தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் நவக்கிரகச் சிலைகளில் ஒன்றாக சனீஸ்வர பகவான் இருந்திருப்பார். ஆனால் சில கோயில்களில் சனீஸ்வர பகவான் துணைக் கோவிலாக அமைந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தேனி மாவட்டம் குச்சனூர் என்ற பகுதியில் சனீஸ்வர பகவான் சுயம்புவாகத் தோன்றித் தனக்கென ஒரு கோயில் கொண்டுள்ளார்.
இங்கு தினகரன் என்ற அரசன், செண்பகநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்தவன். இவர் குழந்தைப்பேறின்மையால் அவதிப்பட்டு வந்தார். குழந்தைக்காக இறைவனிடம் வேண்டிவந்த தினகரனுக்கு கோயிலில் அசரீரி ( உருவம் இல்லாத வார்த்தைகள்) ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்குப் பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வளர்த்து வர வேண்டும் என்றும், அதன் பிறகு அரசனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அதே போல் அசரீரியில் சொன்னபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் அவனிடம் வந்து வந்தான். அந்த மன்னனும் அந்தச் சிறுவனுக்குச் சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அதன் பின்பு, அசரீரியில் சொல்லியபடியே அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அரசனும், அரசியும் அந்தக் குழந்தைக்குச் சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர்.
பின்னர் சந்திரவதனன் மற்றும் சதாகன் என்ற இருவரையும் வளர்த்து பெரிய ஆளாக்கிவிட்டனர். இதில் சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். ஆனால் சதாகன்,சந்திரவதனன்னுக்கு மாறாக இருந்தான். இதனால், அரசன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனையே அரசனாக்குவது என்று முடிவு செய்து அவனுக்கே முடிசூட்டினான். இந்நிலையில் அரசன் தினகரனுக்கு ஏழரை சனி பிடித்தது. இதனால் தினகரன் பெரும் துன்பத்திற்கு ஆளானான். தந்தையின் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து வழிபட்டான்.
வளர்ப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு துன்பம் தராதே அத்துன்பத்தை எனக்கு கொடு என்று வேண்டினான். பின் சனீஸ்வர பகவான் அவன் முன்தோன்றி, “மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முற்பிறவிப் பாவ வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது. பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல கஷ்டங்கள் ஏற்படும். இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு, நற்செயல்களுக்கு ஏற்ப்ப இறுதியில் நன்மை அளிக்கப்படும் என்று கூறினார். தன் தந்தையின் கஷ்ட்த்தை தாங்கமுடியாமல் சந்திரவதனன் தனது தந்தையின் துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகைக் காலம் சனி தோஷம் பிடிக்கும் என்றும், அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதை ஏற்றுகொண்டான். சனீஸ்வர பகவான் அளித்த துன்பங்களையெல்லாம்
ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான், இந்த ஏழரை நாழிகைக் கால சனி தோஷம்கூட சந்திரவதனனின் முற்கால பிறவியின் வினைகளுக்கேற்ப தான் கஷ்டங்களை கொடுத்த்தாகவும் இனி யாருக்கும் எந்த குறையும் இருக்காது என்றும் உறுதியளித்தார். உடனே சந்திரவதனன் சனீஸ்வர பகவானிடம், சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்களை கஷ்டத்தில் இருந்து மீட்க அங்கேயே எழுந்தருள வேண்டும் என்று கேட்டுகொண்டான். சனீஸ்வரனும் அக்கோரிக்கையை ஏற்றுகொண்டு அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றினார். சந்திரவதனன், சுயம்பு வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லால் கூரை அமைத்தான்.
அதன் பிறகு செண்பகநல்லூர் என்றிருந்த ஊர் குச்சனூர் என்று பெயர் மாற்றமடைந்து விட்டது. அதன் பிறகு, சனி தோஷம் பிடித்துத் துன்பப்படும் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுத் துன்பம் நீங்கிச் செல்கின்றனர் என வரலாறு கூறுகின்றது.
சிறப்பு வழிபாடுகள்:
அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் ஆடிப் பெருந்திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர். சனீஸ்வர பகவானுக்கு காகம் வாகனமாகவும், எள் தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர். குச்சனூர் சனீஸ்வர பகவான் மற்ற தலங்களில் இல்லாத அளவிற்கு இங்கு சிறப்புடன் விளங்குகிறார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment