தமிழ்நாட்டில் உள்ள தேனிமாவட்டத்தில் ஆண்டிப்பட்டி- தெப்பம்பட்டி அருகில் இருக்கும் மலைப்பகுதியில் அமைந்துள்ளது வேலப்பர் ஆலயம். தெப்பம் பட்டியில் பெரிய தெப்பம் ஒன்று உள்ளது. இந்த தெப்பத்துக்கும், தலத்துக்கும் சுரங்கத் தொடர்புகள் இருப்பதாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப 300 படிகளைக் கடந்தால் வேலப்பரைத் தரிசிக்கலாம். இங்கு மூலவராக இருக்கும் வேலப்பரை மாவூற்று வேலப்பர் என்று அழைக்கிறார்கள். இவர் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்துக்கு அருகில் உள்ள நீரானது மருதமரத்தின் வேர்ப்பகுதியில் ஊற்றெடுத்து வழிந்தோடி பெரிய தீர்த்தமாக பெருகியது. மாமரத்தின் வேரிலிருந்து ஊற்று பெருகியதால் வேலப்பனை மாவூற்று வேலப்பன் என்று அழைக்கிறார்கள்.
பல்லாண்டுகளுக்கு முன்பு மலைப்பகுதியில் பளிஞர் இனத்தவர்கள் வசித்துவந்தனர். அவர்கள் வள்ளிக்கிழங்கை பயிரிட்டு அவற்றை உணவாக உண்டு வந்தனர். ஒருமுறை வள்ளிக்கிழங்கை எடுக்க மண்ணை கிளறிய போது இக்கோயில் உள்ள இடத்தில் வள்ளிக்கிழங்கின் வேர் மட்டும் வளர்ந்துக் கொண்டே போனது. வேரைத் தோண்டியபடி அவர்கள் செல்ல செல்ல ஆழமும் அதிகரித்தது. எனினும் விடாமல் தோண்டியதில் வேரின் முடிவில் சுயம்புவாக வேலப்பர் இருந்ததைப் பழங்குடியினர் கண்டனர். அப்போதைய ஜமீனிடம் இத்தகவலைத் தெரிவித்து சுயம்பு மூர்த்தியாக உருவான வேலப்பருக்கு கோயில் எழுப்பப்பட்டது. இன்றும் இந்த மூலவருக்கு வழிபாடு செய்வது பளிஞர் இன மக்கள்தான். தமிழகத்தில் எங்கும் இல்லாத சிறப்பாக இந்த இனத்தவர் பரம்பரையாக பூஜை செய்வதோடு அருள்வாக்கும் கொடுக்கின்றனர். மாவூற்று வேலப்பரும், மாவூற்று விநாயகரும் வடக்கு நோக்கி அருள்வது இத்தலத்தின் சிறப்பு. உடன் சப்தமாதர்களும் அருள் புரிகின்றனர். மலையின் அடிவாரத்தில் சக்தி கருப்பண்ணசாமி அருள்புரிகின்றனர்.
மாவூற்று வேலப்பரை பக்தர்களுடன் குகைகள் நிறைந்துள்ள பகுதியில் வசிக்கும் சித்தர்களும், யோகிகளும் வேலப்பனை நினைத்து தவம் புரிவதாக அங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். கடன் தொல்லை, தீராத பிணி, சரும வியாதிகளை உடையவர்கள் இயற்கை அன்னையின் மடியில் எழில் கொஞ்சும் அழகில் அமைந்திருக்கும் ஊற்றில் நீராடி, மாவூற்று வேலப்பனை மனமுருக வேண்டினால் தீராத நோயும் தீரும். மனக்குறைகளும் அகலும். இங்குள்ள வேலப்பருக்கு பால், இளநீர்,பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் நினைத்தது நிறைவேற வேலப்பனை தரிசித்து பால்குடம், காவடி எடுக்கின்றனர். விவசாயிகள் முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டு விவசாயம் தழைக்க வேண்டுவார்கள். பக்தர்கள் ஊற்றிலிருந்து வெளிப்படும் தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்துச் செல்கின்றனர். இந்தத் தீர்த்தத்தை நீரில் கலந்து வீட்டுக்குள் தெளித்தால் நல்ல சக்திகள் வீட்டுக்குள் இருக்கும் என்பது நம்பிக்கை.
மாவூற்று வேலவனை மனமுருக தரிசிப்போம். நினைத்த வரம் பெறுவோம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment