Sunday, 12 May 2019

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என ஏன் போற்றப்படுகிறது தெரியுமா?

கோயில் வாசலில் அமைக்கப்படும் கோபுரமே மற்ற கோபுரங்களை விட உயரமாக இருக்கும்.


இதற்கு ராஜகோபுரம் என்று பெயர்.நெடுந்தொலைவிலிருந்து பார்த்தாலே இதுகம்பீரமாகத் தெரியும். இதை ஒரு லிங்கமாகஎண்ணி வணங்குவதும் உண்டு. இதனைஸ்தூல லிங்கம் என்பது ஐதீகம். இதையும்தெய்வ உருவமாக எண்ணி வணங்குவது நம்வழக்கம். 'கோபுர தரிசனம் பாப விமோசனம்'என்பது பழமொழி. 

கோபுரத்தில் தேவகணஙகள், தெய்வஉருவங்கள், பறவைகள், விலங்குகள்,புராண, இதிகாசக்காட்சிகள், மனிதர்கள்,தேவியர்கள், மெய்யடியார்கள் எனப்பலவகை சிற்பங்கள் இருக்கும். உலகில்பிரபஞ்ச அமைப்பில் எல்லாவற்றுக்கும்இடமுண்டு.சிற்றுயிர்கள், பேருயிர்கள்,விலங்குகள், மனிதர்கள், தேவர்கள்எல்லோரும் பிரபஞ்சத்தில் உள்ளனர்.அதிலும் இது உண்டு இது எல்லை என்றபாகுபாடே கிடையாது என்பதை அவைவிளக்குகிறது. 
ராஜகோபுரத்தின் மேல் நிலைகள்பொதுவாக ஒற்றைப்படை எண்ணில்அமைந்திருக்கும்.அவை மூன்று, ஐந்து, ஏழு,ஒன்பது, பதினொன்றுஎன்பனவாகயிருக்கும். மூன்று நிலைகள் -ஜாக்கிரத், ஸ்வப்பன, சுஷுப்திஎன்பவற்றைக் குறிக்கும். ஐந்து நிலைகள் -ஐம்பொறிகளைக் குறிக்கும்.ஏழு நிலைகள் -ஐம்பொறிகளோடு மனம், புத்தி எனஇரண்டும் சேரும். ஒன்பது நிலைகள் - அந்தஏழினொடு சித்தம், அங்காரம் என இரண்டும்சேரும். 
பஞ்சேந்திரியங்களைக் கொண்டும் மனம்,புத்தி முதலியவைகளைக் கொண்டும்புறவுலகை அறிகிறோம். புறவுலகை அறிகிறசெயலை அப்படியே நிறுத்திவிட்டு,மனைத்துணையாகக் கொண்டுபரம்பொருளிடத்துப் பயணம் போகவேண்டும் என்கிற கோட்பாட்டையேராஜகோபுர வாசல் பிரவேசம் நமக்குஉணர்த்துகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment