திருமுடி: திருச்சியில் தேன் நிறைந்த பூக்களைத் தன் தலையில் சூடியவள் எனும் பொருள்படும் வகையில் மட்டுவார்குழலி எனும் திருப்பெயரில் அம்பிகை வணங்கப்படுகின்றாள்.
கண்கள்: திருமால்பூரில் அஞ்சனம் எழுதிய கண்களைக் கொண்ட அஞ்சனாட்சியை தரிசிக்கலாம். காஞ்சியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் நிறுவிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்வரும் இந்த அஞ்சனாட்சியின் பீடத்தில் நின்றருள்கிறார்கள்.
வாய், மொழி: வீணையையும் பழிக்கும் நாதக்குரலுடையாளாக வேதாரண்யத்தில் யாழைப்பழித்த மொழியாள் அருள்புரிகிறாள். இதனாலேயே இத்தல சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. குயில் போன்ற குரல் உடையவள் எனும்படி குயில்மொழியம்மையாக திருஇடும்பை மாகாளத்தில் தேவி கோலோச்சுகிறாள்.
புன்னகை: முல்லைப்பூ போன்ற பற்களைக் கொண்ட தவள வெண்ணகை அம்மையை திருப்பாலைத் துறையில் தரிசிக்கலாம்.
தோள்: திருப்பந்தணைநல்லூரில் காம்பனதோளி எனும் திருப்பெயரில் அன்னை அருள்கிறாள்.
மார்பகங்கள்: திருநள்ளாறில் போகமார்த்தபூண் முலையம்மை எனும் பெயரில் அம்பிகையை தரிசிக்கலாம்.
கை: திருவைகாவூர் தலத்தில் வளையல்களைப் பூண்ட வளைக்கைநாயகியாய் பராசக்தி பொலிகின்றாள்.
இடை: வடதிருமுல்லைவாயிலில் கொடி போன்ற இடையைக் கொண்ட கொடியிடைநாயகி தன் தண்ணருளைப் பரப்பிக்கொண்டுள்ளாள்.
திருவடி: திருவாரூர் பரவையுன்மண்டலி தலத்தில் பஞ்சினும் மெல்லிய அடிகளை உடையவள் எனும் பொருள் படும்படி பஞ்சின்மெல்லடியம்மையை தரிசிக்கலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment