மகா சிவராத்திரி, மாத சிவராத்திரிக்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.
“கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று அவ்வையார் பாடி வைத்தார். ஆலயம் இல்லாத ஊரில் அடியெடுத்து வைக்கக் கூட ஆன்றோர்கள் யோசித்திருக்கிறார்கள். அந்த ஆலயம் இரவு முழுவதும் திறந்திருக்கின்ற திருநாள் தான் சிவராத்திரி. வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள் கூட, ஒருநாளாகவும், திருநாளாகவும் கொண்டாடப்படும் சிவராத்திரி இரவில், விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.
இந்த விழிப்பு விரதத்தை ‘மங்கலம் தரும் மகாசிவராத்திரி’ என்றும், ‘செல்வ வளம் தரும் சிவராத்திரி’ என்றும் ‘சொர்க்கத்தை வழங்கும் தூய சிவராத்திரி’ என்றும், ‘எதிர்ப்புகளை அகற்றும் இனிய சிவராத்திரி’ என்றும் ‘காரிய வெற்றி வழங்கும் கனிவான சிவராத்திரி’ என்றும் மக்கள் வர்ணிக்கிறார்கள்.
சிவன் பெயரை உச்சரித்து சிறப்புகளை பெற்ற அறுபத்து மூவரைப் போல, நீங்களும் மாற வேண்டுமானால் தேர்ந்தெடுக்க வேண்டிய நாள் சிவராத்திரி. அன்றைய தினம் நடைபெறும் ஆறுகால பூஜைகளில் கலந்துகொண்டு சிவனை வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற்று வாழமுடியும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment