தான் வாழ்ந்த காலங்களிலும் சரி,தற்போது சமாதி நிலையிலும் சரி,தனது பக்தர்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றிய வண்ணம் இருக்கிறார் ஷீரடி மகான் ஸ்ரீ சாய் பாபா. தன்னை நம்பி ஷிரடி மண்ணை மிதித்தவர்களை என்றும் வெறுங்கையுடன் அனுப்பியதில்லை அந்த தெய்வம்.
பாபாவின் உபதேசங்கள் அழியாத வரம் பெற்றவை. குரு வாரமான இன்று சாய் மகானின் அற்புத மொழிகளை அறிவோம்.
" நீ எனக்கு முன்னால் விளக்கு ஏற்றினால் , உன் வாழ்வும் ஓளி மிக்கதாக ஆகும்.
நீ என்னுடைய வழிபாட்டு தலத்திற்கு வந்து என்னை வணங்கினால் பல பக்தர்கள் அங்கு வந்து வணங்கியதற்கு சமம் ஆக்குவேன்.
என்னை உன் வீட்டில் வைத்து வழிபட்டால் , உன்னுடைய அனைத்து வழிபாட்டிலும் என்னை நீ காணலாம் .
உனக்கு ஷீரடிக்கு வர மனது இருந்தால்,மீண்டும் மீண்டும் ஷீரடிக்கு வர வரவழைப்பேன்
நீ என்மீது தூய பக்தி கொண்டு அன்பு செலுத்தினால் , என்னுடைய முழு அன்பும் உனக்கு கிடைக்கும்.
நீ என்னை உன்னுடையவனாக நினைத்தால்,என்னை உன்னுள் நீயே காண முடியும்.
என்னுடைய சமாதியில் மிகுந்த பணிவோடு முன் தலையால் தொட்டு வணங்கினால்,அங்கு என்னையே நீ காணலாம்
என் சமாதிக்கு முன் வேண்டுவது கிடைக்கும்.
என் சமாதி முன் உன் இரு கைகளையும் நீட்டியபடி வேண்டும் பொழுது அந்த கைககள் நிறையும் அளவு அனைத்தும் நான் தருவேன்.
என்னை உன்னால் பார்க்க முடியாத பொழுது அழுதால் அந்த கண்ணீரிலேயே இறைவனின் ஓளி கிடைக்கும்".
ஓம் சாய் ராம்....
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment