ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்கள் சிறப்பு பெற்ற கோவில்களாக உள்ளது.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்கள் சிறப்பு பெற்ற கோவில்களாக உள்ளது. பிரப்ரோடு பெரிய மாரியம்மன் கோவில், காரைவாய்க்கால் சின்ன மாரியம்மன் கோவில், பெரியார் வீதியில் உள்ள நடு மாரியம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களில் ஒரே நேரத்தில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் கொண்டாடப்படும். குண்டம் இறங்கும் நிகழ்ச்சி காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும், தேரோட்டம் நடு மாரியம்மன் கோவிலிலும் நடைபெறும். பிரப் ரோட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவிழா முக்கியமானதாகும்.
கம்பம் நடப்பட்ட நேரம் முதல் கம்பம் பிடுங்கும்வரை 15 நாட்கள் இடைவெளி இன்றி பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபடுவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். கொங்கு மண்டலம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வந்து இரவு பகல் பாராமல் நீண்ட வரிசையில் காத்து இருந்து கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றுவார்கள். அதுபோல் பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா, ஈரோடு மாநகரையே குலுங்கச்செய்யும் அளவுக்கு பிரமாண்டமாக நடைபெறுகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment