சுபகாரியங்கள் செய்வதற்கு உகந்ததல்ல என்று ஒதுக்கப்பட்ட அஷ்டமியும், நவமியும் கவலையுற்று இறைவனிடம் முறையிட்டன. ஸ்ரீமந் நராயணன் அவதாரம் எடுக்கும் காலத்தில் நீங்களும் சிறப்பு பெறுவீர்கள் என்று வாக்களித்தார் எம்பெருமானாகிய சிவப்பெருமான்.
ஸ்ரீமந் நாராயணன் கோகுல கிருஷ்ணனாக அவதரித்தது அஷ்டமியில்தான் என்பதாலேயே கோகுலாஷ்டமி விழாவாக பக்தர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு அஷ்டமி சிறப்பு பெற்றது. தசரதனுக்கு மகனாக அவதாரங்களில் முக்கிய சிறப்பான அவதாரமாக ஸ்ரீமந் நாராயணன் இராமனாக அவதரித்தது நவமியன்று. இந்த நவமிதான் ஸ்ரீஇராமநவமி என்று நாராயண பக்தர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம் வளர்பிற நவமியும் புனர்பூச நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளே ஸ்ரீ இராம நவமி.
ஸ்ரீமந்நாராயணன் எடுத்த அவதாரங்களில் மூவுலகத்திலும் நடக்கும் விஷயங் களை முன்கூட்டியே அறிந்திருந்தார். ஆனால் இராம அவதாரத்தில் மட்டுமே மனிதனாகவே வாழ்ந்தார். தெய்வமாக இருந்தாலும் மனிதப்பிறவியாக அவதாரம் தரித்ததால் இறுதிவரை நீதி நெறி தவறாமல் ஒழுக்க சீலராக வாழ்ந்த பெருமை யைப் பெற்றார். ஸ்ரீ இராமன் பிறந்தபோது நவக்கிரகங்களில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்ததாக ஸ்ரீ இராமனது ஜாதகம் தெரிவிக்கிறது.
ஸ்ரீஇராமர் தாயிற் சிறந்த கோயிலுமில்லை.. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த உதாரண புருஷராக விளங்கினார். ஏக பத்தினி விரதனாய் அவதாரப் புருஷனாய் மனிதப்பிறவிக்கே எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். பதிவிரதைகளாய் பலரை உதாரணம் காட்டும் புராணங்கள் பதிவிரதனாய் சொல்வது ஸ்ரீ இராமனைத்தான். அதுமட்டுமல்ல... சகோதரனுக்கு நல்ல அண்ணனாகவும், நாட்டு மக்களைக் காப்பதில் நல்ல அரசனாகவும் வாழ்ந்தார்.
மனித அவதாரத்தில் பலவித துன்பங்களைச் சந்தித்தவர் ஸ்ரீ இராமன். ஒருபுறம் பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளால் ஊரே கொண்டாட்டத்தில் திளைத்த போதும்இயல்பாக இருந்தார். மறுபுறம் சிற்றன்னை கைகேயி கூனியின் பேச்சைக் கேட்டு தசரத அரசனிடம் இராமரை காட்டுக்கு வனவாசம் போக வலியுறுத்தி யதைக் கேள்விப்பட்டும் இயல்பாகவே இருந்தார். தெய்வப்பிறவிக்கு எல்லாமே சாத்தியம்தான். ஆனால் தெய்வம் என்பதை அறியாத பிறவியில் ஸ்ரீ இராமனால் எப்படி இவ்வளவு இயல்பாக இருக்க முடிந்தது. அதுதான் இராம அவதாரத்தின் சிறப்பு.
வாழ்வின் எல்லா சோதனை காலங்களையும் புன்முறுவலோடு எதிர்கொண் டவர் ஸ்ரீஇராமன். மனைவி சீதாபிராட்டியை இராவணன் கவர்ந்துசென்ற போது அவரை பிரிந்து தவித்ததும் பகீரத பிரயத்தனமாய் சீதாதேவியை மீட்டதும் இரா மயணக்கதையில் மட்டுமல்ல பிறவி முழுமைக்கும் சொல்லித்தீராதவை.. தஞ்சமென்று வந்த எதிரிகளுக்கும் அபயம் அளித்தவர் ஸ்ரீ இராமர்.
ஸ்ரீமந் நாராயணனின் இராம அவதாரத்தைப் பற்றிய இராமயணக் கதைகளைப் படிப்பது நமக்கு வாழ்வில் புண்ணியத்தைச் சேர்க்கும். சகல நன்மைகளும் வந்து சேரும். மன அமைதி பெறவும்.. இறுதி காலத்தை அல்ல வாழும் காலத்தை நல்ல முறையில் கழிக்கவும் இராமயணத்தைப் படியுங்கள்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment