கிருஷ்ண பகவானின் கீதோபதேசத்தின்படி இறையருள் பெற்ற மனிதன் கீழே குறிப்பிட்டுள்ள இலட்சணங்கள் உடையவனாயிருப்பான்.
· இறைவனிடம் திட நம்பிக்கையுடன் ஈடுபட்டுஅச்சமின்றி வாழ்தல்
· மனதில் இறைவனை அடைய வேண்டும்எனும் தீவிர வைராக்கியத்தைக் கொள்வது
· தத்துவ விளக்கத்துடன் இறைவனைஅறிவதற்கு ஒவ்வொரு சூழ்நிலையிலும் சமநிலையில் இருத்தல்
· சாத்வீகமான தானம் செய்தல்
· ஐம்புலன்களையும் சுயகட்டுப்பாட்டில்வைத்திருத்தல்
· தன் கடமைகளை முறையாக செய்து வருதல்
· சாஸ்திரங்களில் சொல்லியிருப்பதைசொந்த வாழ்வில் செயல்படுத்துதல்
· தன் கடமைகளை செய்து வரும் பொழுதுஏற்படும் இன்னல்களை மகிழ்ச்சியுடன்பொறுப்பது
· உடலாலும், உள்ளத்தாலும், வாக்காலும்எளிமையாக வாழ்தல்
· உடல், உள்ளம், வாக்குகளால் எந்தஉயிருக்கும் சிறிதளவும் துன்பம் தராமல்இருத்தல்
· கண்டதையும், கேட்டதையும், அறிந்ததையும்உள்ளபடியே இனிய சொற்களால்சொல்லுதல்
· எவரிடமும், எதனிடமும் குரோதம்கொள்ளாதிருத்தல்
· எல்லாமே ஈஸ்வர ஸ்வரூபம் என்றஉணர்வுடன் பழகுதல்
· உலகியல் ஆசை அபிலாஷைகளை துறப்பது
· அந்தக் கரணத்தில் விருப்பு வெறுப்புகளால்எழும் கொந்தளிப்புகளை அடக்குதல்
· கோள் சொல்லாதிருத்தல்
· எல்லா உயிர்களிடத்தும் இரக்கம், பரிவுகொண்டு பழகுதல்
· உலகியல் பொருட்களில் பேராசைகொள்ளாதிருத்தல்
· மென்மையான இதயம் கொண்டிருத்தல்
· செய்யத்தகாததைச் செய்வதில்வெட்கப்படுதல்
· சபலப்படுதல், அவசரப்படுதல் இரண்டும்இல்லாதிருத்தல்
· உடல், வாக்கு இரண்டிலும் செல் வாக்கும்,பொலிவும் கொண்டிருத்தல்
· எந்த சூழ்நிலையிலும் தைரியமும்பொறுமையும் கொண்டிருத்தல்
· தண்டனை அளிக்கும் திறன் இருந்தாலும்குற்றவாளியின் குற்றத்தை மன்னித்தல்
· உடலை தூய்மையாக வைத்திருத்தல்
· பழிவாங்கும் உணர்ச்சி இல்லாதிருத்தல்
· உயர்வு மனப்பான்மையும் செருக்கும்கொள்ளாதிருத்தல்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment