மஹாளய பட்ச காலத்தில், முன்னோர், நம் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு, வீட்டிற்கு திரும்பி வந்து ,முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் அந்த பித்ருக்களுக்கு ,விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில், தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள்.
அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும்.
முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை, இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான், பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து, கங்கையை பூமிக்கு வரவழைத்து ,தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான்.
நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து, முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment