கூர்ம ஜெயந்தி 17.6.2020
திருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் கூர்மம். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடையும்போது மந்தார மலையை கூர்ம அவதாரம் எடுத்து தாங்கினார் மாலவன். ஸ்ரீரங்கம் தசாவதார சந்நதியில் ஸ்ரீகூர்மநாதரை தரிசிக்கலாம். சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி ஆலயத்திலும் தசாவதார சந்நதியிலும் ஸ்ரீகூர்மநாதரை தரிசிக்கலாம். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து ஸ்ரீகாகுளம் ஊரில் உள்ளது ஸ்ரீகூர்மம். இத்தலத்தில் தாயாருடன் கூர்மநாதர் அருட்பாலிக்கிறார்.
இத்தலம் அமைய காரணம். ஸ்வேதபுரத்து அரசர் ஸ்வேதனின் மனைவி விஷ்ணுப்ரியா திருமாலின் பக்தை. அவள் ஒரு ஏகாதசி திதியன்று பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது ஸ்வேத மன்னன், மனைவியை தாம்பத்யம் வைத்துக் கொள்ள அழைத்தான். அதற்கு அவனது மனைவி தான் விரதம் என்று தெரிந்தும் மன்னன் இப்படி நடந்து கொள்கிறாரே! விரத பங்கம் ஒரு பக்கம்; பதி விருப்பத்தை நிறைவேற்றாத பாவம் ஒரு பக்கம். என்ன செய்வது? ‘மாதவா நீயே கதி’ என்று திருமாலை மானசீகமாகப் பிரார்த்தனை செய்தாள். அப்போது திடீரென தம்பதியிடையே ஒரு நதி பிரவாகமாக ஓடியது.
அதைக் கண்டு திடுக்கிட்ட மன்னன், அப்போதும் தாபம் குறையாமல், ‘‘மாதவா! நான் இந்த ஆற்றைக் கடக்க, என்னைத் தாங்கிச் செல்லும் கூர்மமாகத் தாங்கள் வரவேண்டும்’’ என வேண்டினான். அப்படியே திருமாலும் கூர்மமாக மாறி நதியில் மிதந்து வர, பளிச்சென்று மன்னனுக்கு ஞானம் பிறந்தது. அந்த அவதாரத் திருவுருவிலேயே திருமாலுக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். பெருமாள் மிதந்து வந்த நதி சுருங்கி ஸ்வேத புஷ்கரணியாயிற்று. அத்தலம் ஸ்வேதபுரம் ஸ்ரீகூர்மம் எனப் பெயர் பெற்றது.
ஸ்வேத மன்னனுக்கு அருளிய திருமால், இத்தலத்தில் கூர்மநாயகித் தாயாருடன் கூர்மநாதராக அருள்புரிகிறார். திருமுகத்தில் திருநாமம் வெள்ளித் தகட்டிலும் விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்ராமத்தாலும் அமையப் பெற்று அதிரூப லாவண்யத்தோடு தரிசனமளிக்கிறார். பஞ்சலிங்க ஆத்மஸ்தலம் எனும் பெயரையும் இத்தலம் பெற்றது குறிப்பிடத்தக்கது. பகவான் ராமானுஜர் தமது திக்விஜயத்தின்போது இத்தலம் வந்தார். அங்கு திருமாலே சாளக்ராம வடிவில் ஆமைவடிவில் அருள்வதை உணர்ந்தார்.
உலகோருக்கு இதை அறியவைக்க வேண்டி அந்த ஆலயத்தின் கிழக்கு வாசல் எதிரில் கொடிமரம் அமைந்திருந்த இடத்தினருகில் சென்று நெடுஞ்சாண் கிடையாக வணங்கி ஆலயத்தை வலம் வந்தார். அவர் தெற்குதிசை நோக்கித் திரும்பியபோது கருவறையில் வீற்றிருந்த கூர்மமூர்த்தியும் அத்திசை நோக்கித் திரும்பி நிலைகொண்டது. உடனே கொடிமரமும் மேற்கில் திரும்பி விட்டது. இதைக் கண்டு வியந்த மக்கள் அன்றிலிருந்து கூர்மமூர்த்தியை திருமாலாக ஆராதிக்கத் தொடங்கினர். கி.பி. 1281ல் ராமானுஜர் இத்தலத்தை புனரமைப்புசெய்துள்ளார். கூர்மாவதாரத்திற்கென உலகில் உள்ள ஒரே கோயில் இதுதான். சுவாமி தேசிகன் தமது தசாவதார துதியில் சனி பகவானுடைய கெட்ட பலன்களுக்கான நிவர்த்திக்கு கூர்மமூர்த்தியை துதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்...
ந.பரணிகுமார்
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment