ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
எந்த தெய்வத்தின் மூலம் எந்த பலன் கிடைக்க வேண்டுமானாலும் விநாயகரை வணங்கினாலே போதும். அவர் அந்த தெய்வத்திடம் கூறி அருளை பெற்றுத் தருவார்.
இஷ்டதெய்வம் இருந்தாலும், வம்சாவளியாக வரும் குலதேவதையை அவசியம் பூஜிக்க வேண்டும். இதற்கு முன் விநாயகருக்கு “சுக்லாம் பரதரம்’ குட்டிக் கொள்ள வேண்டும்.
செம்பைத் தினமும் கழுவி வெளுப்பாக்குவது போல, மனதில் தினமும் சேரும் அழுக்கையும் பக்தியால் சுத்தம் செய்ய வேண்டும்.
ஆசையை விட்டு மனம் கட்டுப்படும் வரை, ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் பைத்தியமாகத்தான் இருக்கிறான்.
ராமநாமத்தை தாரக மந்திரம் என்கிறோம். “தாரகம்’ என்றால் “பாவங்களைப் பொசுக்குவது’ என்று பொருள்.
நம் துன்பத்தையே பெரிதாக நினைக்கக்கூடாது. அந்த துன்பத்துக்கு மத்தியிலும், நம்மால் உலகத்துக்கு நலம் ஏற்பட வேண்டும் என்ற உணர்வு வேண்டும்.
எந்தக்குற்றமும் செய்யாதவன் பாவமற்றவன். அவன் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment