நேர்மை, நல்லொழுக்கம், பிறர் மனம் புண்படாமல் பேசுதல், அடக்கமாய் இருத்தல் போன்றவை ஆத்ம குணங்கள் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த ஆத்ம குணங்கள் அநேகம்.
நேர்மை, நல்லொழுக்கம், பிறர் மனம் புண்படாமல் பேசுதல், அடக்கமாய் இருத்தல் போன்றவை ஆத்ம குணங்கள் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த ஆத்ம குணங்கள் அநேகம். அவற்றில் சில
1. எல்லோரிடமும் பகையில்லாமல் (விரோதம்) இருக்க வேண்டும்.
2. தனக்குத் தீங்கு செய்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்.
3. கருணையுடன் இருக்க வேண்டும்.
4. அகங்கார, மமகாரம் (நான், என்னுடையது) இல்லா மல் இருக்க வேண்டும்.
5. உடல் மீது ஆசை வைக்கக் கூடாது.
6. சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிக்க வேண்டும்.
7. சோதனைகள் வரும்போது சகித்துக் கொள்ள வேண்டும்.
8. கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்.
9. ஆத்மாவைத் தவிர மற்றவற்றில் ஆசை இல்லாமல் இருக்க வேண்டும்.
10. சுத்தமான, சாத்விகமான ஆகாரத்தை உட்கொள்ள வேண்டும்.
11. புகழ்தல், இகழ்தல் இரண்டையும் ஒன்றாகக் கருத வேண்டும்.
12. பயப்படாமல் இருக்க வேண்டும். (அச்சம் கூடாது)
13. மனம் தூய்மையாக இருக்க வேண்டும். நேர்மையாகவும் இருக்க வேண்டும்.
14. பிறர் மனம் துன்புறுத்தாது பேச வேண்டும்.
15. தெளிந்த உள்ளம் வேண்டும்.
16. அடக்கமாய் இருக்க வேண்டும்.
17. ஆடம்பரம் கூடாது.
18. அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
19. பொறுமையுடன் இருக்க வேண்டும்.
20. மனம், சரீரம், ஆத்மா, ஆடை, ஆகாரம் எல்லாம் சுத்தமாய் இருக்க வேண்டும்.
21. எந்த காரியத்தையும் விடாமுயற்சியுடன் செய்ய வேண்டும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment