Tuesday, 28 May 2019

சகல பாவங்களையும் போக்குவார் ராமர் பூஜித்த ராமேஸ்வரர்.!!

மதுரை


ஈசனின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ராமேஸ்வரமும் ஒன்று. இந்தியாவிலேயே மிகப்பெரிய பிராகாரம் உள்ள கோயில் இது மட்டுமே. 4 ஆயிரம் அடி நீளப் பிராகாரத்தைக் கொண்டிருப்பதோடு, 865 அடி உயரம், 657 அடி அகலம் உடைய மிகப்பெரிய ராஜகோபுரத்தையும் கொண்டு விளங்குகிறது இக்கோயில். ராமநாதர் அருளும் மூலக்கருவறையில் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்படிகலிங்கமும், பர்வதவர்த்தினியின்சந்நதியில் ஸ்ரீசக்ரமும் இன்றும் தன் தண்ணொளியை பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஈசன் ராமநாதர் என்றும் ராமேஸ்வரர் என்றும், அம்பிகை பர்வதவர்த்தினி என்றும் மலைவளர்காதலி என்றும் வணங்கப்படுகிறார்கள். 

ராமபிரானால் தனக்கு தரப்பட்ட ரங்கநாதர் திருவுருவை ஸ்ரீரங்கத்தில் வைத்த ஏக்கம் தீர, இலங்கை செல்லும் வழியில் இத்தலம் வந்த விபீஷணன், அம்பாள் சந்நதி பிராகாரத்தில் பிரதிஷ்டை செய்த ரங்கநாதப் பெருமாள், கையில் தண்டத்தோடு அருள்கிறார். ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் இத்தலத்தில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய எண்ணி அனுமனை காசியிலிருந்து லிங்கம் எடுத்து வரப் பணித்தார். அனுமன் வரத் தாமதமாகவே சீதையும் ராமனும் மண்ணினால் லிங்கம் அமைத்து பூஜித்தனர். ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், இந்த ஈசன் ராமேஸ்வரர் ஆனார். காசியிலிருந்து அனுமன் எடுத்து வந்த லிங்கம் காசிவிஸ்வநாதராக இன்றும் இத்தலத்தில் அருள்கிறார். முதலில் இவருக்குத்தான் இத்தல பூஜைகள் நடைபெறுகிறது.

பக்தர்களின் பாவங்களை பாதாளத்தில் தள்ளி விட்டு அவர்களைக் காப்பாற்றுவதால் இங்குள்ள பைரவர் பாதாள பைரவராக, கோடி தீர்த்தம் அருகில் அருள்கிறார்.ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இத்தல நடராஜர் சந்நதியில் இருக்கும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் நிரந்தரமாக எரியும் விளக்கில் நெய் ஊற்றி வழிபட அவை நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை. இக்கோயிலில் வைணவ ஆலயங்களைப் போல தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது.ஆலயத்தில் ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் ஆன ருத்ராட்சப்பந்தல் ஒன்று நேபாள நாட்டு பக்தர் ஒருவரால் காணிக்கையாகத் தரப்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் ராமாயண கதாபாத்திரங்கள் சிவனை வழிபடுவது போல் உள்ள சிற்பங்கள் அற்புதமாகக் காட்சியளிக்கின்றன. இவற்றை தரிசிக்கக் கட்டணம் செலுத்த வேண்டும். சகல விதமான தோஷங்களையும், பாவங்களையும் இக்கோயில் வழிபாடு அழித்திடும் என்கிறார்கள். 

தெற்கே இருப்பவர்கள் காசிக்குப் புனிதப் பயணம் போவதுபோல காசியிலிருப்பவர்கள் இந்த ராமேஸ்வரம் தலத்திற்கு புனிதப் பயணம் வருகிறார்கள். இத்தலத்தில் திருமகளை மணந்த திருமால், சேதுமாதவராக தனி சந்நதியில் அருள்கிறார். சுந்தரபாண்டியன் எனும் மன்னனின் பக்தியை மெச்சி திருமகளை அவருக்கு மகளாகப் பிறக்கச் செய்து பின் மணந்ததாக ஐதீகம். இத்தல நந்தியம்பெருமான் பன்னிரெண்டு அடி நீளமும் ஒன்பதடி உயரமும் கொண்டவராய் சுதை வடிவில் அருள்கிறார். இத்தலத்தில் உள்ள 32 தீர்த்தங்களில் 14 தீர்த்தங்கள் திருக்கோயிலின் உள்ளேயே உள்ளன. அதில் கற்புக்கரசியான சீதாதேவியை சோதித்த பாவம் நீங்க அக்னிதேவன் நீராடிய அக்னிதீர்த்தக் கட்டம் புகழ்பெற்றது. இதைத்தவிர ராமர் தன் தனுசினால் உண்டாக்கிய கோடி தீர்த்தமும், தனுஷ்கோடி தீர்த்தமும் இத்தலத்தில் ராமன் பெருமையைப் பறைசாற்றுகின்றன. மாசி மாத பிரம்மோத்சவமும், ஆடி மாத அம்மன் உற்சவமும் சிறப்பானவை. அச்சமயம் அம்மன் தபசும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 125 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment