அம்மனுக்கு செய்யும் அபிஷேகங்கள் நல்ல பலனைத்தரக்கூடியவை. அந்த வகையில் எந்த பொருளில் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
வில்வ இலைகளால் அம்மனை பூஜித்தால், இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சி கிடைக்கும்.
கற்பூரம், கஸ்தூரி, அகில், குங்குமப்பூ ஆகியவற்றுடன் சந்தனம் கலந்து, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தால், பல பிறவிகளில் செய்த பாவம் தொலையும்.
லட்சுமி தேவிக்கும், சரஸ்வதி தேவிக்கும் மாம்பழச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால், அழியா புகழ் பெறலாம்.
ரத்தினங்களைச் சமர்ப்பித்து தேவியை ஆராதிப்பவர், குபேரனாக மாறுவார்.
பூக்களைக் கொண்டு அம்மனை பூஜிப்பவருக்கு, கயிலாய வாசம் கிடைக்கும்.
அம்பாளுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து வழிபட்டால், நினைத்த காரியம் உடனே நிறைவேறும்.
வேப்பிலை மாலை அணிவித்து வழிபட்டால், நீண்ட நாளாக குணமாகாத பிணிகள் கூட நீங்கிவிடும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment