விரத நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடியவில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். உங்களுக்குத்தான் இது..
முக்கியமான விரதம் வரும் நாளில்தான், ஒரு சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து பாடாய்படுத்தும். அதனால் அதுபோன்ற நல்ல நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடியவில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். உங்களுக்குத்தான் இது..
‘சிவசிவ’, ‘ஓம் முருகா’, ‘ஓம் சக்தி’ ‘விநாயக நமஹ’, ‘ஓம் நமோ நாராயணாய’ என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ‘ப்ராம்ஹ ஸ்நானம்’ என்பார்கள்.
உடலை ஈரத் துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை ‘காபில ஸ்நானம்’ என்று சொல்வார்கள்.
உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டாலும், குளித்ததற்கு சமமான பலன் கிடைக்கும். இதற்கு ‘ஆக்நேய ஸ்நானம்’ என குறிப்பிடுவர்.
உங்கள் வீட்டில், சுத்தமாக பராமரிக்கப்படும் பசு தொழுவம் இருந்து, அங்கே பசுவின் குளம்படிபட்ட மண் இருந்தால் அதை எடுத்து உடலில் பூசிக் கொள்ளலாம். இதுவும் உடல் சுத்தி பலனைக் கொடுக்கும். இதற்கு ‘வாயவ்ய ஸ்நானம்’ என்று பெயர்.
விரதநாளில் நமக்கு அதிர்ஷ்டம் இருந்து, வெயில் அடிக்கும்போதே பெய்யும் மழையில் உடலை லேசாக நனைக்கலாம். இதை ‘திவ்ய ஸ்நானம்’ என்பர்.
இதில் எது சாத்தியமோ, அதை விரத நாட்களில் குளிக்க முடியாத நிலை ஏற்படும் போது, கடைப்பிடிக்கலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment