Monday, 29 April 2019

அடுத்த நாழிகை உயிரோடு இருப்போமா?

நடந்ததை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை... ஏனெனில் அதை மாற்றமுடியாதது.  நாளை நடக்கவிருப்பதை பற்றியஎதிர்பார்ப்பும் வேண்டாம்.  அதை முடிவுசெய்யும் உரிமை நம்மிடம் இல்லை.  நடக்கும்இந்த நிமிடம் தான் நிஜம். இதைஉணர்ந்தவர்கள் எல்லோரும் ஞானிகள். பஞ்ச பாண்டவர்களுக்குள் நடந்த ஒரு நிகழ்வு இது.

பஞ்சபாண்டவர்கள் அரண்மனையில் இருந்த போதுயாசகம் கேட்டுஒருவன் வந்திருந்தான். அப்போது தருமர்முக்கியமான பணியில் இருந்தார்.அவருக்கு தர்மம் செய்ய ஆசைஇருந்தாலும் அந்த வேலையை விட்டு வரமுடியவில்லை. அதனால் யாசகம் கேட்டுவந்தவனிடம் ”இப்போது என்னால்முடியாது.. நான் உனக்கு உதவிடவிரும்புகிறேன்.  அதனால் நாளை வா” என்றுதிருப்பி அனுப்பினார்.
யாசகம் கேட்டு வந்தவன் மகிழ்ச்சியோடுஅப்படியே ஆகட்டும் தர்மபிரபு என்றுசொல்லிவிட்டு சென்றான். நடந்தஅத்தனையும் ஒன்றுவிடாமல் தூரத்திலிருந்துபார்த்துக்கொண்டிருந்தான்  பீமன். என்னசெய்யலாம் என்று யோசித்தவன் உடனடியாகஒரு முரசை எடுத்துகொண்டு ஊர் மக்களைநோக்கி ஓடினான். மக்கள் கூட்டமாகஇருக்கும் இடங்களுக்குச் செல்லஆரம்பித்தவன் முரசை கொட்டியபடி ஏதோசொல்ல ஆரம்பித்தான். அது என்னவென்றால்… ”என் சகோதரர் காலத்தைவென்று சாதனை படைத்துவிட்டார்”  என்றுகூறியபடி முரசு கொட்டினான்.
வழக்கமாக அரண்மனை பணியாள்கள்செய்ய வேண்டிய பணியை  பீமனே வந்து செய்வதால் ஊர் முழுக்க பீமன் முரசு கொட்டும் விஷயம் பரவிற்று.  தர்மருக்குசங்கடமாகிவிட்டது. பீமனை அழைத்து ”என்னசெய்கிறாய் பீமா?” என்று கேட் டார். ”எனக்குமகிழ்ச்சியாக இருக்கிறதண்ணா.. நீங்கள்காலத்தை வென்று விட்டீர்களே” என்றான்..அப்போதும் தர்மருக்கு குழப்பமே. ”தெளிவாகசொல்லேன் என்றார்.

பீமன் நிதானமாக விளக்கினான். ”இன்றுயாசகம் கேட்டு ஒருவர் வந்தாரல்லவா,அவரை நீங்கள் நாளைக்கு வரச்சொல்லிஇருக்கிறீர்கள். நீங்கள் நாளை உயிரோடுஇருப்பீர்களா? நீங்கள் உயிரோடுஇருந்தால்  அவர் நாளை உயிரோடு இருப்பாரா? அப்படியே இருந்தாலும்  நாளைஉங்களிடம் உதவி செய்ய பொருள்இருக்குமா? பொருள் இருந்தாலும் அவருக்குகொடுக்கும் மனநிலை இருக்குமா?நாளையும் யாசகம் கேட்கும் மனநிலையில் அவன் இருப்பானா? இருவரும் நாளைசந்திக்க சித்ரகுப்தன் நேரம்கொடுத்திருக்காரா? இதெல்லாமேசாத்தியமாக நடக்கும் என்பதால் நீங்கள்காலத்தை வென்றவராகிவிட்டீர்.. சரிதானே..நான் போய் மக்களிடம் சொல்லவேண்டும் என்றான். இல்லையென்றால்அடுத்த நாழிகை எனக்கு கிடைக்குமோஎன்னவோ” என்று வேகமாக கிளம்பினான்.
தர்மருக்கு தன்னுடைய தவறு புரிந்துவிட்டது. ”தம்பி. பீமா கொஞ்சம் பொறு நான் தவறுபுரிந்துவிட்டேன். நான் யாசகம் கேட்டுவந்தவனிடம் அவ்வாறு சொன்னதுதவறுதான். முக்காலமும் உணர்ந்தஞானியால் தான் இத்தகைய வாக்குறு தியைக் கொடுக்க முடியும்” என்று கூறியதர்மர் உடனடியாக யாசகம் கேட்டு வந்தவனைவரவழைத்து உதவி செய்து அனுப்பினார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? நல்லதைசெய்ய வேண்டும் என்றுநினைப்பதை அக்கணமே செய்துவிடவேண்டும். அடுத்த நாழிகையில் மனம் மாறாது என்பதற்கும், நாம் உயிரோடுஇருப்போம் என்பதற்கும் என்ன உத்திரவாதம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        _என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment