Tuesday, 21 July 2020

சாம்பிராணியின் வகைகளும் அதனை தூபம் போடுவதால் உண்டாகும் பலன்கள்…!!

சாம்பிராணி போடுவது என்பது வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம் செய்வதற்கு நிகரான ஒன்றாகும்.

ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் சாம்பிராணி போடுவதின் மூலம் கிடைத்து விடும். சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.

சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.

சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.

சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.

சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.

சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.

சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.

சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.

சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்.

சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

உடலில் விபூதி எந்தெந்த இடங்களில் அணிய வேண்டும்?

நமசிவாய வாழ்க சிவமே ஜெயம் சிவமே தவம் ‌ எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசனே

இந்த உலகில் உள்ள அனைத்தும் இறுதியில் பிடி சாம்பலாக மாறும் என்னும் தத்துவத்தை திருநீறு உணர்த்துகிறது.

இதனால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாக கருதப்படுகிறது.

ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

திருநீறு அணியும் இடங்கள் : 

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை

தலை நடுவில் (உச்சி)
நெற்றி
மார்பு
தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
இடது தோள்
வலது தோள்
இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
இடது மணிக்கட்டு
வலது மணிக்கட்டு
இடது இடுப்பு
வலது இடுப்பு
இடது கால் நடுவில்
வலது கால் நடுவில்
முதுகுக்குக் கீழ்
கழுத்து முழுவதும்
வலது காதில் ஒரு பொட்டு
இடது காதில் ஒரு பொட்டு

*திருநீறு அணிவதன் பலன்கள்*

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

“கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!”

திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும், திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Monday, 20 July 2020

அமாசோம விரதம் 20.7.2020 திங்கட்கிழமை.!!

அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பாகும். இதையே அஸ்வத்த பிரதட்சணம் என்பார்கள்.

அரச மரத்தை ஞாயிறன்று வலம் வந்தால் நோய் அகலும்; திங்களன்று வலம் வந்தால் மங்களம் உண்டாகும்; செவ்வாய் தோஷங்கள் விலகும்; புதன் வியாபாரம் பெருகும்; வியாழன் கல்வி வளரும். வெள்ளி சகல சௌபாக்கியங்களும் கிட்டும்; சனி சர்வ கஷ்டங்களும் விலகி மகா லட்சுமியின் அருள் கிடைக்கும்.

மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும்; ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும்; ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும்; பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும்; நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்குமென்று நூல்கள் சொல்கின்றன.

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், அவனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.

“மூலதோ பிரம்ஹரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய
விருக்ஷ ராஜயதே நம:’

இந்த ஸ்லோகத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வரும்போது, தங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ அல்லது வேறு பொருளோ மரத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும். நூற்றியெட்டு சுற்றுகள் முடிந்ததும் அப்பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்கவேண்டும்.
இந்த வழிபாட்டை அமாசோமவார விரதமென்று கூறுவர். அன்றைய தினம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்; ஆடைகள் வாங்கி வழங்கலாம்.

அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம் பெறுவோம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Sunday, 19 July 2020

தெரிந்தோ, தெரியாமலோ செய்த குற்றத்திற்கான சாபம் நீங்க பரிகாரம்.!!

எந்த தோஷமும் இன்றி சிலருக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். மேலும் சிலருக்கு எந்த வேலையை தொடங்கினாலும் அதில் சில தடைகள் வந்துகொண்டே இருக்கும். அது போன்றவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.

சிலருக்கு தெய்வ குற்றம் உண்டாகி இருக்கும். அது தெரியாமல் கூட இருக்கலாம். பக்தர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமானது திருமண தடை. திருமண தடை நீக்க பரிகாரங்கள் ஏராளம் உள்ளன. திருமண தடைக்கு தெய்வ குற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்பிறவியில் தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது தெய்வ குற்றம் செய்து இருப்பீர்கள். நீங்கள் என்று இல்லை. உங்கள் பெற்றோர் அல்லது முன்னோர்கள் செய்து இருப்பார்கள். அதன் விளைவாக தான் திருமணம் கைகூடி வராமல் தள்ளி சென்று கொண்டே இருக்கும். ஜாதகத்தில் தோஷம் என்பது பொதுவானது. ஆனால் எந்த தோஷமும் இன்றி சிலருக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். மேலும் சிலருக்கு எந்த வேலையை தொடங்கினாலும் அதில் சில தடைகள் வந்துகொண்டே இருக்கும். அது போன்றவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.

துர்கை அம்மனுக்கு இதை செய்வதால் தெய்வ குற்றம் நீங்கும். அதை பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம் வாருங்கள். தெய்வக்குற்றம் மட்டும் இல்லை. சாபம் கூட திருமணம் மற்றும் தொழில் தடைக்கு காரணமாக இருக்கலாம். இந்த பிறவியிலோ அல்லது போன பிறவியிலோ யாருடைய சாபதிற்ககோ நீங்கள் ஆளாகி இருக்கலாம். சாபம் என்பது வழி வழியாக தொடர்கதையாக வருவது. ஒருவருக்கு இழைக்கபட்ட அநீதியானது சாபமாக மாறும் போது அது கட்டாயம் பலிக்கும். ஆனால் அதன் பலனை அனுபவிக்கும் போது அவர்களுக்கே தெரியாமல் போகலாம். அவர்களது சந்ததியினரும் கூட இந்த பலனில் பங்கு கொள்வார்கள். நீங்கள் கேட்டிருக்கலாம்.. சிலர், உன் குடும்பமே தழைக்காமல் போகும். உன் சந்ததியே துன்பமுறும் என்றெல்லாம் வயிற்றெரிச்சலுடன் சாபம் இடுவார்கள்.

அவையெல்லாம் பலிக்குமா? என்று கேட்டால் தெரியாது தான். ஆனால் சில சாபங்கள் மிகவும் கொடூரமான விதத்தில் இருக்கும். சாபம் பலிக்காது என்று கூற சான்றுகள் இல்லை. பலிக்கும் என்பதற்கு சில புராணங்கள் எடுத்துக்காட்டாக இருப்பது அனைவரும் அறிந்ததே. கண்ணகிக்கு இழைக்கபட்டது அநீதி. அதன் விளைவாக மதுரையே நிர்மூலமானது. அது போல் சபத்தினால் கூட தடைகள் ஏற்படக்கூடும். அந்த மாதிரியான தடைகளை நீக்கி நல்லது நடக்க இந்த வழிபாடு பெருமளவு துணை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. 1. துர்க்கை அம்மன் சன்னதியில் வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் காலை பத்தரை மணி முதல் பணிரெண்டு மணிக்குள்ளாக தாமரைத் தண்டினாலான திரி கொண்டு நெய் தீபம் ஏற்றி மனதார உங்கள் கோரிக்கைகளை வைத்து வழிபட்டு வந்தால் தெய்வக் குற்றம் நீங்கும். சாபத்தினால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை செய்து அனைவரும் பலனடையலாம். தெய்வக்குற்றம் மற்றும் சாபம் நீங்குவதற்கான பரிகாரம் தான் இது. 2. தொடர்ந்து ஆறு வாரங்கள் இதை செய்து முடித்த பின்னர் அஸ்த நட்சத்திரம் வரும் நாளில் துர்க்கை சன்னதிக்கு சென்று சிகப்பு நிறத்தாலான பட்டு துணி ஒன்றை அம்மனுக்கு சாற்றி, சிகப்பு தாமரை பூவினை துர்க்கை அம்மனின் மலர் பாதங்களில் வைத்து 27 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை மாலையாக கோர்த்து அந்த மாலையை அம்மனுக்கு சாற்றி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்த பின் தங்களால் முடிந்த அளவிற்கு பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கலாம். அர்ச்சனை செய்த அந்த குங்குமத்தை வீட்டிற்கு கொண்டு வந்து தினமும் நெற்றியில் இட்டு வருவதன் மூலம் தடைகள் நீங்கும். விரைவில் நாம் எதிர்பார்ப்பது கைகூடி வரும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Saturday, 18 July 2020

ஒரு உன்னதமான நிகழ்வு.!!

முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி,அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.

கோவிலில் பூஜைகள் தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார்.

அவனும் அரிசியை சமைத்து அப்பனுக்கு நைவேத்யம் செய்து, அப்பனிடம், “கண்ணா! சாப்பிடு.” என்று கூறினான்.

கண்ணன் அசையவில்லை. உடனே அவன், வெறும் சாதத்தை எவ்வாறு கண்ணன் சாப்பிடுவான், என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான்.

தயிரை சாதத்தில் கலக்கி, உப்பு மாங்காயை வைத்தான். அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை.

“சாப்பிடு கண்ணா!” என்று கெஞ்சினான்.
சாதம் அப்படியே இருந்தது.

“என்னுடைய அப்பா வந்தால், உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார், சாப்பிடு!” என்று சொல்லிக் கெஞ்சி அழுதான்.

குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாத கண்ணன், காட்சி தந்தான்.
அன்னத்தை உண்டான்.

குழந்தையும் சந்தோஷமாக, காலித் தட்டுடன் வெளியே வந்தான். பொதுவாக, நைவேத்யத்தை கோவிலுள்ள பிஷாரடிக்குக் கொடுப்பது வழக்கம். காலித் தட்டுடன் வெளியே வந்த அவனைக் கண்ட அவருக்கு மிகுந்த கோபம் வந்தது.

“சாதம் எங்கே?” என்று கேட்டார்.
குழந்தையும், “கண்ணன் சாப்பிட்டு விட்டான்” என்று சொன்னான்.

நம்பூதிரி வந்ததும், பிஷாரடி, “நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டதாகச் சொல்கிறான்” என்று சொன்னார்.

நம்பூதிரி, “நைவேத்தியத்தை என்ன செய்தாய்?”என்றுகேட்டார். மறுபடியும் குழந்தை, “கண்ணன் நேரிலேயே வந்து சாப்பிட்டுவிட்டான்” என்று சொன்னான்.

அப்போது அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தயிரும், மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள்.

நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், “தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல்,
கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா? உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டு விட்டான் என்று பொய் சொல்கிறாயா?” என்று அடித்தார்.

குழந்தை இடத்தைவிட்டு நகரவில்லை.
குழந்தையை அடிப்பதைக் கண்ணனால் பொறுக்க முடியவில்லை.

நம்பூதிரி மீண்டும் அடிக்கக் கையை ஓங்கியபோது, “நான்தான் உண்டேன், குழந்தை குற்றமற்றவன்.” என்று சன்னிதியிலிருந்து அசரீரி ஒலித்தது. கூடியிருந்த அனைவரும் அதிசயித்தனர்.

நம்பூதிரி, கண்களில் நீர் வழிய, “என் மகனுக்குக் காட்சி தந்து, அவன் தந்த உணவையும் உண்டாயே!! என்னே உன் கருணை! என் மகன் பாக்யசாலி!” என்று கூறித் தன் மகனை வாரி அணைத்துக் கொண்டார்.

கிருஷ்ணா முகுந்தா முராரே….
குருவாயூரப்பனே உன் திருவடிகளே சரணம்…

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

கருடனிடம் வரம் வாங்கிய திருமால்.!!

பறவைகளில் நான் பட்சி ராஜனான கருடனாயிருக்கிறேன் என் கீதையில் கூறியுள்ளான் கண்ணன். நித்யசூரிகளில் கருடன் இரண்டாமிடத்தை வகிக்கிறார்.

பொய்கையாழ்வார் கருடனை போற்றுகையில் அனந்தனாகிய ஆதிசேஷனைப் போலவே கருடனும் திருமாலுக்குப் பலவித சேவைகளைச் செய்கிறார் என்று குறிப்பிடுகிறார்.

அனந்தன், கருடன், விஸ்வஷ்சேனர் என்ற வரிசையில் அனந்தனான ஆதிசேஷன் இலக்குவனாகவும், பின்னர் ராமானுஜராகவும், பின்பு பெரிய ஜீயர் மணவாள மாமுனிகளாகவும் அவதரித்தார்.
விஸ்வஷ்சேனர் நம்மாழ்வாராக அவதரித்தார் என்பதை அறிவோம்.

கருட பகவானோ வேத ஸ்வரூபி, ஆளவந்தார் கருடனை வேதாத்மா விஹகேஸ்வரர் என்று போற்றுகிறார். இவரை பெரிய திருவடி என்றும் போற்றுவர்.

ஸ்வாமி தேசிகனுக்கு அவருடைய ஆசார்யர் கருட மந்திரத்தை தான் உபதேசித்தார். அதை ஜெபித்ததால் அவருக்கு ஹயவதனின் அருள் கிடைத்தது.

கருடனை கருத்மான் என்றும் அழைப்பார்கள். தீரன் என்பது அதன் பொருளாகும். யாருக்கும் அஞ்சாதவர்.

இவர் ஒரு சமயம் தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை எடுத்து வந்தாராம். அவரை தேவர்களாலும், ஏன் தேவேந்திரனாலும் தடுக்க முடியவில்லை.

தன் இறகுகளை வீசி இந்திரனையே மயக்கமடையச் செய்தார். இதைக்கண்ட தேவர்கள் கருடனை ஸுபர்ணன் என்று புகழ்ந்தார்கள்.

இவரின் வீரத்தில் மகிழ்ச்சி கொண்ட திருமாலே, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டாராம். அவர் பரமனைப் பார்த்து, நானே உமக்கு வரம் தருகிறேன், என்ன வரம் வேண்டும்? என்று திருப்பிக் கேட்டாராம்.

புன்னகைத்த திருமால், நான் எப்போதும் உன் தோளுக்கு மேல் இருக்கவேண்டும் என்று கேட்டாராம். அவ்வாறே ஆகட்டும் என்றார் கருடன்.

பிறகு திருமால் கருடனிடம் நீ வரம் ஏதும் கேட்கவில்லையே? என்று வினவ, நான் உமது தலைக்கு மேல் இருக்க வேண்டும் என்று கேட்க, திருமாலும் அருளினார்.

அதனால் தான் நாரணன் அவர் தோள் மீதேறி தம் வாகனமாகக் கொண்டார். கருடனைத் தன் கொடியாக ஏற்று, தன் தலைக்கு மேல் பறக்கும் கொடியில் இருக்கச் செய்தார்.

இதுதான் நாம் திருக்கோவில்களில் பார்க்கும் கொடிமரத்தின் தத்துவம். கொடிமரத்தின்கீழ் கருடன் சன்னிதியும் அமைந்திருக்கும்.

கருட பகவானைத் துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல், சர்ப்ப தோஷ நிவர்த்தி உள்ளிட்ட அனைத்து நலன்களும் கிட்டும்.

கருட காயத்ரி : 
( மரணபயத்தை போக்கிட )

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பஷாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
ஸ்வர்ண பஷாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்.!!

சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது கண்திருஷ்டி

நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும்.

மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகுமாம். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும். இதற்கு பரிகாரம் கடல் தண்ணீர்
கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.

எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள சப்த சக்கரங்களை பலப்படுத்தும்..

அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும். அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.

கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும்.

ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது என்றார் ஸ்ரீராம பிரபு.

இனிமேலாவது கண்திருஷ்டிக்கு பரிகாரம் தேடாமல் மாதம் ஒரு தடவை கடலில் குளிக்க வேண்டும் என்ற சங்கல்பத்தை அனைவரும் எடுக்க வேண்டும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தீராத நோயும், பகையும், கடனும் தீர முருகனுக்கு விரதம் இருங்க.!!

முருகனை விரதம் இருந்து வழிபடுவோருக்கு அல்லல்கள் தீரும். துன்பங்களும் துயரங்களும் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பகை விலகி பாசம் பெருகும்.

செவ்வாய் அன்று முருகனுக்கு விரதம் இருந்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். எதிரிகள் பயம் அகலும், தீராத நோய்கள் தீரும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பகை விலகி பாசம் பெருகும். இன்று 108 முறை ஜெபிக்கவும் முருகன் மந்திரம் :

*ஓம் ஸ்ரீம் க்லீம் சரவணபவாய நமஹ*

செவ்வாய் தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.

அசுரர்களை அழிக்க சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். முருகனை விரதம் இருந்து வழிபடுவோருக்கு அல்லல்கள் தீரும். துன்பங்களும் துயரங்களும் நீங்கும். பிள்ளை வரத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கிய கிடைக்கும் குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை.

முருகனை நினைத்து வீட்டிலேயே விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும். விநாயகரை வழிபட்டு முருகனின் படத்தை பூஜை அறையில் வைத்து கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

ஆண்டாளால் பெருமை பெற்ற ஆடி பூரம்.!!

வைணவ ஆசார்யர் ஸ்ரீமணவாள மாமுனிகள் தமது உபதேசரத்ன மாலையில் ஆடிப்பூரத்தின் சிறப்பை இவ்வாறு விவரிக்கிறார். “பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் பிறந்த ஆடி மாதம், பூர நட்சத்திரத்தின் சிறப்பு வேறொரு தினத்துக்கு உண்டோ? ஏ மனமே உணர்ந்துபார். ஆண்டாளுக்கு ஒப்பு ஆண்டாளேதான். பூரத்துக்கு ஒப்பு பூர நாள்தான்’ என்று ஒப்புமை காண முடியாத சிறப்பு நாள் என்கிறார்.

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த

திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்கு

உண்டோ மனமே உணர்ந்துபார் ஆண்டாளுக்கு

உண்டாகில் ஒப்புஇதற்கும் உண்டு (23)

– வைணவ ஆசார்யர் ஸ்ரீமணவாள மாமுனிகள் தமது உபதேசரத்ன மாலையில் ஆடிப்பூரத்தின் சிறப்பை இவ்வாறு விவரிக்கிறார். “பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் பிறந்த ஆடி மாதம், பூர நட்சத்திரத்தின் சிறப்பு வேறொரு தினத்துக்கு உண்டோ? ஏ மனமே உணர்ந்துபார். ஆண்டாளுக்கு ஒப்பு ஆண்டாளேதான். பூரத்துக்கு ஒப்பு பூர நாள்தான்’ என்று ஒப்புமை காண முடியாத சிறப்பு நாள் என்கிறார்.

சுவாமி தேசிகனும்,

வேயர்புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம்

மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்

தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்

துழாய்மாலை முடிசூடிக் கொடுத்த மாதே

– என்று சிறப்பிக்கிறார்.

“இன்றோ திருவாடிப்பூரம். எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள். குறையாத வாழ்வு உண்டாகும்படியாக ஸ்ரீவைகுண்டத்திலுள்ள உயர்ந்த அனுபவத்தை அளித்து பெரியாழ்வார்க்கு திருமகளாக இவ்வுலகத்தில் ஆண்டாள் அவதரித்தாள்” என்று, வைகுந்த லட்சணத்தை பூவுலகு பெறும்படியாக ஆண்டாள் அவதரித்த வைபவத்தை மாமுனிகள் விளக்குகிறார்.

“பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர்” என்பது, பெரியாழ்வாருக்கே உரிய சிறப்பு. அந்த அளவுக்கு பெருமாள் மீது பெரியாழ்வாருக்கு பரிவு அதிகம். ஆனால் அந்தப் பெருமாள் மீது பரிவு கொள்வதிலே, பெரியாழ்வாரையும் விஞ்சியவள் ஆண்டாள். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி… என்ற வகையில், இறைவன் மீது அன்பு கொள்வதில், காதலும் ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்காக ஆழ்வார்கள் நாயக நாயகி பாவத்தைக் கைக்கொண்டார்கள். பகவானை நாயகனாக்கி, தம்மை நாயகியாக எண்ணிக்கொண்டு, காதல் ரசம் வெளிப்படப் பாடினார்கள். இந்த வகையில் மற்ற ஆழ்வார்களுக்கு இல்லாத தனித் தன்மை ஆண்டாளுக்கு இருக்கிறது. மற்ற ஆழ்வார்கள் ஆண்களாக இருந்தாலும், தங்கள் மீது பெண் தன்மை ஏறியதாக எண்ணிப் பாடினார்கள். ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அப்படி இல்லை.

“ஜன்ம ஸித்த ஸ்திரீத்வம்’ என்றபடி, பிறப்பிலேயே பெண்ணாகப் பிறந்தாள். இயல்பாகவே பெண் தன்மை கொண்டிருந்தாள். பெண்ணுக்கே உரிய காதல் மனதுடன் கண்ணனை நினைந்து பாடினாள். அவ்வகையில், ஆழ்வார்கள்தன் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய், பிஞ்சாய்ப் பழுத்தாள் ஆண்டாள் என்றார் மணவாள மாமுனிகள்.

கோதா என்றால், மாலை என்பது பொருள். ஆண்டாளே சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆனாள். மாலையாகிற தமிழை பெருமானுக்குச் சூட்டி அழகு பார்த்தாள். பூமாலையும் பாமாலையும் கொண்டு தமிழ் மாலை சூட்டினாள். பெரியாழ்வாரின் குலத்துக்கு மேலும் பெருமை சேர்ப்பதற்காகவே அவதரித்தவள் ஆண்டாள். நந்தவனம் அமைத்து, மாலை கட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோயிலுடையானுக்குச் சூட்டி அழகு பார்த்தவர் பெரியாழ்வார். அவர் வழியில் அந்த மாலைகளை, தான் சூடி அழகு பார்த்து, பெருமானுக்கு சமர்ப்பித்தவள் – இந்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடி. “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்…” என்று நாச்சியார் திருமொழியில் சொன்னபடி, “மனிதர் எவருக்கும் வாழ்க்கைப்பட மாட்டேன் அந்த தெய்வத்துக்கே வாழ்க்கைப்படுவேன்” என்பது ஆண்டாளின் ஒரே குறிக்கோள். “”ஸ்ரீமந் நாராயணனே திருவரங்கநாதனாக இருக்கிறான். அவனே கண்ணனாக அவதரித்தான். அந்தக் கண்ணனுக்கே வாழ்க்கைப் படுவோம்” என்று இருந்தாள். இந்த உறுதி அவளுக்கு வரக் காரணம், பெரியாழ்வார் சொல்லிக் கொடுத்த கதைகள். பகவானின் அவதார குணங்களை, மகிமைகளை அவர் ஆண்டாளுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவனே பரதெய்வம் என்பதைப் புரிய வைத்தார். அது புரிந்தவுடன், இந்த உலகுக்கு யார் காரணமோ, எவன் படைத்துக் காப்பவனோ, எவன் நமக்காகவே காதிருக்கிறானோ, எவன் ஒருவனாலே மோட்சம் கிட்டுமோ அவனைத் தவிர வேறு எவர் மீதும் சிந்தையைச் செலுத்த மாட்டோம்… திருவரங்கனுக்கே ஆட்பட்டிருப்போம் என்று மனதிலே உறுதி கொண்டாள் ஆண்டாள்.

இப்படி ஒரு நிலையை ஆண்டாளுக்கு ஏற்படுத்தத்தானே பெருமாளும் ஆண்டாளை அவதரிக்க வைத்தார். இந்தப் பிரபந்தங்களைப் பாட வைத்தார். பகவானை விட்டுப் பிரிவு, துடிப்பு, விரக தாபம் ஆகியவை ஏற்பட, அந்த தாபத்துடன் தனக்குள் இருக்கும் தாபத்தை தீர்த்துக் கொள்ளவே நாச்சியார் திருமொழியைப் பாடினாள் ஆண்டாள்.

அந்த ஆண்டாள் பிறந்த ஆடிப் பூரத்துக்கும் திருவில்லிபுத்தூருக்கும் குறிப்பாக அந்த நந்தவனத்துக்கும் ஒரு மகிமை உண்டு. ஆடிப்பூர நாயகி ஆண்டாள் பாடிய பாசுரங்களான, வேதம் அனைத்துக்கும் வித்தாகின்ற கோதை தமிழைப் படித்தாலும் கேட்டாலும், அது நம் பாதகங்கள் தீர்க்கும்; பரமனடி காட்டும்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

கண்களை மூடிகொண்டு ஏன் இறைவனை வணங்ககூடாது.!!

சிலர் கோவிலுக்கு செல்கிறார்கள். வரிசையில் நிற்கிறார்கள். கருவறையில் மூலவரைக்கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்கிறார்கள். சூட தீபாரதனை காட்டினால் கூட தெரியாத அளவிற்கு கண்களை மூடி நின்று கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு செய்யலாமா? இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது. கோயிலில் உள்ள மூலவரைக்கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள். இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள். இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள். அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள்.

ஏனென்றால், நீங்கள் மூலவர் முன் செல்லும் போது சில சமயம் திடீரென அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம். அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்து விடலாம். எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா! உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய். நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய். உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே இறைவனை காண செல்லுங்கள்.

இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை. நம்மைப்படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும். எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்து பார்த்து தரிசியுங்கள். அழகில் மயங்குங்கள். அத்துடன் இறைவா! என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு எது தேவையோ அதைக்கொடு. எது தேவையில்லையோ அதை நீக்கிவிடு என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள். மேலும் இறைவா! நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள். பின்னர் தினசரி பூஜையின் போது, கோயிலில் தரிசித்த இறைவனின் திருவுருவத்தை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்வது தான் உண்மையான வழிபாடு ஆகும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Friday, 17 July 2020

எந்த பாவத்தையும் இந்த பாடல் போக்கும் என்கிறார் அகத்திய சித்தர்.!!

மனிதனாய் பிறந்து விட்டால் பாவம் செய்தே ஆக வேண்டுமா என்ன? பாவமே செய்யாமல் எந்த மனிதனும் வாழ்வதில்லையா? எவை எல்லாம் பாவம் என்று தெரிந்தால் தானே? அவையெல்லாம் செய்யாமல் இருக்க முடியும். நமக்கு தெரிந்த பாவங்கள் பட்டியலில் இல்லாத சில பாவங்களும் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி என்ன பாவங்கள்? என்ற ஸ்வாரஸ்யமான தகவல்களுடன் இப்பதிவை தொடரலாம் வாருங்கள். பாவம் செய்யாத மனிதனே இல்லை என்கிறார் அகத்தியர். அகத்தியாரின் அற்புத நூல்களில் ஒன்று ‘அகத்தியர் பரிபூரணம் 1200’ ஆகும். இதில் இருக்கும் பாடல்களில் பாவம் எந்த வகையில் எல்லாம் மறைமுகமாக வருகிறது என்றும், அந்த பாவங்களின் தண்டனையில் இருந்து எப்படி தப்பிப்பது என்றும் தெளிவாக கூறியுள்ளார்.



(1) காணவே யின்னமொரு சூட்சங்ககேளு, கருணையுட னுலத்தோடிருக்கும் போது, பூணவே கண்ணாரக் கண்ட பாவம், புத்தியுடன் மனதாரச் செய்த பாவம், பேணவே காதாரக் கேட்டபாவம், பெண்வதைகள் கோவதைகள் செய்தபாவம், ஊணவே பலவுயிரைக் கொன்றபாவம், ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேள!! இந்த பாடல் 677 வது பாடலாக இந்நூலில் வருகிறது. இதில் அகத்தியர் கூறுவது என்னவென்றால், ஒருவர் எந்த பாவமும் செய்யாமல் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும் கூட அவர்களுக்கு பாவம் வந்து சேருகிறது. அது ஏன்? ஏனென்றால் நீங்கள் ‘கண்ணால் கண்ட பாவமும்’ அதாவது, பிறர் செய்யும் பாவத்தை கண்ணால் காண்கிறீர்கள், ஆனால் அதை தடுக்கவில்லை எனில் உங்களுக்கும் பாவம் வந்து சேரும். அதே போல் ‘காதாரக் கேட்ட பாவம்’ அதாவது, கெட்டவர்கள் அவச்சொல் பேசுவதும், தீய சொற்கள் வீசுவதும், வஞ்சகம் பேசுவதும் உங்கள் காதால் கேட்டும் அதை கண்டு கொள்ளாமல் செல்வதால் பாவம் வந்து சேருமாம்.

மேலும் ‘மனதாரச் செய்த பாவம்’ அதாவது, உங்களின் இன்பத்திற்காக பிறரை துன்பப்படுத்துவது, பெண்களை கொடுமை செய்வது, ‘கோ’ என்றால் பசு, பசுக்களை வதைப்பது, ஓரறிவிலிருந்து ஆரறிவு வரை உள்ள எந்த உயிர்களையும் கொள்வது, உங்களின் முன்னோர்கள் செய்த பாவம் என்று பல கோடி பாவங்கள் உள்ளன என்று அப்பாடல் கூறுகிறது. இந்த பாவங்களில் இருந்து விடுபட என்ன செய்வது? இதையும் மற்றொரு பாடல் மூலம் சூட்சமமாக விளக்கியுள்ளார் அகத்திய சித்தர். (2) காரப்பா கருணைவிழி மனக்கண்ணாலே, காலறிந்து யோகமதால் அங்லங்கென்று, நேரப்பா நிலையறிந்து நிலையில்நின்று நீ, மகனே நூற்றெட்டு உருவேசெய்தால், வீரப்பா கொண்டுயிரைக் கொண்டபாவம், வெகுகோடி பாவமெல்லாம் விலகுந்தானே!!. சுத்தபத்தமாக சுத்தமான இடத்தில் கம்பளித்துணி விரித்து கொண்டு, வட மேற்கு திசையை நோக்கியபடி அமர்ந்து, நீங்கள் இடது புறத்தில் விடும் மூச்சை இழுத்து அடக்கிக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். பின்னர் ‘ஓம் அங் லங்’ என்ற மந்திரத்தை 108 முறை நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொண்டு உச்சரிக்க வேண்டும். இப்படி செய்வதால் உயிரை கொன்ற பாவம் முதல் கோடி பாவ வகைகளில் எந்த பாவமாக இருந்தாலும் அதனால் உண்டாகும் கர்ம பலன்கள் நீங்கும் என்று அகத்தியர் கூறியுள்ளார். தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறோம். இனியும் எந்த பாவமும் செய்துவிடாமல் நல்லதையே செய்து நல்ல வாழ்க்கை வாழ்வோம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

செல்வம் பெருக 18 குறிப்புகள்.!!

வீட்டில் ஏற்றும் காமா ட்சி விளக்கில் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பலவித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பணவரவு ஏற்படும்.

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.

பூஜை காலை பொழுதில் செய்யக் கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.

வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது.பணம் ஓடிவிடும்.

பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்யபலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.

வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்

முழு பாசி பருப்பை வெல்லம்கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்துவர பணத்தடைநீங்கும்.

வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேக த்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

தினசரி குளிக்கும் முன் பசுந் தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.

குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்

அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப் பெட்டியில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.

தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள்.

மகாலட்சுமிக்கு இளஞ் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசிய முண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.

வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ண மியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.

ஐப்பசி மாத வளர் பிறையில் மகா லட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

கலியுகமும் தற்போதைய சூழலும்.!!

கலியுகம் பிறந்த கதை ஹிந்துக்களின் தலையாய நூல்களில் ஒன்று ஸ்ரீமத் பாகவதம் எனும் புரான நூலில் காணபடுகிறது..

புரான நூல்களின் கருத்தின்படி மகாபாரதம் எனும் காவியம் தோன்றிய குருக்ஷேத்திரம் எனும் பூமியில் துவாபர யுகம் முடிவுற்றது, ஆனால் கலியுகம் அங்கேயே தொடங்கிவிட்டது தெரியுமா உங்களுக்கு?!, இந்த புரான கதையில் பல கிளைகள், அதில் மிக முக்கியமான கிளை கதை தான் மஹாராஜா பரீக்ஷித் மற்றும் கலிபுருஷனின் கதை..

மகாபாரத யுத்தத்தின் 9 ம் நாள் வரை ஒரு அப்பாவியும் இறக்கவில்லை, 9 ம் நாளில் தான் துவாபர யுகம் முடிந்து கலியுகம் தோன்றியது, அதன் பின்பே குருக்ஷேத்திர யுத்தத்தில் அழிவு ஆரம்பமானது இது கலியுகத்தின் முன்னோட்டமே..

கிருஷ்ணர் இருந்ததால் கலிபுருஷனால் உலகம் முழுவதும் பரவ இயலவில்லை, யுத்தத்தில் மட்டுமே கலிபுருஷனால் பரவ முடிந்தது, அபிமன்யுவின் மகனும், அர்ஜுனனின் பேரனுமான மஹாராஜா பரிஷித்தின் இறப்பில் கலியுகம் ஆரம்பமானது, மஹாராஜா பரிஷித் தன் அம்மா உத்தராவின் கருவிலேயே கொல்லபடவேண்டியவர் ஆனால் கிருஷ்ணர் உத்தராவின் கருவுக்குள் புகுந்து மஹாராஜா பரிஷித்தை காத்தார்..

யுத்தம் முடிந்து சில காலத்தின் பின்பு பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் தன் உடலை நீத்த செய்தி எட்டியது, அதனால் மணம்வருந்திய பாண்டவர்கள் ராஜியத்தை பாண்டவர்களின் ஒரே பேரனான மஹாராஜா பரிஷித்திடம் ஒப்படைத்தனர்..

மஹாராஜா பரிஷித்திர்க்கு ஒரு நாள் கலிபுருஷன் வந்திருப்பதாக செய்தி எட்டியது, உடனடியாக தன் ராஜியத்தில் உள்ள அனைத்து வீரர்களையும் தயார் செய்தார், பேராசை, ஆணவம், தீய சிந்தனைகளுடன் தன் ராஜியத்தில் கால் வைத்த கலி புருஷனை தடுத்து நிறுத்தி கைது செய்தார்..

கலிபுருஷன் மஹாராஜா பரிஷித்திடம் உரையாடினான்:

மஹாராஜா பரிஷித் அவர்களே பிரம்மா 4 யுகங்களை படைத்தார், சத்திய, திரேத, துவாபர, கலி யுகம், சத்திய யுகம் 17,28,000 வருடங்களும், திரேத யுகம் 12,96,000 வருடங்களும், துவாபர யுகம் 8,64,000 வருடங்களும் சுகமாக அனுபவித்தீர்கள், இப்போது கலி யுகம் 4,32,000 வருடங்கள் ஆட்சி செய்ய நான் வந்துள்ளேன், ஆனால் நீங்களோ என்னை ராஜியத்தை விட்டு போக சொல்கிறீர்கள் என்றான்..

பிரம்மாவின் கட்டளையை மதிக்க வேண்டும் என்று உணர்ந்த மஹாராஜா பரிஷித், கலி புருஷனிடம் மனித குலத்தை அழிவு நெருங்கும் வரை அழிக்க வேண்டாம் என்று கட்டளை இட்டார், மேலும் கலி புருஷன் இந்த யுகத்தில் 5 இடத்தில் வசிக்க தன் நாட்டில் இடம் தருவதாக வாக்களித்தார், அந்த 5 இடங்களுக்கு வரும் மனிதர்களை கலி புருஷன் அழிக்கலாம் என்று அனுமதி அளித்தார், அதே போல் கலி புருஷன் எந்த மனிதனையும் கட்டாயபடுத்தியோ, மூளை சலவை செய்தோ இந்த 5 இடங்களுக்கு வரவழிக்க கூடாது என்றும், அவர்களாக வரும் மனிதர்களை மட்டுமே உன் இஷ்டம் போல் ஆளவேண்டும் என்றும் கட்டளை இட்டார்..

மஹாராஜா பரிஷித் குறிபிட்ட 5 இடங்கள்:

விபச்சாரம் செய்யும் இடம்( ஆசையின் நுழைவாயில்): இங்கே நுழையும் எவரும் தன் மானம், மரியாதை, மனிததன்மையை இழப்பார் அதன் பிறகே நீ அவர்களை தண்டிக்க வேண்டும்..

மிருகங்கள்/மனிதன் வெட்டபடும் இடம்(மிருகதன்மையை வெளிபடுத்துமிடம்): யார் ஒருவர் இங்கே நுழைகிராரோ அவர் மனித தன்மையை இழக்கிறார், தன்னிடம் உள்ள மிருக தன்மையை வெளிபடுத்திக்கிறார் ஆகவே இவரை நீ தாராளமாக தண்டிக்கலாம் என்றார்..

சூதாடும் இடம்(தன் அழிவை தானே தேடிக்கொள்ளுமிடம்): இங்கே வரும் மனிதர் தன் வாழ்க்கையை சூதாட வருகிறார் ஆகவே இவர்களை நீ அழிப்பதில் தவறேதுமில்லை என்றார்..

குரு/முனிவர்களை அவமதிக்குமிடம்: இவர்களை நீ அழிக்கலாம் ஏனெனில் இவர்களால் தர்மம் தழைக்காது..

இதை கேட்டுக்கொண்டு இருந்த கலிபுருஷன் மஹாராஜா பரிஷித்திடம் ஒரு கேள்வி எழுப்பினார்: மஹாராஜா நீங்கள் குறிபிடும் இடங்களில் தீயவர்கள் எப்படியும் வருவார்கள் ஆனால் நல்லவர்களை நான் எப்படி அழிப்பது?, அப்படி அழித்தால்தானே என் ஆணவம் எனும் ஆயுதம் பயன்படுத்தியதாகும்?, இதை கேட்ட மஹாராஜா பரிஷித் ஒரு இடத்தை கலி புருஷன் உபயோகிக்க அனுமதித்தார் அதுவே தங்கம் இருக்கும் இடம்..

இறுதியாக கலிபுருஷனுக்கு ஒன்று விளங்கியது தான் மொத்த ராஜியத்தையும் அபகரித்து விட்டோம், ஆனால் மஹாராஜா பரிஷித் உயிருடன் இருக்கும் வரை தான் ஆளா இயலாது என்பதை புரிந்துகொண்டான், மஹாராஜா பரிஷித் கொடுத்த இடத்தை வைத்தே மஹாராஜா பரிஷித்தை அழிக்க திட்டமிட்டான், மஹாராஜா பரிஷித் அணிந்து இருந்த தங்க கீரிடத்தின் புகுந்து மஹாராஜா பரிஷித்தை கொன்றான், அதற்க்கு அவன் கூறிய காரணம் மஹாராஜா பரிஷித் முனிவரை அவமதித்துவிட்டார் என்று பொய்யுரைத்தான்..

குறிப்பு: மேல் கூறிய கதை நீங்கள் அறிந்ததாக இருக்கலாம், பலர் இதை பதிவிட்டு இருக்கலாம், நான் இதை பதிந்ததின் நோக்கம் “தங்கம்” தற்போதைய சூழல்(தொற்று பரவல்) ஏற்படுவதற்க்கு முன்பு தங்கத்தின் விலை மிக அதிகமானது யாரும் மறந்திருக்க முடியாது, அதே போல் இந்த சில வருடங்களாக தான் மனிதன் தங்கத்தின் மீது அதீத மோகம் கொண்டு அலைகிறான் என்பதையும் யாரும் மறுக்க இயலாது, மேலும் தங்கம் ஏற்றுமதி அதிகம் செய்யும் நாட்டின் பட்டியலையும் இந்த பதிவுடன் இணைத்துள்ளேன், இதில் ஒரு உண்மை வெளிபட்டது பட்டியலில் உள்ள நாடுகளில் தான் தற்போதைய தொற்று வீரியம் அதிகமாக உள்ளது, மேலும் இதில் இந்தியா தங்கம் அதிகம் வாங்கும் நாடு அதனால் தான் இந்தியாவில் இவ்வளவு தாக்கம், மேலும் தங்க சுரங்கம் அதிகம் கொண்ட நாடுகளில் “சீனா” 1 ம் இடத்தை வகிக்கிறது, தொற்று சீனாவில் இருந்தே பரவியதாக கூறபடுகிறது இங்கே கவனிக்க வேண்டியது, தங்க சுரங்கம் அதிகம் கொண்ட நாடுகள் அனைத்திலும் தொற்றின் தாக்கம் அதிகமுள்ளதை கவனிக்க வேண்டும்(பட்டியல் இணைத்துள்ளேன்), மேலும் இப்போதும் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயரும் என்று பல வல்லுனர்கள் கருத்துறைத்துள்ளனர், இதில் இருந்து என்ன தெரிகிறது நமது புராணங்கள் மெய் என்பது நிரூபணமாகிறது, சர்வம் கிருஷ்ணார்ப்பணம்…

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴