Thursday, 18 June 2020

கடவுள் “இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?.

கவிஞர் கண்ண தாசன் புகழ் பெற்றிருந்த நேரம் அது…
அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் “இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?. ” என கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ!
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான்

இறைவன் ஒன்பது ஓட்டைக்குள்ளே ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்.

முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் – அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் – அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

வெள்ளருவிக் குள்ளிருந்து மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் – அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

வானவெளிப் பட்டணத்தில் வட்டமதிச் சக்கரத்தில் ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் – அவனை
நாடிவிட்டால் அவன்தான் இறைவன்

அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே ஆசைமலர் பூத்திருந்தால் நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் – அவனை நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்

கற்றவர்க்குக் கண் கொடுப்பான் அற்றவர்க்குக் கை கொடுப்பான் பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் – அவனை
பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன்

பஞ்சுபடும் பாடுபடும் நெஞ்சுபடும் பாடறிந்து அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் – அவன்தான்
ஆறுதலைத் தந்தருளும் இறைவன்.

கல்லிருக்கும் தேரைகண்டு கருவிருக்கும் பிள்ளை கண்டு உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் – அதை
உண்டுகளிப் போர்க்கவனே இறைவன்
முதலினுக்கு மேலிருப்பான் முடிவினுக்குக் கீழிருப்பான் உதவிக்கு ஓடிவரும் ஒருவன் – அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

நெருப்பினில் சூடு வைத்தான் நீரினில் குளிர்ச்சி வைத்தான் கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் – உள்ளம்
கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்

உள்ளத்தின் உள் விளங்கி உள்ளுக் குள்ளே அடங்கி உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் – ஓர்
உருவமில்லா அவன்தான் இறைவன்.

கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் – அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்

சின்னஞ்சிறு சக்கரத்தில் ஜீவன்களைச் சுற்ற வைத்து தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் – அவனைத்தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்

தான் பெரிய வீரனென்று தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும் நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் – அவன்தான் நாடகத்தை ஆடவைத்த இறைவன்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment