நம் வீட்டில் விளக்கேற்றி வழிபடும் போது, சில முக்கிய விதிமுறைகளும், மறந்தும் கூட செய்யக் கூடாத சில தவறுகளும் உள்ளன. அவற்றை பார்க்கலாம்
மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலம் நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும். விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது. நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தையும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால் தேவியின் அருளும் மந்திர சக்தியும் கிடைக்கும்.
கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது. வீட்டின் நிலைகளில் குங்குமம் மஞ்சள் வைத்தால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டுக்குள் வராது. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள்ளும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள்ளும் தீபம் ஏற்றுவதால் நிறைவான வளமும் பலன்களும் கிடைக்கும். எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் பயன்படுத்தக் கூடாது.
ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட வினைப்பயனும் வியாதியும் நெருங்காது. சனிபகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது. தெய்வப்படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.
வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் தவறு. அமர்ந்தபடி தான் தொழ வேண்டும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment