Monday, 13 July 2020

நல்ல காரியத்தை தொடங்குவதற்கு 21 நாட்களுக்கு முன்பு விநாயகரை வழிபாடு செய்தால் வெற்றி நிச்சயம்.!!

பொதுவாகவே முழுமுதற்கடவுளான பிள்ளையார் என்றால், எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். ஏனென்றால் மற்ற தெய்வங்களை போன்று இவருக்கு கடுமையான விரதங்கள் எதுவுமே வேண்டாம். மூன்று தோப்புக்கரணமும், 3 பிள்ளையார் கொட்டும் போட்டாலே மனமகிழ்ந்து வரத்தினை வாரி வழங்கி விடுவார். தும்பிக்கை முகத்தானை, நம்பிக்கையோடு வழிபட்டால் கைவிட மாட்டார் என்பது உண்மையான ஒன்று. ஒரே ஒரு கொழுக்கட்டையை நைவேத்தியமாக படைத்தால் போதும், கொழுக்கட்டைகுள் வைக்கும் பூரணத்தை போல, நம்முடைய வாழ்க்கை இனிமையாக மாறிவிடும்.

இனிப்பு பண்டங்களை வாங்கி கொடுத்தால் ஒரு குழந்தை, எப்படி சந்தோஷம் அடையுமோ, அப்படித்தான் விநாயகரும் குழந்தை மனம் படைத்தவராக இருக்கிறார். இவரை நம்பிக்கையோடு வழிபட்டால் காரியத்தடை நீங்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையோடு சேர்த்து 21 நாட்கள் இந்த பரிகாரத்தையும் விநாயகருக்கு செய்தால், நீங்கள் தொடங்கும் காரியத்தை இன்னும் தைரியமாகவே தொடங்கலாம். அது என்ன பரிகாரம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முதலில் பிள்ளையாருக்கு பிடித்தமான எண்ணிக்கை என்னவென்றால் அது 21.

நீங்கள் பிள்ளையாருக்காக செய்யப்படும் எந்த ஒரு பிரார்த்தனையாக இருந்தாலும், நெய்வேதியமாக இருந்தாலும், 21 என்ற கணக்கில் செய்தால் அதனால் கிடைக்கும் பலன் அதிகமாகவே இருக்கும். நீங்கள் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை தொடங்க வேண்டுமென்றால் 21 நாட்களுக்கு முன்பாகவே, ஏதாவது ஒரு விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை தொடங்கி விடுங்கள். விநாயகர் கோவிலுக்கு செல்லும் போது அருகம்புல்லை கட்டாயம் வாங்கிக்கொள்ள வேண்டும். அருகம்புல்லை யானை முகத்தானுக்கு சாத்திவிட்டு, 21 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். மூன்று முறை பிள்ளையார் கொட்டை வைக்க வேண்டும். அதன் பின்பு விநாயகரை 21 முறை வலம் வர வேண்டும்.

இறுதியாக ஒரு சூறைத்தேங்காய். இப்படி 21 நாட்களும் தவறாமல் இந்த பரிகாரத்தை செய்து வர வேண்டும். இந்த குறிப்பிட்ட கோயிலில் தான் பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. நீங்கள் முதல் நாள் தொடங்கிய அதே பிள்ளையார் கோவிலில் தான் தொடர்ந்து 21 நாட்களும் பரிகாரம் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எந்த ஊரில் இருக்கும் எந்த விநாயகரை சென்று வழிபட்டாலும் வழிபாடு ஒன்றுதான். ஆனால் 21 நாட்கள் தவறாமல் செய்வது கட்டாயம். 21 நாட்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து முடித்துவிட்டு, 21வது நாள் முடிவில் 21 தேங்காய்களை வாங்கி விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

(சிதறு தேங்காய் வாங்கி உடைப்பதற்கு முன்பு, நான் எடுத்த காரியம் நிறைவேறி விட்டால் உனக்கு 21 தேங்காயை சூறை தேங்காயாக உடைக்கின்றேன் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்). உங்களால் முடிந்தால் 21 கொழுக்கட்டைகளை பிரசாதமாக செய்து விநாயகருக்கு நைவேத்தியமாக படைத்து, குழந்தைகளுக்கு விநியோகம் செய்யலாம். இது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். நீண்ட நாட்களாக வேலை கிடைக்காதவர்கள், புதியதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், திருமண தடை உள்ளவர்கள், தேர்வு பயம் உள்ளவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், எப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயமாக கைமேல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

மகாலட்சுமி இருக்கும் 26 இடங்கள்.!!

செல்வத்தின் அம்சமாக, பெண்களின் சொரூபமாகவும் விளங்கும் மகாலட்சுமி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்..

அந்த 26 இடங்கள் எவை என்று பார்க்கலாம்.

1. திருமால் மார்பு :

திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன் -ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.

2. பசுவின் பின்புறம்:
பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப் பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். ‘யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை’ என்றார் திருமூலர்.

3. யானையின் மத்தகம்:
யானையின் மத்தகம் பிரணவம் போன்றது (ஓங்காரம் போன்றது). அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.

4. தாமரை:
மலர்களில் சிறந்தது தாமரை. ‘பூவெனப்படுவது பொறிவாழ் பூவே’ என்றும், ‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’ என்றும் கூறுவர். தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆதலின் அவளை மலர்மகள் என்பர்.

5. திருவிளக்கு:
விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆதலின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.

6. சந்தனம்:
மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியஙக்ளில் சந்தனம் அவசியம்.

7. தாம்பூலம்:
தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள்.

8. கோமயம்:
பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர். ‘ஐந்தாடுவான் அரன்’ என்பார் அப்பர். வாயிலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினால் கிருமிகள் வாரா, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் வராது. பஞ்ச கவ்யம் பரம ஒளஷதம் என்பர்.

9. கன்னிப்பெண்கள்:
தூய கன்னியர் தெய்வ நலம் பொலிபவர். அவர்களிடத்து லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வது உலக வழக்கு.

10. உள்ளங்கை:
உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். காலையில் எழுந்ததும் கையைப் பார்க்க வேண்டும். கையை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது. கையால் உழைத்தால்தான் தனலட்சுமியைக் காண முடியும். கை என்றாலே சக்தி என்றுதான் பொருள். அவர் பெரிய கை என்றால் அவர் செல்வமுடையவர் என்று பொருள்.

11. பசுமாட்டின் கால்தூசு:
புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் நில்லாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். மாடு என்றால் செல்வந்தானே!

12. வேள்விப்புகை:
வேள்விப் புகை உயிர் காக்கும். போபாலில் வேள்வி நடந்த இரு வீடுகளுக்குள்ளே நச்சுக்காற்று நுழையவில்லை. வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப் புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும்.

13. சங்கு:
சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. நிதியின் ஓர் அளவை சங்கம் என்பர். ‘சங்கநிதி… பதுமநிதி இரண்டுந்தந்து’ எனும் நாவரசர் சொல் உணர்வோம்.

14. வில்வமரம்:
வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றி னாள். வில்வம் சிவபெருமானுக்கு உகந்த பத்திரம். அதைவிடச் சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை. வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில் தல விருட்சம் வில்வம், திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை. வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.

15. நெல்லி மரம்:
நெல்லி ஆயுளை வளர்க்கும்: ஆரோக்கியம் தரும். அதனடி யில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லிதிருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசிப் பலன் உண்டு.

16. தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்

17. வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம்

18. கலகமில்லாத மகளிர் வாழும் இடம்

19. தானியக் குவியல்

20. கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்

21. பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்

22. பகிர்ந்துண்டு வாழும் மனிதர்

23. நாவடக்கம் உள்ளவர்

24. மிதமாக உண்பவர்

25. பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்

26. தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களிலும் மனிதர்களிடத்தும் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறார்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Sunday, 12 July 2020

அர்த்தமுள்ள இந்துமதம் – நல்லவன் வாழ்வான்.!!

ஒரு சாமானியனுக்கு இருக்கும் இயல்பான கேள்விகளை முன்னிறுத்தி இருக்கிறார்.

எவ்வளவு தான் நாணயமாக இருந்தாலும், நேர்மையாக இருந்தாலும், ஒழுக்கமாக நடந்தாலும், வாழ்க்கையில் துன்பம் என்பது வந்துதான் தீரும். அது சரி தான்.

ஆனால், நாணயம் / நேர்மை / ஒழுக்கம் / மரியாதை கெட்டவன் இவனெல்லாம் உற்சாகமாகவும், வசதியாகவும் வாழுகிறானே, அதுவும் நீண்ட காலம் வாழுகிறானே, “எப்படி”.

“நான் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை! எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்?” என்று கலங்குவோர் உண்டு.

“நான் தினமும் கோயிலுக்குப் போகிறேனே, ஆண்டவன் என்னை ஏன் சோதிக்கிறான்? என்று வருந்துவோர் உண்டு.

“நான் யாருக்கும் துரோகம் செய்ததில்லை; யாருடைய குடும்பத்தையும், நிலத்தையும் அபகரித்ததில்லை; நான் படாதபாடும் இல்லை” என்ற ஆதங்கப் படுவோர் உண்டு.

நல்லவர்கள் வருந்துகிறார்கள் என்பதை விட, தீயவர்கள் வாழுகிறார்களே, அது எப்படி?

என்று கர்மா குறித்து விளக்கமாக இந்த அத்தியாயத்தில் எழுதி இருக்கிறார்.

இவர் துவக்கத்தில் இருந்து கூறும் கருத்துகளில் உடன்பாடு இல்லாதவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் இந்த அத்தியாயத்தை ஆர்வமுடன் படிப்பார்கள்.

இவை ஒவ்வொரு சாமானியனுக்கும் இருக்கும் கேள்விகள், மதங்கள் கடந்து.

சில ஆணாதிக்கக் கருத்துகளைத் தவிர்த்து விட்டுப் படித்தால் சிறப்பான புத்தகம்.

இந்து மதத்தில் “வர்ணாசிரமம்” என்ற ஒரு விசயம் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால், உலகிலேயே மிகச் சிறந்த மதமாக இருந்து இருக்கும்.

வர்ணாசிரமத்தால் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கிறது.

பகவத் கீதைப் படி கூறுவதென்றால்…

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

காரணமில்லாமல் காரியமில்லை.

இந்து மதத்தை மதம் என்று கூறுவதை விட “வாழ்வியல் முறை” என்று கூறுவது தான் சரி...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தெய்வத்தின் குரல் – அழகான ஆன்மீகம்.!!

ஒரு சமயம் பரமாச்சார்யார், காஞ்சி மடத்துல சந்திரமௌலீஸ்வர பூஜை செய்துகொண்டு இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல அந்த பூஜை நடக்கும். நடுவுல எதுக்காகவும் நிறுத்த மாட்டார். ஆராதனை நடத்தறப்ப பேசவும் மாட்டார். மகா பெரியவர் பூஜை பண்றதை தரிசிக்க வந்த கூட்டம் கூடம் முழுக்க நிரம்பி வழிஞ்சுது.

வழக்கப்படியான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவர். பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்துல ஒரு பாட்டி தன்னோட பேத்தி கூட தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தாங்க. பெரியவா பூஜை பண்றதை பார்த்துக்கிட்டு இருந்த சமயத்துல அந்தப் பாட்டி தன் பேத்தி கிட்ட ஏதோ சொல்றதும், அந்தக் குழந்தை, “ஊஹூம்!, முடியாது… இப்பவே!”ன்னு சொல்லி அடம் பிடிக்கறதுமாக இருந்ததை எல்லாரும் பார்த்தாங்க.

குழந்தை வீட்டுக்குப் போகத்தான் அடம் பிடிக்குது. பாட்டி சமாதானப்படுத்தறாங்கன்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, கொஞ்ச நேரத்துல அந்தக் குழந்தை, “அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்..!”னு கேட்டு அழறது எல்லாருக்கும் சத்தமாகவே கேட்டுச்சு.

பாட்டி எவ்வளவு சமாதானப்படுத்திப் பார்த்தும் குழந்தை அடம் பிடிக்கறதை நிறுத்தவே இல்லை. எல்லாரும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறார்கள். குழந்தை சமாதானம் ஆகிற மாதிரியும் தெரியலை. எந்தக் குழந்தையோட பட்டுப் பாவாடையைப் பார்த்து அப்படிக் கேட்குதுன்னும் புரியலை.

அந்த சமயத்துல யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தைப் பண்ணினார் மகா பெரியவர்.

செய்துகிட்டு இருந்த பூஜையை நிறுத்தி விட்டு, அந்தப் பாட்டியை சைகையால கிட்ட கூப்பிட்டார்.

எல்லாரும் இப்போ அந்தப் பாட்டியையும் பேத்தியையுமே பார்த்தாங்க. பூஜைக்கு இடைஞ்சல் பண்றத்துக்காக கண்டிக்கப் போறார், வெளியில போகச் சொல்லப் போறார், இப்படி ஆளுக்கு ஒரு மாதிரி நினைக்கத் தொடங்கினாங்க.

பாட்டி கூச்சத்தோட நெளிஞ்சுகிட்டே பெரியவா முன்னால வந்தாங்க. அன்போட அவர்களைப் பார்த்த பெரியவர், ஆசீர்வாதம் செய்யற மாதிரி கையாலே ஜாடை காண்பிச்சார்.

அதுக்கப்புறம் மடத்து சிப்பந்தி ஒருத்தரை ஜாடையால கூப்பிட்டு, குழந்தை கேட்கிற மாதிரி ஒரு பாவாடையைக் கொண்டு வரும்படி ஜாடையாலேயே சொன்னார்.

இப்போ மாதிரி, ரெடிமேடா பட்டுப் பாவாடை எல்லாம் கிடைக்காத காலகட்டம் அது. அதுலயும் கண்டிப்பா அஹிம்சா பட்டு தான் உபயோகப்படுத்தணும்கறது பெரியவாளோட கட்டளை. இப்படிப்பட்ட சமயத்துல எங்கே இருந்து அப்படி ஒரு பட்டுப் பாவடையை வாங்கிட்டு வர்றதுன்னு குழம்பினார் மடத்து சிப்பந்தி.

ஆனா, சொல்லி வைச்ச மாதிரி, மடத்துக்குப் பக்கத்துல இருந்த கடையிலேயே அந்தக் குழந்தைக்கே அளவு எடுத்துத் தைச்சு வைச்ச மாதிரி பச்சைக் கலர்ல ஒரு பட்டுப் பாவாடை கிடைச்சுது.

வாங்கிட்டு வந்து தந்ததும், அந்தப் பாவாடையை குழந்தைக்கு கட்டிவிடும்படி ஜாடையாவே சொன்ன பெரியவர், அவளை அப்படியே மணையில் உட்கார வைச்சு கன்யா பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டார்.

எல்லாருக்கும் ஆச்சரியம். பாட்டிக்கு நெகிழ்ச்சி. குழந்தைக்கு பச்சைப் பட்டுப்பாவாடை கிடைச்ச சந்தோஷம். இப்படி எல்லாமும் சேர்ந்து அன்றைய பூஜை ஆனந்தமா நிறைவடைஞ்சது.

இது நடந்து ஒரு மாதத்துக்கு அப்புறம் மடத்துக்கு அழுதுகிட்டே வந்தாங்க அந்தப் பாட்டி. தன்னோட பேத்தி இறந்துட்டதா சொன்னாங்க.

மகா பெரியவர் கொஞ்சமும் சலனம் இல்லாம, அந்தப் பாட்டியைப் பார்த்தார். “அன்னிக்கு நான் சந்திரமௌலீஸ்வர பூஜை பண்ணினபோது, பச்சைப் பட்டுப் பாவாடை கட்டிண்டு இருந்த இன்னொரு குழந்தை இருக்கறதா உன் பேத்தி சொன்னாளே நினைவிருக்கா ? மற்ற யாருக்குமே அப்படி ஒரு குழந்தை இருந்ததாகவே தெரியாதபோது, அவமட்டும் எப்படிப் பார்த்தா ?” என்று கேட்டார்.

திருதிருன்னு விழிச்சாங்க பாட்டி. சுத்தி இருந்த எல்லாரும், பெரியவர் ஏதோ சொல்லப் போறார்னு ஆச்சர்யமா பார்த்தாங்க.

“நான் பூஜை செய்தப்ப, அம்பிகை பாலா வந்து என் மடியில உட்கார்ந்து தானும் சேர்ந்து சிவனுக்கு அர்ச்சனை செய்துகிட்டு இருந்தா. அவளைத்தான் உன் பேத்தி பார்த்திருக்கா. பாலாம்பிகை கட்டிக்கிட்டு இருந்த மாதிரியே தனக்கும் பாவாடை வேணும்னு கேட்டிருக்கா.

தெய்வத்தையே நேரடியா தரிசனம் பண்ணின உன் பேத்தி மகா புண்ணியம் பண்ணினவ. அவ நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா…! அதனால கவலையேபடாதேம்மா…!”

அமைதியாகச் சொன்னார் மகா பெரியவர். அம்பிகையே அவர் பூஜை செய்யும்போது நேரில் வருகிறாள். குழந்தையாக அவர் மடியிலேயே அமர்ந்து தானும் சிவ பூஜை செய்கிறாள் என்றால், அவர் எத்துணை பெரிய மகான்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.!!

“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கு…ம் காண முடியும்.

கோபுரங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இனையானது என்ற நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது.

சிற்ப சாஸ்திரத்தின் படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை “ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம்” என்பர்.

இதனையே திருமூலரும்…

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”

என்று கூறுகிறார்.

எளிமையாய் விளக்குவதானால்

பாதங்கள் – முன்கோபுரம்
முழங்கால் – ஆஸ்தான மண்டபம்
துடை – நிருத்த மண்டபம்.
தொப்புள் – பலி பீடம்
மார்பு – மகாமண்டபம் ( நடராஜர்)
கழுத்து – அர்த்த மண்டபம் (நந்தி)
சிரம் – கர்ப்பகிரகம்
வலது செவி – தக்ஷிணா மூர்த்தி
இடது செவி – சண்டேஸ்வரர்.
வாய் – ஸ்நபன மண்டப வாசல்
மூக்கு – ஸ்நபன மண்டபம்
புருவ மத்தி – லிங்கம்.
தலை உச்சி – விமானம்.

“தேஹா தேவாலய: ப்ரோக்தோ ஜீவோ தேவ: ஸனாதன:
த்யஜோத்: அஞ்ஞான நிர்மால்யம் ஷோகம் பாவேன பூஜயேத்” என்ற வேத வாக்காலும் இதனை அறியலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

கரிநாள் என்றால் என்ன?

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே.. !

அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்..!

நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை…!

இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை..அதே தேதி (நிலையாக இருக்கும் )

தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள்…!

உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல..!

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும்..

ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன..!

இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்..!

இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள்…!

இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி …

ஜோதிட ரீதியாக கடைபிடித்து வரும் விஷயம் அல்ல..!

ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் :

சித்திரை-6, 15

வைகாசி- 7, 16, 17

ஆனி- 1, 6

ஆடி-2, 10, 20,

ஆவணி-2, 9, 28,

புரட்டாசி- 16, 29,

ஐப்பசி-6, 20,

கார்த்திகை-1, 10, 17,

மார்கழி-6, 9, 11,

தை-1, 2, 3, 11, 17,

மாசி-15, 16, 17,

பங்குனி-6, 15, 19.

இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். . மாறவே மாறாது..!

கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

சங்கடஹர சதுர்த்தி ஸ்பெஷல்.!!

சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு ‘சங்கட’மாக மருவி, உருமாற்றம் பெற்று விட்டது. சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும்.

ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.
சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்க தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை யில் எழுந்து நீராடி, அலங்கரிக்கப்பட்ட விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். அவரை வழிபட சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். முடிந்தவர்கள்,
‘சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்!
பிரஸன்ன வதனம் தியாயேத்
ஸர்வவிக்ன உபசாந்தயே’ – எனக் கூறலாம்.

விநாயகப்பெருமானே உன்னை நினைத்து நான் இந்த விரதத்தை தொடங்கி இருக்கிறேன். எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அன்று முழுவதும் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல்லினால் பூஜிக்க வேண்டும். நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம்.

மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும். விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.

நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். விநாயகர் அகவல், விநாயகர் புராணத்தை படிப்பதும் நன்மைகளை தரும்.

சங்கடஹர சதுர்த்தி நாளில், மாலையில் விநாயகருக்கு, கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறும்.

அப்போது, பால், தயிர், திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் முதலான 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த நாளில், கணபதிபெருமானுக்கு, வெள்ளெருக்க ம்பூ மாலையும் அருகம்புல் மாலையும் சார்த்தி வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும். காரியத் தடைகள் யாவும் விலகிவிடும் .

மேலும் சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு கொழுக்கட்டை அல்லது சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், வீட்டில் மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும். கடன் தொல்லையை நிவர்த்தி செய்து அருள்வார் .

சங்கடஹர சதுர்த்தி அன்று மறக்காமல், மாலையில் கோயிலுக்குச் சென்று விநாயக வழிபாட்டைச் செய்யுங்கள். பிள்ளையாரப்பனை வணங்குங்கள். வணங்கிப் பிரார்த்தனை செய்யுங்கள்.

“அன்பினுக்கு இரங்கும் அருட்கடல்!
ஐங்கரனின் திருக்கழல் சிந்தை செய்வோம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

வயலும் தெய்வங்களும்.!!

பயிர்சாகுபடி என்பது சாகுபடி காலத்தில் விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் பல செயல்களை உள்ளடக்கியதாகும். இதில் ஒவ்வொரு செயல்களுக்கும் ஒரு தெய்வம் உரியது என வகுத்து, அந்த தெய்வத்திற்கு உரிய பூஜையை செய்து செயலை தொடங்கினர். நம் முன்னோர்கள். அதை அப்படியே பின்பற்றுவது என்பது சில மாவட்டங்களில் மட்டும் இன்றும் தொடர்கிறது.

சாதாரணமாக வியாபாரம் செய்யும் வணிகர் கூட, கடையை திறக்கும் போதும், முதல் விற்பனையை மேற்கொள்ளும்போது கடையை அடைக்கும் போதும் என அன்றாட வாழ்விலே குறைந்தது மூன்று முறை தெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறார் வணிகர். அவரது வழிபாடு ஒரே தெய்வமாகக் கூட இருக்கலாம். ஆனால் விவசாயியை பொறுத்தவரை ஒவ்வொரு செயலுக்கும் ஒரு சாமி என தீர்மானித்து வழிபாட்டை மேற்கொள்கிறார்.

1.குலதெய்வ வழிபாடு

தரிசாக கிடந்த நிலத்தில் மண்டி கிடக்கும் கருவேலஞ்செடி, கண்டங்கத்திரி வேர், நெருஞ்சி உள்ளிட்ட முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. அந்த நிலத்தை சீர்படுத்தி விவசாயம் செய்ய முற்படுகிறான் விவசாயி. அவன் முதலில் தனது குலதெய்வத்தை வணங்கிய பின் கோடாரி, அரிவாள் முதலான பொருட்களை குலதெய்வக்கோயிலில் உள்ள திருநீறு எடுத்து அந்தக்கருவிகள் மேல் வைத்துவிட்டு கருவிகளை எடுத்துக் கொண்டு நிலத்திற்கு செல்கிறான். அங்குச் சென்று நிலத்தைச் சீர்படுத்துகிறான் பின்னர் நிலத்தின் வரப்புகளை செதுக்கி உயர்த்துகிறான்.

2.மகாலட்சுமி வழிபாடு

மறுநாள் நிலத்திற்கு தனது தாய், தந்தை மற்றும் மனைவி மக்களுடன் சென்று நிலத்திற்கு பூஜை செய்கிறான். அப்போது மகாலட்சுமியை நினைத்து வீட்டிலுள்ள திருவிளக்கை கொண்டு வந்து அதன் முன் தலைவாழை இலை விரித்து தேங்காய்,பழம், வெற்றிலைபாக்கு, நிறைநெல் நாழியை வைத்து ஊது வத்தி ஏற்றி பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

3.வருண பகவான் வழிபாடு

அதன்பின் விளைச்சல் அமோகமாக வரவேண்டும் என்றால் சூரிய பகவான் அருளும், வருணனும் அருளவேண்டும் ஆகவே சூரிய பகவானையும், வருண பகவானையும் நினைத்து வழிபாடு செய்வார்கள். தேங்காய் மீது கற்பூரத்தை ஏற்றி வானத்தை நோக்கி தீபம் காட்டி வணங்குகிறார்கள்.

4.சூரிய பகவான்

வானத்தை நோக்கி தீபம் காட்டியதோடு அப்படியே கதிரவன் இருக்கும் திசை நோக்கி தீபத்தை காட்டி விட்டு, அந்த திசையை நோக்கி தேங்காயை உடைக்கிறார்கள்.

5.ஊரம்மன் வழிபாடு

நிலத்தை உழும் முன்பு ஊர் தெய்வமான அம்மன் முப்பிடாதி அம்மன், முத்தாலத்து அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூஜை செய்வார்கள். அதன்பின்தான் நிலத்தை உழவு செய்வார்கள். அதனைத் தொடர்ந்து மரம் அடித்தல், நிலத்தை சமன் செய்தல் வேலையை செய்வார்கள். விதை நெல்லை ஊற விடுவார்கள். விதை நெல்லை ஊர் அம்மன் கோயிலுக்கு கொண்டு வந்து அம்பாளின் முன் வைத்து சூடம் பத்தி வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வைத்து பூஜை செய்வார்கள் அதன் பின்பு குறிப்பிட்ட அந்த நெல்லை எடுத்து ஒரு ஓலைப் பெட்டியில் வைத்து கோயிலை மூன்று முறை வலம் வந்து மறுபடி சணல் சாக்கில் (கோணிப்பை)அந்த நெல்லை ஊற வைப்பார்கள். மூன்று நாள் கழித்து அந்த நெல்லை எடுத்து பார்த்தால் சற்று முளை விட்டிருக்கும்.

6.சாஸ்தா பூஜையும், நாற்றங்கால் விதைப்பும்

முளை விடப்பட்டிருக்கும் விதை நெல்லை எடுத்து வந்து, வயலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து நல்ல நாளைப் பார்த்து விதைப்பார்கள். விதைக்கும் சாஸ்தா நினைத்து பூஜை செய்வார்கள். பெரும்பாலும் வயலுக்கு நீர் வரும் குளம்,குட்டை, ஆறு இவைகளின் கரையோரம் சாஸ்தா கோயில் கொண்டிருப்பார். ஆகவே விதைப்பு அன்று பூஜை செய்வார்கள். விவசாயியின் வசதியைப் பொறுத்து பூஜை அமையும். சிலர் தேங்காய் உடைத்தலோடும் சாஸ்தா பூஜையை முடித்துக்கொள்வார்கள்.

7.நாகர் மற்றும் சங்கரநயினார் வழிபாடு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம் செய்யும் நபர்கள் விஷப்பூச்சிகளால் எந்த தீங்கும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக சங்கரன்கோவில் சங்கரநயினாரை வணங்குவார்கள். குமரி மாவட்டத்தில் நாகரம்மன் வழிபாடு. பெரும்பாலான மாவட்டங்களில் நாகர் வழிபாடு மேற்கொள்வார்கள். அதன் பின்னர் நடவு செய்யும் வயலின் வரப்புகளை சீர்செய்து வெட்டி ஒழுங்குப்படுத்தி உயரப்படுத்துவார்கள். அதனையடுத்து நீர்ப்பாய்ச்சி, மண்வெட்டியை வைத்து தொழியடித்து சகதியாக்கி நாற்று பாவும் வேலைக்கு தயாராக்குவார்கள்.

8.கணபதி பூஜையும், நாற்று எடுப்பும்

நாற்றங்காலில் நன்கு வளர்ந்த நாற்றை ஒரு நல்ல நாள் பார்த்து எடுத்து முடியாக கட்டுவார்கள். இந்த பணியில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுத்தப்படுவார்கள். நாற்றங்காலில் இருந்து எடுக்கப்பட்ட நாற்றுகளை, எல்லா பாக்யமும் பெற்ற அதாவது பேரன் பேத்தி எடுத்த சுமங்கலியான வயது முதிர்ந்த பெண்மணி கையினால் சிறு சிறு கட்டாக கட்டி வைப்பார்கள். இதற்கு நாற்றுக்கு தாலி கட்டும் நிகழ்வு என்பார்கள்.

‘‘மூன்று கைப்பிடி அளவு நாற்றை ஈசான மூலையில் வைத்து அதற்கு மேல் பெண்கள் அணியும் தாலி போன்று நார் அல்லது கயிறு கொண்டு கட்டி மூன்று முடிச்சுகள் போடுவார்கள்’’. பின்பு வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், அவல், கடலை வைத்து கணபதியை நினைத்து மஞ்சளில் கணபதி பிடித்து அதில் திருநீறு இட்டு கற்பூரம் தீபம் காண்பித்து பூஜை செய்வார்கள். பின்னர் அங்கிருக்கும் அனைவரும் விபூதியை எடுத்து பூசிக் கொள்வார்கள். இனிப்புகள் வழங்குவார்கள்.

9.கன்னிதெய்வ பூஜையும் நாற்று நடுதலும்

நாற்றங்காலில் இருந்து எடுக்கப்பட்ட நாற்றுகளை கட்டிக் கொண்டு வந்து வேளாண்மை செய்யும் வயலில் நடவு செய்வார்கள். முன்னதாக சப்த கன்னியர் பூஜை செய்வார்கள் சிலர். சிலர் தனது குடும்ப கன்னி தெய்வத்திற்கு(தனது குடும்பத்தில் மணமுடிக்காமல் வாலிப பருவத்தில் மரணம் எய்தியவர்களை கன்னி என அழைக்கிறார்கள்) பூஜை செய்வார்கள். அதன் பின்னர் வயலில் நடவு செய்யப்படும். முதலில் ஈசான மூலையில் ஈசனை வணங்கிவிட்டு கன்னிப்பெண் கையினால் முதல் நாற்று நடுவார்கள். முதல் நாற்று நடும் பொழுது வயல் வெளியே அதிரும் அளவுக்கு குலவை சத்தம் இருக்கும். நடவு முடிந்த பின்னர் வயல் உரிமையாளரான விவசாயியைப் பொறுத்து வயலில் நாற்று நட வந்த பெண்களுக்கு உணவு பரிமாறுவார்கள்.

10. சுடலைமாட சாமி, இசக்கியம்மன், பூதத்தார், மதுரவீரன், அய்யனார், முனீஸ்வரன் கருப்பசாமி, காத்தவராயன் வழிபாடு

வளர்ந்து வயலின் கதிர்களை காத்திடும் பொருட்டு காவல் தெய்வமான சுடலைமாடன், இசக்கியம்மனுக்கு பூஜை செய்வார்கள் நடவு முடிந்து மறுவாரம் வரும் வெள்ளி, செவ்வாய் நாட்களில் மாலை பொழுதில் இந்த பூஜை இருக்கும். இந்த வழிபாடு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு இனத்திற்கும் மாறுபாடாக அமையும். சிலர் பூதத்தாரை வணங்குவார்கள். பல ஊர்களில் அய்யனார், மதுர வீரன், முனீஸ்வரன், கருப்பசாமி வழிபாடு மேற்கொள்வார்கள்.

11. தளவாய்மாடன், தளவாய் மாடத்தி, பன்றி மாடன், வராக மூர்த்தி, வாராகி, கருடாழ்வார் வழிபாடு

உளுந்து, வேர்கடலை, கத்தரி, தக்காளி முதலான பயிர்வகைகளை பயிர் செய்யும் விவசாயிகள் ஆடு,பன்றி முதலான விலங்கினங்களாலும், கொக்கு, காகம் முதலான பறவை இனங்களாலும் இடையூறு இல்லாமல் இருப்பதற்காக மனித உடலும் விலங்கு மற்றும் பறவை முதலான உயிரினங்களின் முகங்களைக் கொண்ட தெய்வங்களின் வழிபாட்டை மேற்கொள்வார்கள்.

12.முத்தாரம்மன், நாகாத்தம்மன், நாகரம்மன், அங்காளம்மன், மாரியம்மன் வழிபாடு

மண் சிறக்க மண்புழு வேண்டும். அந்த மண்புழுவை உண்பதற்காக தவளையும், நெற்கதிரை திங்க எலியும் வந்து பயிர்களின் வளர்ச்சிக்கு இடையூறை ஏற்படுத்தும். இதைப்போக்க எலியையும், தவளையையும் உண்ண பாம்பு வரும். அது வரவேண்டும். ஆனால் அது என் கண்ணில் படக்கூடாது. அதனால் எனக்கும் ஏதும் நேரக்கூடாது என்று விவசாயிகள் நாகாத்தம்மனையும், நாகரம்மனையும், நாகமே வடிவான அங்காளம்மனையும், நாகத்தின் வயிற்றிலே கருமுட்டையாக உருவாகி அவதரித்த முத்தாரம்மனையும், மாரியம்மனையும் வணங்குவார்கள்.

13.காளி வழிபாடும், களை பறிப்பும்

கதிர்கள் வளர்ந்து வரும் வயலில் அதினிடையே அதன் வேகத்திற்கு களைகளும் வளரும். இந்த களைகள் அனைத்தும் பறிக்க, பறிக்க வளர்ந்து கொண்டே இருக்கும். இடையூறுகளை அகற்றும் தெய்வம் காளி. ஆகவே களை பறிக்கப்பட்ட பின்பு மீண்டும் களைகள் வராத வகையில் தாயே கருணைக்காட்டு என்ற நோக்கத்தில் காளியம்மனையும், அவளது ரூபமான வடக்குவாசல் செல்வி, செண்பகவல்லி ஆகிய உக்ர வடிவான அம்மன் தெய்வங்களை வழிபடுவார்கள்.

அறுவடைக்குத் தயாராகும் நேரத்தில் வயலுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் விளைச்சலுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் பச்சரிசி பொங்கலிட்டு சேவல் பலி கொடுத்து பூஜை நடத்துவார்கள். அறுவடைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு கன்னிப்பெண் கையினால் நடப்பட்ட கதிரை அறுத்து அதை ஊர்அம்மன், காவல் தெய்வ கோயில்களில் கொண்டுச்சென்று கட்டுவார்கள்.

விளைந்த நெற்கதிர்களை அறுத்து அடுத்து நெல்லை தனியாகவும் பதாகை தனியாகவும் தூற்றி எடுத்து சாக்கில் கட்டி வைப்பார்கள். பெரும்பாலும் ஊர்களில் நீர்ப்பாசி எனும் ஒரு நடைமுறை உள்ளது அதாவது மொத்த ஊரில் உள்ள வயல்களுக்கும் அவர்தான் நிறைவேற்றுவார் எந்த வயலில் நீர் இல்லையோ அந்த வேலை பார்த்து சரியாக நீர் பாதுகாப்பு மற்றும் நோயுற்ற கதிர்களுக்கு சரியான மருந்து அடிக்க சொல்லுவார்.

இந்த நீர்பாய்ச்சிக்கு முதலில் நெல்லை அளந்து கொடுப்பார்கள் அதன் பின்பு கிராம கோயில்களுக்கு தங்களால் முடிந்தளவு நெல்லை காணிக்கையாகக் கொண்டு செலுத்துவார்கள். அதன்பின்பு புதியல் எனும் ஒரு சம்பிரதாயத்தை கடைபிடிப்பார்கள். அது என்னவென்றால் முதலில் விளைந்த நெல்லை குத்தி அரிசியாக்கி, அதனை சமையலாக்கும் அன்று மணமுடித்துக் கொடுக்கப்பட்ட மகள் மற்றும் மருமகன் ஆகியோரை வரவழைத்து வடை, பாயாசத்தோடு அன்று விருந்தோம்பல் நடைபெறும். இதற்கு புதுஅரிசி சாப்பாடு என்பார்கள்.

இதுவெல்லாம் முடிந்த பின்னர் ஊர்க்கோயில் கொடைவிழா, திருவிழா வரும் அப்போது புது அரிசியில்தான் பொங்கல் இடுவார்கள். ஆக விதைப்பில் தொடங்கி அறுவடை முடியும் வரை தெய்வ வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. விவசாயமும் ஒருவகையில் பிரசவம் தான். இரண்டும் இனிதே நடைபெற இறைவன் தான் காரணமாகிறார். உருவங்கள் தான் வேறே தவிர, உள்ளுணர்வும் சக்தியும் ஒன்றுதான்...

சு.இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

உழவுக்கு உதவுவாள் அழகு நாச்சியம்மன்.!!

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள்  அழகு நாச்சியம்மன்.நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழும் குற்றாலம், தென்காசிக்கு இடையில் அமைந்துள்ளது சிந்தாமணி கிராமம். மூன்று போக நெல் விளையும் முத்தான பூமி.


அங்கு தனது விவசாய நிலத்தை ஒட்டி இருந்த தென்னந்தோப்பின் ஒரு பகுதியை வெட்டி, திருத்தி அதிலும் பயிர் வைக்க எண்ணினார் குப்பாண்டி. அதன் படி ஐப்பசி மாதம் வளர்பிறையில் அந்த நிலத்தில் ஏர் கட்டினார். அந்த நிலத்தின் தென்பகுதியில் ஏர் வரும் போது கலப்பையின் கொழுவில் ரத்தம் படிந்திருந்தது. அதைக்கண்ட குப்பாண்டி பாம்பு ஏதாச்சும் கொழுவில் மாட்டி இறந்து விட்டதோ, என்று வருந்தினார்.

அந்த நேரம் கஞ்சி கலையத்தை தலையில் தாங்கி, அவரது மனைவி பொன்னுதாயி அவ்விடம் வந்தாள்.வயலில் கலப்பை முன் நின்று பூமி நோக்கி, தனது கணவன் இரு கரம் கூப்பி வணங்கி நிற்பதை கண்டாள். கவுளை கண் மூடி கை தொழும் நேரம், கஞ்சி கலயத்தை இறக்கி வைக்க, கணவனை அழைப்பது நல்லதல்ல என்று மனதிற்குள் நினைத்தாள்.

கண்ணை மூடிய குப்பாண்டி ‘‘என்ன படைச்ச சிவனே, அய்யா, நான் தெரிஞ்சும் தெரியாம குத்தம் குறை செஞ்சிருந்தா என்ன மன்னிச்சிடப்பா. என்று வேண்டிக்கொண்டு நாலா புறமும் பார்த்தவாறு தன்னை ஒரு சுற்று சுற்றினார். வடக்கு திசையில் வயல் வரப்பில் தனது மனைவி பொன்னுத்தாயி கலயத்துடன் நிற்பதை கண்டார். ‘‘நீ எப்போம் வந்த, என்று கேட்க, அதற்கு பொன்னுத்தாயி, நீங்க நிலம் பார்த்து சாமி கும்பிடும்போதே வந்திட்டேன். என்று பேசிய படியே கலயத்தை இறக்கும் கணவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

கொத்தமல்லி துவையல் கூட்டுடன் கஞ்சி குடித்து முடித்து ஏப்பம் விட்ட குப்பாண்டி, நீ வீட்டுக்கு போ, என்றதும். பொன்னுத்தாயி, கணவனிடம் கேட்டாள். கலப்பை கட்டுமுன்னே சாமி கும்பிடுவீக, இது என்ன புதுப்பழக்கம், 3 உழவு உழுத பிறகு சாமி கும்பிடுதீக என்ற மனைவியின் கேள்விக்கு பதிலுரைத்தார் குப்பாண்டி.

அது ஒண்ணுமில்ல, கலப்பை கொழுவில, பாம்பு ஏதே மாட்டி செத்திருக்கும் போலுக்கு, கொழுவில ரத்தகறை படிஞ்சிருக்கு. அதான் நல்ல காரியம் செய்யுற சமயம் இப்படி ஆகுதே. அதுவும் நல்ல பாம்பா இருந்திற பிடாதே, அதான் சாமிய கும்பிட்டேன்.

அப்படியா என்ற பொன்னுதாயி, பதட்டத்துடன் முதல்ல கலப்பை தள்ளி வச்சிட்டு, நீள கம்பு எடுத்து தட்டி, தட்டிப்பாருங்க, ஏன்னா, துண்டுப்பட்ட பாம்புக்கு தான் வீரியம் அதிகம் இருக்கும். கடிச்சி, கிடிச்சி போடாமங்க, ஊரு கண்ணு வேற நமக்கு இருக்கு, அதான் இப்படி யெல்லாம் நடக்குதுபோல என்றாள். மனைவியின் சொல்லைக்கேட்ட குப்பாண்டி தென்னந்தோப்பில் இருந்து நீள கம்பு ஒன்றை கொண்டு வந்து ரத்தம் படிந்திருந்த இடத்தை தட்டுகிறார். அங்கே ஒரு கல் ஒன்று தட்டுப்படுகிறது. உடனே அதை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை. அவரது மனைவி பொன்னுத்தாயி அருகேயுள்ள வயலில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த நபர்களை அழைத்தாள்.

வந்த நான்கு பேரும் குப்பாண்டியும் சேர்ந்து ஐந்து பேராக அந்த கல்லை சுற்றியிருந்த மண்ணை அப்புறப்படுத்தி வெளியே எடுத்தனர். அது அழகான ஒரு பெண் அமர்ந்த நிலையில் இருந்த சிலை. ஒரு கை யோகமுத்திரையுடன் இருந்ததால் அது அம்மன் சிலை என்று முடிவு செய்தனர். அம்மன் சிலையின் வலது தோளில் வெட்டுக்காயம் இருந்தது. அந்த காயத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்து கொண்டிருந்தது.

வாய்க்கால் தண்ணீர் கொண்டு சிலையை சுத்தம் செய்து தோட்டத்திற்கு கொண்டு வந்து மர நிழலில் வைத்தனர். ஆனாலும் தொடர்ந்து ரத்தம் வந்து
கொண்டிருந்தது. குப்பாண்டி மனம் உருகி வேண்டினார். அப்போது ஒரு அசிரீரி கேட்டது. எனக்கு இந்த இடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டு வாருங்கள் எனது பெயர் அழகு நாச்சியார் என்றும் கிழக்கு திசை நோக்கி வைக்காதே, எனக்கு பிடித்த வட திசையை நோக்கி வைத்து பூஜை செய் என்றது.

உடனே அம்மன் சிலையை அங்கிருந்த புளியமரத்தின் அடியில் வடக்கு நோக்கி வைத்தனர். அருகே இருந்த ஊர் பிரமுகர் ஒருவரின் வாழை தோட்டத்திலிருந்து பழங்கள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு படைத்து பூஜை நடந்தது. சுற்றியிருந்தவர்கள் கை கூப்பி வணங்கினர். பூஜை முடிந்த மறுநிமிடம் சிலையிலிருந்து நிற்காமல் வந்து கொண்டிருந்த ரத்தம் நின்றது. மனமகிழ்ந்த விவசாயிகள். வயல் நடவு மற்றும் விதைப்பு நேரங்களிலும், அறுவடை நாட்களிலும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.

பின்னர் ஒரு நாள் வழிபடும் அன்பர்களின் கனவில் தோன்றிய அம்மன், நான் மழையில் நனைந்து வெயிலில் காய்கிறேன். அது மட்டுமன்றி தனித்தனியாக வந்து பூஜை செய்து என்னை வணங்கி செல்லும் நீங்கள் ஒரு சேர நின்று பூஜித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன் என்று கூறினாள். அதன் பின்னர் ஊரார்கள் ஒன்று கூடி அம்மனுக்கு கோயில் எழுப்ப முடிவு செய்தனர். அதன் பின்னர் நாட்கள் நகர்ந்தது. அவர்கள் எண்ணியது போல் கோயில் எழுப்பி கொடைவிழா நடத்தப்பட்டது.

அழகு நாச்சியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ளார். அம்மனுக்கு கலப்பைக் கொழு பட்டு காயம் பட்டதை நினைவு கூறும் விதமாக, கொடை விழா நடைபெறும்போது அம்மனுக்கு அலங்காரம் செய்கையில் அம்மன் சிலையின் தோள் பகுதியிலிருந்து ரத்தம் கொட்டுவது போன்று குங்குமம் மற்றும் செம்மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

இப்போதும் அப்பகுதியில் விவசாய பணிகள் தொடங்கும்போது முதல் உழவு செய்யும் முன் பணிகள் சிறப்புற அமைய வேண்டும் என்று அழகுநாச்சியம்மனை வேண்டி பூஜை செய்த பின்னரே உழவு பணியை தொடங்குகின்றனர்.

அழகுநாச்சியம்மன் கோயில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் வழியில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள சிந்தாமணி கிராமத்தில் அமைந்துள்ளது...

சு.இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

விளைஞ்ச பயிர்களை காத்த மாடன்.!!

திருநெல்வேலியிலிருந்து முக்கூடல் வழியாக அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ளது. ரெங்கசமுத்திரம். இங்குள்ள அவுசபுரி குளக்கரையில் வீற்றிருக்கும் மாடன். மடையடிசாமி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவர் பக்தனின் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு குளத்தின் கரையில் காவலாய் இருக்கிறார். அவுசபுரி குளத்தை நம்பி சாட்டுப்பத்து பகுதியில் பல ஏக்கர் பரப்பளவு நஞ்சை, புஞ்சை நிலங்கள் இருந்தன.


அதில் பெரும்பாலான நிலங்கள் ஊரில் பெரும் நிலக்கிழாராக இருந்த நாரம்பூ லிங்க ஐயருக்கு சொந்தமானது. அப்பகுதியில் பெரிய ஆன்மிக
வாதியாக திகழ்ந்த இவர் மந்திரங்கள் கற்றதோடு, மாந்திரீகமும் கற்றிருந்தார். மேலும், கண் திருஷ்டி, வியாபாரம் செழிக்க, தொழிலில் அபிவிருத்தி, விவசாயம் செழித்தோங்க, பிணி, பீடை அகற்றுதல் போன்ற பரிகாரங்களுக்கும் பூஜை, வழிபாடுகள் செய்து வந்தார்.

பெரும் நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள், பண்ணையார்கள் மட்டுமன்றி, நெல்லை ஜில்லா மற்றும் மலையாள நாட்டில் உள்ள தொழிலதிபர்களும் இவருக்கு நெருக்கம். இவருக்கு தோட்டம் மற்றும் வயல் வேலைகளை அப்பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன் செய்து வந்தான்.

முத்துக்கருப்பன் ஊர்க்காடு சுடலைமாடசுவாமி மீது அளவு கடந்த பக்தி கொண்டவன். அசைவ பிரியனான இவன் வெள்ளிக்கிழமையானால் பச்சரிசி சாதம் மட்டுமே உட்கொண்டு சுடலைமாடனை மனதில் நினைத்து பயபக்தியோடு, மாலையில் கோயிலுக்கு சென்று அய்யனை வணங்கிய பின்னரே அடுத்த வேளை உணவை உண்பான். எப்போதும் கோயில் திருநீறு அணிந்து தான் தனது பணிகளை செய்வான். அக்கம் பக்கம் யார், எந்த வேலை கொடுத்தாலும் தட்டாமல் செய்பவன் முத்துக்கருப்பன்.

அதனால் அவரது தந்தை இவனை வேலைக்கு அனுப்ப வேண்டும் என்றெண்ணியவர், ஐயரிடம் சென்று, ‘‘பெத்தவங்களுக்கு ஒரு வேலையும் செய்யமாட்டான். ஊரில யாரு, எந்த வேலை செய்ய சொன்னாலும் சும்மா செஞ்சிட்டு வாரான். ஊருக்கு மாரடிக்கத்தான் இவன் லாயக்கு, அதனால சாமி, நீங்க தான் இவனுக்கு புத்தி மதிக சொல்லி, நல்ல ஜோலிய கொடுங்கண்ணு,’’ கூறி, நாரலிங்க ஐயரிடம், முத்துக்கருப்பனை வேலைக்கு சேர்த்து விட்டார். அவரது தந்தை முத்துரெங்கன்.

ஐப்பசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, அடை மழைக்காலம். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. மாலை நேரம் சாப்பாடு முடித்துக்கொண்டு ராத்திரி தோட்டக்காவலுக்கு புறப்பட தயாரானான் முத்துக்கருப்பன். அப்போது அவன் தாயார், ‘‘மகராசா, நல்ல மழை பெய்யுதே, இன்னைக்கு
காவலுக்கு போவாண்டாம் ராசா’’‘‘ஆத்தா, நம்ம சுடலை, என் கூட இருக்கிறார், நீ ஏன் ஆத்தா கவலைப்படுறே’’அந்த நேரம் அவரது தந்தை, ‘‘ஏலே, ஐயா கருப்பு, அந்த சாக்குபைய(கோணி) எடுத்து தலையில போட்டு போப்பா’’‘‘சரி, சரி நான் போறேன். நீ கதவ சாத்திக்க’’‘‘பயபுள்ள வரக்கெத்து கெட்டால போறேன்னு சொல்லிட்டு போறான். போயிட்டு வாரேன்னு சொல்லாம ”என்று முணுமுணுத்துக்கொண்டார் முத்து ரெங்கன்.

முத்துக்கருப்பன் தோட்டக்காடுகளை சுற்றிப்பார்த்து விட்டு வயல்காடு பக்கம் வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மின்னல் தொடர்ந்து மின்னி கொண்டிருக்க, இடியும் அதிகமாக இடித்து கொண்டிருந்தது. அர்ச்சுனா, அர்ச்சுனா என்று சொல்வோர் மத்தியில் சுடலையாண்டவா காப்பாத்து, சுடலையாண்டவா காப்பாத்து என்று கூறிக்கொண்டே முத்துக்கருப்பன் அவுசபுரி குளத்தின் கரைப்பக்கம் வந்தான். குளம் நிரம்பி இருந்தது.

இருப்பினும் குளத்திற்கு மழை வெள்ளம் வேகமாக வந்து கொண்டிருந்தது. குளம் உடைந்து விடுமோ, என்று கலங்கினான். பயிரு நல்லா விளைஞ்சு அறுவடைக்கு தயாரா இருக்கு, இந்த நேரத்தில குளம் உடைஞ்சு பெருவெள்ளம் வந்தா விளைஞ்ச பயிரெல்லாம் அழிஞ்சு போகுமே, குளம் உடைந்தால் சாமி, நம்மள வச்சு பார்க்கமாட்டாரே, என்ன செய்வது என்று அச்சத்தில் இருந்தான் முத்துக்கருப்பன். அப்போது பக்கத்து தோட்டத்துக்கு சொந்தக்காரரான மாயாண்டித்தேவர் அங்கு வந்தார்.

‘‘என்னப்பா, முத்துக்கருப்பா, குளத்துக்கு ஒரு பக்கத்துல வெட்டி விடு, இல்லைண்ணா மடையை திறந்து விடு, வரத்து வெள்ளம் அதிகமாக இருக்குதுப்பா’’ என்று கூறினார். உடனே முத்துக்கருப்பன் ‘‘ஐயா, நீங்க கொஞ்ச நேரம் இங்க இருப்பீங்களா, நான் போய் சாமிகிட்ட கேட்டுட்டு வந்திடுறேன்.’’ என்று சொல்ல, சரி போயிட்டு வா என்று அவர் கூறினார். ‘‘ஐயா, நீங்க பெரிய ஆளு மழை அதிகமாகிட்டுன்னு போயிட்டீங்கண்ணா’’ என்று கேள்வி எழுப்பிய முத்துக்கருப்பனிடம், ‘‘ஏலே, எனக்கு ஒத்த நாக்கு, ஒத்த சொல்லு, வாக்கு தவறமாட்டேன்ல, நீ உன் குலசாமிய நம்புறல்ல, அந்த சாமியே வந்திருக்கிறதா நினைச்சுக்கோ போயிட்டு வா’’ என்று பதில் கூறி அனுப்பி வைத்தார் மாயாண்டிதேவர்.

ஐயரிடம் குளம் நிரம்பியதை தெரியபடுத்த முத்துக்கருப்பன் கையில் வேல் கம்புடன் புறப்பட்டு சென்றான். ஐயர் வீட்டில் இல்லை, வீட்டு முன்பு திண்ணையில் படுத்திருந்த வண்டிக்காரன் கூறினான். ‘‘முத்துக்கருப்பு, சாமி தெங்கரை தோட்டத்து வீட்டுல இருக்கிறாரு’’ என்று கூறினான். (தெங்கரை என்பது ஊருக்கு தெற்கு பக்கம் என்பதாகும்) தெங்கரை தோட்ட வீட்டிற்கு சென்றதும் சலவை தொழிலாளி ராக்கையன் நின்று கொண்டிருந்தான். நடு ராத்திரி, வெள்ளிக்கிழமை ராக்கையன் தோட்டத்து வீட்டுக்கு வந்தாலே ஏதாவது பெரியளவில பூஜை இருக்கும்.

அப்படிண்ணா, நாம எப்படி சாமிய பார்கிறது. என்று மனசுக்குள் புலம்பியவன், ஏ, ராக்கு, இப்ப சாமிய பாக்கலாம்மா, நீரு, என்ன விசயமா, சாமிய பார்க்க வந்திருக்கீங்கண்ணு சொல்லும் என்று கேட்ட அவனிடம், குளத்து நிலவரத்தை எடுத்துகூறி அது விஷயமா உடனே சாமிய பார்க்க வேண்டும் என்று முத்துக்கருப்பு கூறிக்கொண்டு இருக்கும் போது, ‘‘வெளிய என்ன சத்தம்’’ என்று குரல் கொடுத்தார் ஐயர். ‘‘சாமி, முத்துக்கருப்பு வந்திருக்கேன்.’’ என்றான். உடனே உள்ள அழைத்தார் ஐயர்.

வந்த காரணத்தை முத்துக்கருப்பு கூறக்கேட்டதும். ‘‘குளத்தை வெட்டிவிட்டா ஊருக்குள்ள பெருவெள்ளம் வந்திடும். மடையை தோண்டிவிட்டாலும் நம்ம தோட்டத்து கிணத்துக்கு சுற்றுச்சுவர் இப்பதான் கட்டியிருக்கிறோம். அது இடிஞ்சு விழுந்திடும். சரி, இப்ப அங்க யாரு இருக்கிறாருண்ணு சொன்ன,’’ என்று ஐயர் கேட்டதும். ‘‘சாமி அது நம்ம தோட்டத்துக்கு பக்கத்து தோட்டக்காரர் மாயாண்டித்தேவர்’’ ண்ணு சொன்னான் முத்துக்கருப்பு. சட்டென்று நிமிர்ந்தார் ஐயர்.

மாயாண்டித்தேவர் வசதி வாய்ப்புகள் உடையவர் அவர் இந்த நேரத்தில் அங்கு வர வாய்ப்பில்லை என்று கருதிய ஐயர் முத்துக்கருப்பு பொய் சொல்றானா? வந்தது யாராக இருக்கும் என்று சந்தேகம் கொண்டவர் உடனே வெற்றிலை எடுத்தார். மைபோட்டு பார்த்தார். அப்போது குளக்கரையில் தலையில் முண்டாசு கட்டி, முறுக்கு மீசை முகத்தோடும், அஞ்சுமணி வல்லயத்தோடும், மாயாண்டித்தேவர் ரூபத்தில் ஊர்க்காடு சுடலைமாடன் நின்று கொண்டிருந்தார். அதை ஐயர் தெரிந்து கொண்டார்.

உடனே முத்துகருப்பு பக்கம் வந்தார். உன்கிட்ட மாயாண்டித்தேவர் என்ன சொன்னார் என்று கேட்டார். ‘‘நீ வரும் வரை நான் இங்கிருந்து போகமாட்டேன் என்று என் கைமேல் அடித்து சத்தியம் செய்தது போல வாக்குறுதி தந்து அனுப்பி வைத்தார்.’’ என்று முத்துக்கருப்பு கூறியதும். ஐயர் அருகில் இருந்த சாமிக்கண்ணு ‘‘அப்ப, நீ போகிற வரைக்கும் அவரு அங்க தான் இருப்பார். அப்படி தானா, சரி உள்ளே வா’’ என்று அழைத்த வேகத்தில் நாரம்பூலிங்க ஐயர், கண் அசைக்க, சாமிக்கண்ணு, முத்துகருப்பின் மூச்சை அடக்கினான்.

முத்துக்கருப்புக்கு கொடுத்த வாக்கின்படி, சத்தியத்தை தவறாமல் சுடலைமாடன் அவுசபுரி குளத்தின் கரையில் காவலாய் நிற்கிறார். பல ஆண்டுகளை கடந்த பின்னும் இந்த குளம் இதுவரை உடைந்ததில்லை. 1992ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது கூட இந்த குளம் உடைந்ததில்லை.

சு.இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

நீ யார்? நீ நினைத்தவை நடக்கிறதா? உன்னால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடிகிறதா?

என்னை மீறி அவனால என்ன செஞ்சுட முடியும்?’

– மனிதர்களில் சிலர் நெஞ்சை நிமிர்த்தி, கண்களை உருட்டித் தம்பட்டம் அடிப்பதைப் பார்த்திருக்கிறோம்.

சற்றும் பொருத்தம் இல்லாத வசனம் இது என்பதை பலரும் உணர்வதில்லை.

சுனாமியும், சூறாவளியும் சில வருடங்களுக்கு முன் சுற்றி அடித்து வளைத்தபோது மனிதன் கொஞ்சம் தெளிந்தான். இப்போது கொரோனா வந்தபோது இன்னும் கொஞ்சம் தெளிந்தான். ‘எல்லாம் நான்தான்’ என்கிற அகம்பாவமும் இறுக்கமும் குறைய வேண்டிய தருணம் இது.

பாட்டனுக்குப் பாட்டனும் பூட்டனுக்குப் பூட்டனும் தன்னை நம்பி வாழவில்லை. ஊர் எல்லையில் இருக்கிற மாரியாத்தாவையோ, ஊர் நடுவில் ராஜ கோபுரத்தோடு குடி இருக்கிற தெய்வத்தையோ நம்பித்தான் வாழ்ந்தார்கள்.

கண் விழித்ததும் கடவுளைத்தான் பார்த்தார்கள். கண் உறங்கப்போதும் கடவுளைத்தான் நினைத்தார்கள்.

நம்மை நம்மாலே காத்துக் கொள்ள முடியாதபோது ‘நான்தான் எல்லோருக்கும் சம்பளம் தருகிறேன்… நான்தான் சம்பாதிக்கிறேன்..’ என்பதெல்லாம் சும்மா காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிற ஜபர்தசு.

வீட்டை விட்டுக் காலடி வெளியே வைக்க முடியவில்லை. ‘இன்னிக்கு கிழக்கே சூலமா? மேற்கே சூலமா?’ என்று காலண்டரைப் பார்த்துத் தெரிந்து கொள்வதில் என்ன பயன்?

ஏ மனிதா…

வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கோயிலுக்குப் போக முடிகிறதா?

நண்பர்கள் வீட்டுக்குப் போக முடிகிறதா?

ஓட்டல் ஓட்டல் என்று பொஞ்சாதி சாப்பாட்டையே மறந்தவன், ‘உன் சாப்பாடு போல் வருமா?’ என்று பழியாய்க் கிடக்கின்றானே இன்று வீட்டில்!

காய்கறி வாங்கப் போனாலும், கம்பை சுழற்றிக் கொண்டு காவலர்கள் வந்து விடுவார்களோ என்று பயப்படத் தோன்றுகிறதல்லவா?

தேதி நிச்சயித்து, மண்டபம் அட்வான்ஸ் கொடுத்து, பத்திரிக்கை அடித்து எல்லாம் பூர்த்தி ஆயிற்று. பாவம், கல்யாணம் நடத்த முடிந்ததா?

உறவு முறையில் ஒரு சாவு என்றால், ‘மஸ்கட்டில் இருந்து மாமா வந்து கொண்டிருக்கிறார்’ என்று பிணம் காத்துக் கொண்டிருக்கும். ஆனால், சொந்தப் பையன் இருநூறு கி.மீ. தள்ளி இருந்தும் அப்பனை அடக்கம் பண்ண வர முடியவில்லையே இன்று!

யோசிப்பதற்கான கால அவகாசத்தைக் கடவுளே உனக்குத் தந்திருக்கிறார் – கொரோனா என்கிற அசுரன் மூலமாக!

குடும்பமே குதூகலம் என்பதை புரிந்து கொள்.

கஷ்டப்படுகிறவனுக்கு உதவ வேண்டும் என்பதை உணர்.

சுத்தத்தின் மறு பெயர்தான் ஆசாரம் என்று உணர்.

ஒவ்வொரு வீட்டிலும் கால்களைக் கழுவ வீட்டுக்கு வெளியே வைத்திருந்த சொம்பை, பஞ்சாயத்துக்கு மட்டுமே சொந்தம் என்று ஆக்கி விட்டாய். ஆக, நீ ஊரையும் கழுவவில்லை; கால்களையும் கழுவவில்லை.

போனது போகட்டும். இன்னும் காலம் இருக்கிறது.

இறைவன் என்றும் கனிவானவன்.

கொஞ்சம் அன்பாகச் சொல்லிப் பார்ப்பான்.

கேட்கவில்லையா? இப்படித்தான் அடாவடியாக ஆட்டம் போடுவான்.

இப்போதும் கேட்கவில்லையா? அடுத்து, தாண்டவம் ஆடி விடுவான்.

அவனும் ஆட வேண்டாம்; நாமும் ஆட வேண்டாம்.

அமைதியாகவே இருப்போம்.

அவனும் அமைதியாகவே இருப்பான்.

நாலு சுவரையும், ஜன்னல்களையும் ஆகாயத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் யோசித்துப் பார்…

இறையே சரணம்.! குருவே சரணம்.!!

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

குளிக்கும் முறைகளில் உள்ள அபூர்வ ரகசியங்கள்.!!

எல்லா நன்மைகளும் உங்களை நாடி வர ஒரே ஒரு குளியல் போதும்.!

குளிக்கும் நேரம்,குளிக்கும் நிலை, குளிக்கும் திசை மூன்றும் மிக முக்கியம்.!

குளிப்பதற்குக் கூட திசையா?… இதெல்லாம் ஏமாற்று வேலை, மூடப்பழக்கம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் எதையுமே காரணம் இல்லாமல் சொல்லவில்லை.
அவர்கள் செய்த ஒவ்வொரு செயல்களுக்குப் பின்னும் பல ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன.!

அந்த வகையில், குளிப்பதையும் எப்போது குளிக்க வேண்டும்.
எந்த திசையில் நின்று குளிக்க வேண்டும் என்று வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.

குளிக்கும் முறைகளில் உள்ள அபூர்வ ரகசியங்கள்.

காலை ஆறுமணிக்குள்ளும் மாலை ஆறு மணிக்குள்ளும் என்று இருவேளை குளிர்ந்த நீரில் குளிப்பது உத்தமம்.!

ஒருவேளை மட்டுமே குளிப்பவர்கள் அதிகாலை 4.30 மணி முதல் காலை 8 மணிக்குள் குளித்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும்.!

குளிக்கும் போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். இவை இரண்டும் குளிப்பதற்கான உத்தம திசைகளாகும்.

கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தாலும் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல்வலி வரும்.

குளியல் அறை எப்படி இருந்தாலும் குளிக்க நிற்கும் நிலையை கிழக்குப்பார்த்து அல்லது வடக்குப்பார்த்து என்று வைத்துக்கொள்ளலாம்.!

முழு உணவு சாப்பிட்டு 4 மணி நேரமும் சிற்றுண்டி என்றால் 2 மணி நேரமும் கழிந்த பின்தான் குளிக்க வேண்டும்.!
உடற்பயிற்சி,யோகாசனம் போன்றவை செய்தாலோ எண்ணெய் தேய்த்திருந்தாலோ குறைந்தது 15 நிமிடம் முதல் ஒருமணி நேரம் கழித்தே குளிக்க வேண்டும்.!

தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.
குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் ஓம் என்று த்யானம் செய்து எழுதுங்கள். அந்தநீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும்.

இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.

அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.!

நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை. அல்லது மேலுள்ள அக்னி உடலின் ஆழத்திற்கு சென்று நோய்களை உருவாக்கும்.

தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை “பிருஷ்டம்” என்பர்.
அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.
அதில் ஒரு நன்மையும் உண்டு ஆற்றில் குளிக்கும் போது முதுகில் எதாவது அட்டைபூச்சிகள் இருந்தால் கூட தெரியாது.முதுகை முதலில் துடைத்தால் அவை மேலே வராமல் தடுக்கப்படும்.!

துண்டை குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம். ஆனால் நாம் அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிக்கிறோம். உலர்ந்த துணியானது உள்சூட்டை வேகமாக பரவச்செய்து பலவித உள் நோய்களை உருவாக்கும்.

குளிக்கும் போது குறைந்தப்பட்சம் ஏதேனும் ஒரு துண்டுத்துணியையாவது அணிந்தே குளிக்க வேண்டும். அல்லது நீரின் குளிர்ச்சி உடலில் தங்காது வேகமாக வெளியேறி தோசத்தை உண்டாக்கும்.!

பிறருடன் வாய்திறந்து பேசாமல் செய்கின்ற ஐந்து வேலைகளில் குளியலும் ஒன்று.

1.பிராத்தனை செய்தல்
2.யோகம் செய்தல்
3.படித்தல்
4.குளித்தல்
5.சாப்பிடுதல்

ஆற்றில் குளிப்பவர்கள் ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.

குளியலை மிக மெதுவாக கடைப்பிடிக்க வேண்டும். வேகமாக குளித்தால் நரம்புத்தளர்ச்சி, இரத்தஅழுத்தம் ஏற்படும்.!

குளிக்கும் நீரில் வேண்டும் என்றே காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை.!

நீரை விரயம் செய்ய செய்ய கடன் அதிகரிக்கும்.

கடல் நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களையும், சகல தோஷங்களையும் அறுக்கும்.!

வெள்ளியன்று கடல் நீரில் குளிப்பது நல்லது அல்ல.

ஆலயங்கள் இல்லாத ஊரிலும் ஆறுகள் இல்லாத ஊர்களிலும் குடி இருக்க வேண்டாம் என்பார்கள் பெரியோர்கள்.

ஏன் தெரியுமா? வெளியே சுத்த படுத்த ஆறுகள் , உள்ளே சுத்தம் படுத்த ஆலயங்கள். இதை சரியாக பயன் படுத்த கூடிய மாநிலத்திலே கேரளா தான் முதலிடம் ஆகையால் தான் கேரளாவில் இதனை அதிகமாக கடை பிடித்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கிறது.!

குளித்து முடித்த பின்பு உங்கள் மனம் கவர்ந்த இறைநாமத்தை மூன்று முறை கூறுங்கள்.
குளித்தபின்பு 20 நிமிடம் கழித்து உணவு உண்ணுங்கள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Saturday, 11 July 2020

திருவெம்பாவை பாடினால் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா ?

மார்கழி மாதத்தில் கோவிலுக்கு செல்பவர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடினால், அளவற்ற புண்ணியத்தையும், தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமண யோகமும் கைகூடிவரும். மேலும், மார்கழி மாதத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாயு சக்தியான தூய்மையான காற்று பூமியெங்கம் பரவி இருக்கும். அந்த தூய்மையான காற்றை சுவாதித்தால் ரத்த ஓட்டம் சீராகி உடம்பில் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மையாகும்.

மற்ற நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபடுவது செய்தால் தான் உரிய பலனும் புண்ணியமும் கிடைக்கும். ஆனால், மார்கழி மாதத்தில் வெறுமனே கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து வந்தாலே புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கு காரணம் இந்த மாதத்தில் தான் வைணவர்களுக்கு பிரியமான வைகுண்ட ஏகாதசி திருநாளும், சைவ சமயத்தை சேர்ந்தவர்களுக்கு பிடித்தமான ஆருத்ரா தரிசன திருநாளும் வருவதால் தான்.

மார்கழி மாதத்தில் விரதம் இருப்பவர்கள், அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, கோவிலுக்கு சென்று திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்து வருவார்கள். இதில் திருப்பாவை பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அருளித் தந்தது. திருவெம்பாவை சைவ சமயக்குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அருளியது.

திருவெம்பாவை பாடலை மாணிக்கவாசகர் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் அருளியதாகும். அதேபோல், திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் திருப்பெருந்துறையில் அருளியது.

கன்னிப் பெண்கள் தோழியரை தூக்கத்தில் இருந்து எழுப்பி, அனைவரும் ஒன்று சேர்ந்து நீர்நிலைகளுக்கு சென்று கூட்டமாக குளித்துவிட்டு தாங்கள் வழிபடும் தெய்வத்திடம், தங்களின் வாழ்வு வளமோடு இருக்கவேண்டும் என்றும், தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வேண்டும் என்றும் வேண்டிக்கொள்வதாக அமைந்த பாடல்கள் இவை.

திருவெம்பாவை பாடல்கள் இருபதும், திருவண்ணாமலையில் இருந்தபோது, அங்கிருந்த கன்னிப்பெண்களும் சிறுமிகளும் பாவை நோன்பு இருப்பதைக் கண்டு,
தன்னையும் ஒரு கன்னிப்பெண்ணாக கற்பனை செய்துகொண்டு பாடிய பதிகங்களாகும்.

திருவெம்பாவை பதிகத்தில் முதலில் வரும் எட்டு பாடல்களும் கன்னிப்பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு, அனைவரும் எம்பெருமான் ஈசனின் புகழைப் பாடிக்கொண்டே, குளத்திற்கு நீராடச்செல்வதையும், ஒன்பதாவது பாடலில் தங்களின் பிரார்த்தனையை இறைவனிடம் வைப்பதாகவும், பத்தாவது பாடல் இறைவனை புகழ்ந்து பாடும் தன்மையை கேட்பதையும் உணர்த்துகின்றன.

அடுத்து வரும் பத்து பாடல்களும், அனைவரும் சேர்ந்து நீராடுவதை உணர்த்துவதாகவும், அமைந்துள்ளன. இவ்விரண்டு பதிகங்களும், கன்னிப்பெண்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடல்களாக அமைந்துள்ளதையும், ஒரே வயதினர் பேசும்போது, அவர்களுக்குள்ளே எழும் கேலியும், கிண்டலும், பரிகாசமும் ஆங்காங்கே வெளிப்படுவதையும் நாம் காணமுடியும். இவ்விரண்டு பதிகங்களிலும் பல தத்துவக் கருத்துக்கள் புதைந்து கிடக்கின்றன.

ஆகவே தான், இந்துக்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து, விரதம் இருப்பதும், கோவில்களுக்கு சென்று இறைவனை தரிசித்தும் வருகின்றனர். மேலும், மற்ற நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கும், மார்கழி மாதத்தில் வழிபடுவதற்கும் வித்தியாசம் உண்டு. மற்ற மாதங்களில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் தான் அதற்குறிய பலன் கிட்டும். ஆனால், மார்கழி மாதத்தில் வெறுமனே தரிசித்தாலே இறைவனின் பூரண ஆசி கிடைத்திடும்.

மேலும், மார்கழி மாதத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாயு சக்தியான தூய்மையான காற்று பூமியெங்கம் பரவி இருக்கும். அந்த தூய்மையான காற்றை சுவாதித்தால் ரத்த ஓட்டம் சீராகி உடம்பில் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மையாகும்.

சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் அனைவரும், மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையில் உள்ள இருபது பாடல்களையும், திருப்பள்ளியெழுச்சியில் உள்ள பத்து பாடல்களையும் மார்கழி மாதத்தில் பாடுவது 900 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் மரபாகும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴