Monday, 29 April 2019

உத்தமசோழபுரம் கரபுரநாதருக்கு தாராபிஷேகம்.!!

ஆட்டையாம்பட்டி: தமிழகத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் நடைபெறும் காலத்தில் ஈஸ்வரனுக்கு மேலே தாராபாத்திரம் வைக்கப்பட்டு அதில் வெட்டிவேர், விளாமிச்சை வேர், பன்னீர், ஏலக்காய், சாதிக்காய் மற்றும் பச்சை கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை போட்டு அக்னி நட்சத்திரம் நடைபெறும் நாட்களில் ஒவ்வொரு துளியாக சுவாமி மேல் விழும் பன்னீரில் நனையும்  ஈஸ்வரன் மனம் குளிரும். இப்படிப்பட்ட சமயத்தில்  மழை பெய்து மக்கள் மனம் குளிரும் என்பது ஐதீகம். 


தற்போது, சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உத்தம சோழபுரத்தில் அமைந்துள்ள கரபுரநாதருக்கு ஊர் செழித்து மழையை வரவழைக்கும் வகையில், தாராபாத்திர அபிஷேகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் தாராபாத்திர அபிஷேகம், இந்தாண்டு  ஒரு மாதத்திற்கு முன்னரே தாராபாத்திர அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        _என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment