத்தை வரவழைத்தது. அருகே கிடந்த கோலை எடுத்து பாலை தள்ளிய கால்களின் மீது வீசினார். கோல்கள் கழுவாக மாறி எச்சதத்தனின் இரண்டு கால்களையும் வெட்டியது. எச்சதத்தன் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.

நடந்ததை எதுவும் அறியாமல் மீண்டும் லிங்கத்தைப் பூஜிப்பதில் கவனம் செலுத்தினார் விசாரசருமர். அவரது பக்தியில் கட்டுண்ட சிவபெருமான் உமையாளோடு காட்சிதந்து விசாரசருமரைக்  கட்டியணைத்தார். எம்மீது கொண்டிருந்த பக்தியால் தந்தையையே வெட்டி சாய்த்த உமக்கு இனி நானே தந்தை, நானே தாய் என்றார். அவரது அரவணைப்பில் பெருமகிழ்வு அடைந்தார் விசாரசருமர்.

சிவபெருமான், விசாரசருமருக்கு அடியார்களுக்கெல்லாம் தலைவனாகும் பேறை அளித்தார். சண்டி சபதம் என்னும் பதவியை அளித்தார். இனி யாம் சூடுவன, உடுப்பன, உண்ணுவன அனைத்து பரிகலமும் உனக்கே என்று அருள் வழங்கி தம் திருமுடியிலிருந்த கொன்றை மலரை விசார சருமருக்கு தம் திருக்கைகளாலேயே அணிவித்தார். சிவனது திருவாயால் சண்டிபதம் பெற்ற விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக் கப்பட்டார். சிவாலயங்களில் தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று இவருக்கு குருபூஜை செய்யப்படுகிறது...
 
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment