சூரியனை 'அர்க்கன்' என்பர். 'அர்க்கம்' என்றால் 'எருக்கு'. இதனால் தான் சூரியனார்கோயிலில் தல விருட்சமாக எருக்கை வைத்துள்ளனர்.
ஆதிசங்கரர் அம்பாளைக் குறித்து 'சவுந்தர்ய லஹரி' என்னும் நூல் எழுதியுள்ளார். அதிலுள்ள ஸ்லோகத்தில் 'சசி மிஹிர வக்ஷோருஹயுகம்' என்ற சொல் வருகிறது. இதற்கு அம்பாள், தனது தனங்களாக சூரியனையும், சந்திரனையும் கொண்டு உலக உயிர்களுக்கு பாலூட்டுவதாகச் சொல்கிறார்.
சூரியனே நமக்கு உணவளிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. அதன் ஒளிக்கதிரில் இருந்து தான் தாவரங்கள் தங்களுக்குரிய சத்தைப் பெற்று சேமித்து வைத்துக் கொள்கின்றன. இலை, காய், பழம் என எந்த வகையாக இருந்தாலும் அது இருக்கிறது. இவற்றை நாம் சாப்பிடும் போது கிடைக்கும் சக்தி, சூரிய ஒளிக்கற்றை மூலமே கிடைக்கிறது.
சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. சூரியனுக்கே 'ஞாயிறு' என்ற பெயரும் உண்டு. தொல்காப்பியத்தில் சூரியனை 'ஞாயிறு' என்றே குறிப்பிட்டுள்ளனர்.
'ஞா' என்றால் 'நடுவில் தொங்குகிற'. 'யிறு' என்றால் 'இறுகப் பற்றிக் கொண்டுள்ள'. நடுவில் இருக்கும் சூரியன் மற்ற கிரகங்களை இறுகப் பற்றிக்
கொண்டுள்ளது. அதன் பிடி தளர்ந்தால் உலக மக்களின் கதி என்னாகுமென்றே தெரியாது.
'சூரியன்' என்னும் சொல்லுக்கு 'இயக்குபவன்' என்றும் பொருள் உண்டு. இந்த உலகையே இயக்குபவர் என்பதால், அவருக்கு நாம் விழா எடுக்கிறோம்.
சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமே தை. ஒளி வடிவான இவர் இம்மாதத்தில் மகரத்திற்கு செல்வதால் தான், சபரிமலையில் ஐயப்பன் மகர ஜோதியாகக் காட்சி தருகிறார்.
ஜோதிட சாஸ்திரப்படி ஆயுள், ஆரோக்கியத்திற்கு உரியவர் சூரியன். இதை விரும்பாதவர் யாருமில்லை. எனவே தான் அதிகாலையில் எழுந்து, சூரிய வழிபாடு செய்பவர்கள் ஆரோக்கியமாக தீர்க்காயுளுடன் இருப்பர் என்கிறார்கள்.
“அதிகாலையில் சூரியனைப் பார்க்காதவரின், வாழ்நாள் ஒவ்வொன்றும் வீணே,” என்கிறார் காஞ்சிப்பெரியவர்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment